கவனமாக எழுதப்பட்ட திரைக்கதை : நடிகை வழக்கின் தீர்ப்பு குறித்து பார்வதி கருத்து | தாதா சாஹேப் விருது பெற்ற மோகன்லாலை பேட்ரியாட் படப்பிடிப்பு தளத்தில் கவுரவித்த மம்முட்டி | நடிகர் திலீப் விடுதலை குறித்து மலையாள நடிகர் சங்கம் கருத்து | தி கேர்ள் பிரண்ட் படத்தை கட்டாயம் பாருங்கள் : ஜான்வி கபூர் | சிரஞ்சீவி, நயன்தாராவின் காதல் பாடல் வெளியானது | டிசம்பர் 12ல் ஓடிடிக்கு வரும் காந்தா | தர்மேந்திராவின் 90வது பிறந்தநாள் : ஹேமமாலினி உருக்கம் | பவுன்சர்கள் செயல் : மன்னிப்பு கேட்ட சூரி | 10 வருடங்களுக்குப் பிறகு இரண்டாம் தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பித்த சூர்யா குடும்பம் | டிசம்பர் 12ல் 'அகண்டா 2'வை வெளியிட தீவிர முயற்சி |

மலையாளத்தில் ஜீத்து ஜோசப் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் வெளியான 'திரிஷ்யம், திரிஷ்யம் 2' ஆகிய படங்கள் மிகப்பெரிய வெற்றியை பெற்றன. இந்த படங்கள் மற்ற மொழிகளிலும் ரீமேக் செய்யப்பட்டு வெற்றியை பெற்றன. அந்த வகையில் ஹிந்தியில் அஜய் தேவ்கன் நடிப்பில் இதன் இரண்டு பாகங்களும் ரீமேக் செய்யப்பட்டன. முதல் பாகத்தை விட இரண்டாம் பாகம் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.
இந்த நிலையில் இந்த படத்தின் தயாரிப்பாளர் குமார் மங்கத் பதக் என்பவர் மீது டில்லியை சேர்ந்த தொழிலதிபர் ஒருவர் போலீசில் அளித்த புகாரின்பேரில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அந்த புகாரின் படி டெல்லியை சேர்ந்த அந்த தொழிலதிபர் 'திரிஷ்யம் 2' படத்தின் சீனா, ஹாங்காங் மற்றும் தைவான் ஆகிய நாடுகளில் இந்த படத்தை வெளியிடும் உரிமையை தனக்கு தருவதாக கூறி 4.3 கோடி ரூபாய் பெற்றுக்கொண்டு அதன்படி செய்யாமல் மோசடி செய்து விட்டதாக குறிப்பிட்டு இருந்தார்.
இந்த நிலையில் படத்தின் தயாரிப்பாளர் பதக், ''இந்த புகாரின் பேரில் என் மீது விசாரணை நடத்துவது என்பது சமூகத்தில் என் மீது இருக்கும் மரியாதையை குறைக்கும் விதமாக இருக்கும்.. அதனால் இந்த வழக்கை தள்ளுபடி செய்ய வேண்டும்” என்று நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். இந்த மனுவை விசாரித்த டில்லி உயர் நீதிமன்றம், இப்போது இந்த வழக்கு ஆரம்ப கட்ட விசாரணையில் தான் இருக்கிறது. அதனால் இந்த வழக்கை தள்ளுபடி செய்ய தேவையில்லை. தொடர்ந்து விசாரணை நடக்கட்டும்'' என்று கூறி உத்தரவிட்டுள்ளார்.