மதராஸி ‛கம்பேக்' கொடுக்கும் படமாக இருக்கும் என்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ் | 'ஏஸ்' தோல்வியிலிருந்து ஏறி வந்த விஜய் சேதுபதி | ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்த மாதம்பட்டி ரங்கராஜ் இரண்டாவது திருமணம் | வாடகை வீட்டில் வசிப்பது ஏன் ? பாலிவுட் நடிகர் அனுபம் கெர் ஆச்சரிய விளக்கம் | அஜித்தை வைத்து ஆக்ஷன் படம் இயக்க லோகேஷ் கனகராஜ் ஆசை | ராஷ்மிகாவின் மைசா படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது | பிளாஷ்பேக் : வரிசை கட்டிவந்த யுத்த பிரச்சாரத் திரைப்படங்கள் | அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிப்பதை உறுதி செய்த லோகேஷ் கனகராஜ் | வெற்றிமாறன், சிம்பு படத்தின் புதிய அப்டேட் | ஆகஸ்ட் 1ல் பல படங்கள் போட்டி.. |
திரைப்பட நட்சத்திரங்கள் தங்களின் சமூக அந்தஸ்தை உயர்த்தி காட்டுவதற்காக விலை உயர்ந்த கார்கள், வீடுகளை வாங்குவது வழக்கம். அந்த வகையில் இதுவரை எந்த நடிகர், நடிகையும் செய்திராத அளவிற்கு பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூரும், அவரது மனைவியும் நடிகையுமான ஆலியா பட்டும் இணைந்து 250 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மும்பையின் மைய பகுதியில் 6 மாடி வீடு ஒன்றை கட்டி உள்ளனர்.
கடந்த சில வருடங்களாக இந்த வீட்டின் கட்டுமான பணிகள் நடந்து வந்த நிலையில், இப்போது வீடு தயார் நிலைக்கு வந்திருக்கிறது. இந்த பிரமாண்ட வீட்டில் விரைவில் ரன்பீர் கபூர் தனது குடும்பத்துடன் குடியேறுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ரன்பீர் கபூர் வீடு கட்டி இருக்கும் இடம், 1980களில் அவரது அப்பா ரிஷி கபூருக்கு, தாத்தா ராஜ் கபூர் குடும்ப சொத்தாக இருந்தது. பின்னர் கபூர் குடும்ப வாரிசு என்ற அடிப்படையில் ரன்பீர் கபூருக்கு கிடைத்த இடத்தில் இந்த வீட்டை கட்டி உள்ளனர். மும்பையில் அம்பானியின் வீட்டிற்கு அடுத்த மதிப்பு மிக்க வீடாக இது கருதப்படுகிறது.