கமல்ஹாசனை பார்ப்பது போல் இருக்கிறது; பிரேமலு நடிகருக்கு பிரியதர்ஷன் பாராட்டு | டைட்டிலில் என் பெயரையும் சேர்த்து இருக்கலாம் ; நெட்பிளிக்ஸை கிண்டலடித்த ‛ஆவேசம்' பட இசையமைப்பாளர் | ‛ஹிருதயபூர்வம்' படத்தில் கெஸ்ட் ரோலில் மீரா ஜாஸ்மின் ; சென்சார் மூலம் உடைந்த ரகசியம் | வேண்டுமென்றே போலீஸ் ஜீப்பில் ஏற்றினார்கள் ; சுரேஷ்கோபி மகன் திடுக் தகவல் | மலையாளத்தில் சாண்டி நடிகராக அறிமுகமாகும் முதல் படம் ஆக.,28ல் ரிலீஸ் | தயாரிப்பாளர் மட்டுமல்ல, இயக்குனரும் ஆனார் ரவிமோகன் | கஞ்சா கடத்தும் காட்டீஸ் : சீலாவதியாக நடிக்கும் அனுஷ்கா | அடுத்த படம் எது? அல்லாடும் டாப் ஹீரோக்கள் | டைட்டில் இல்லாமலேயே முடிந்த விமல் படம் | யானை நடிக்கும் புதிய படம் ‛அழகர் யானை' |
கடந்த 3-ந்தேதி தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார் பாலிவுட் நடிகை ஜியாகான். பாலிவுட் சினிமாவில் பரபரப்பாக வளர்ந்து வந்த நடிகை என்பதால் இவரது திடீர் தற்கொலை மும்பை சினிமா வட்டாரத்தை பெரிய அதிர்ச்சிக்கு உள்ளாக்கியது. மேலும், இறக்கும் முன்பு ஜியாகான் எழுதி வைத்திருந்த 6 பக்க கடிதம் போலீஸ் கைக்கு கிடைத்ததால் விசாரணைகள் முடுக்கி விடப்பட்டன.
அந்த கடிதத்தில், தனது காதலர் சூரஜ் தன்னை கற்பழித்ததாக குறிப்பிட்டிருந்த ஜியாகான், தான் கர்ப்பமானதையடுத்து கட்டாயப்படுத்தி அந்த கருவை அவர் கலைத்ததாகவும் குறிப்பிட்டிருந்தார். மருத்துவ பரிசோதனையிலும் இந்த கருக்கலைப்பு உறுதி செய்யப்பட்டதால், இப்போது ஜியாகானின் காதலர் சூரஜை போலீசார் கைது செய்துள்ளனர்.
அவர் மீது தற்கொலைக்கு தூண்டிய வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன்பிறகு நடந்த விசாரணையில், ஜியாகானின் வயிற்றில் குழந்தை உருவாக நான்தான் காரணம் என்று கூறிய சூரஜ், கருவை கட்டாயப்படுத்தி தான் கலைக்க வைத்ததாகவும் ஒப்புக்கொண்டுள்ளார். அவரே குற்றத்தை ஒத்துக்கொண்டதால் அவரை நீதிமன்றத்தில் நிறுத்தி தண்டனை வாங்கிக்கொடுக்கும் பணியில் மும்பை காவல்துறை ஈடுபட்டுள்ளது.