ஹாலிவுட் ஹீரோயின் ரேஞ்சுக்கு போட்டோ சூட் நடத்திய நயன்தாரா! | விஜய்யின் கடைசி படத்தில் இணையும் சமந்தா- கீர்த்தி சுரேஷ்! | ராணுவ வீரர் முகுந்த் வரதராஜனின் நினைவிடத்தில் சல்யூட் அடித்து மரியாதை செலுத்திய சிவகார்த்திகேயன்! | சலார் 2ம் பாகத்தில் கியாரா அத்வானி? | ரீ ரிலீஸ் : அஜித் பிறந்தநாளில் மங்காத்தாவா... பில்லாவா... | அமிதாப் பச்சன், ஏ.ஆர்.ரஹ்மானுக்கு லதா மங்கேஷ்கர் விருது வழங்கி கவுரவிப்பு | மீண்டும் இரண்டு வேடத்தில் நடிக்கும் அருண் விஜய் | பிளாஷ்பேக் : உச்சத்தில் இருந்துவிட்டு மியூசிக் டீச்சரான இசை அமைப்பாளர் | மஞ்சும்மேல் பாய்ஸ் அளவுக்கு பில்டப் கொடுத்து சூடு போட்டுக்கொண்ட தயாரிப்பாளர் | 14 வருடங்களுக்குப் பிறகு அக்ஷய் குமாரை இயக்கும் பிரியதர்ஷன் |
தெலுங்கில் முன்னணி இளம் நடிகராக விளங்கும் அல்லு அர்ஜூன், கடைசியாக நடித்த நா பேரு சூர்யா படம் பெரிய வரவேற்பை பெறவில்லை. இதனால் தனது அடுத்த படத்தை தேர்வு செய்வது குறித்து குழப்பத்திலேயே இருந்து வந்தார். ஏற்கனவே இயக்குனர் விக்ரம் கே குமார் சொன்ன கதை அவருக்கு பிடித்துப்போய் ஓகே சொல்லியிருந்தாலும் அதில் எந்த அளவுக்கு வெற்றிக்கான சதவீதம் இருக்கும் என்கிற சந்தேகமும் அல்லு அர்ஜூனிடம் இருக்கிறதாம்.
தற்போதைக்கு ஒரு கமர்ஷியல் இயக்குனரின் படம் ஒன்றில் நடித்து ஒரு ஹிட் கொடுத்த பின்னால், விக்ரம் கே குமார் படத்தில் நடிக்க முடிவு செய்துள்ளாராம் அல்லு அர்ஜூன். அதற்காக தனது அடுத்த படத்திற்கு இயக்குனர் த்ரிவிக்ரமைத்தான் அவர் டிக் அடித்து உள்ளாராம். தற்போது ஜூனியர் என்.டி.ஆர் படத்தை இயக்கி வரும் த்ரிவிக்ரம் அந்தப்படத்தை முடிக்கும் தறுவாயில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.