திரைப்படத் தயாரிப்பாளர் ஏவிஎம் சரவணன் காலமானார் | சனாதன தர்மம் இளைஞர்களிடம் போய் சேரணும் : சென்னையில் நடிகர் பாலகிருஷ்ணா பேச்சு | ஜெயிலர் 2 படப்பிடிப்பில் இணைந்த மோகன்லால் | கல்கி 2898 ஏடி 2 படம் : தீபிகாவிற்கு பதில் பிரியங்கா சோப்ரா | மீண்டும் சுதா இயக்கத்தில் நடிக்கும் சிவகார்த்திகேயன் | ஐஸ்வர்யா ராஜேஷ் நடிக்கும் புதிய படம் ஓ சுகுமாரி | குட் பேட் அக்லி... இளையராஜா பாடல் விவகாரம் : மனு தள்ளுபடி | நடிகர் திலீப்பின் ராசி... தர்ஷனுக்கும் கை கொடுக்குமா? டிசம்பர் 11ல் தெரியும் | மோகன்லாலை மீண்டும் இயக்கும் தொடரும் பட இயக்குனர் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது | ஜெயிலர் 2விலும் தொடர்கிறார் விநாயகன் |

தெலுங்கில் முன்னணி இளம் நடிகராக விளங்கும் அல்லு அர்ஜூன், கடைசியாக நடித்த நா பேரு சூர்யா படம் பெரிய வரவேற்பை பெறவில்லை. இதனால் தனது அடுத்த படத்தை தேர்வு செய்வது குறித்து குழப்பத்திலேயே இருந்து வந்தார். ஏற்கனவே இயக்குனர் விக்ரம் கே குமார் சொன்ன கதை அவருக்கு பிடித்துப்போய் ஓகே சொல்லியிருந்தாலும் அதில் எந்த அளவுக்கு வெற்றிக்கான சதவீதம் இருக்கும் என்கிற சந்தேகமும் அல்லு அர்ஜூனிடம் இருக்கிறதாம்.
தற்போதைக்கு ஒரு கமர்ஷியல் இயக்குனரின் படம் ஒன்றில் நடித்து ஒரு ஹிட் கொடுத்த பின்னால், விக்ரம் கே குமார் படத்தில் நடிக்க முடிவு செய்துள்ளாராம் அல்லு அர்ஜூன். அதற்காக தனது அடுத்த படத்திற்கு இயக்குனர் த்ரிவிக்ரமைத்தான் அவர் டிக் அடித்து உள்ளாராம். தற்போது ஜூனியர் என்.டி.ஆர் படத்தை இயக்கி வரும் த்ரிவிக்ரம் அந்தப்படத்தை முடிக்கும் தறுவாயில் இருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.