இந்த வார ஓடிடியில் வரிசைக்கட்டும் க்ரைம் த்ரில்லர் படங்கள்....! | நானி படத்தில் இணைந்த பிரித்விராஜ் | ஐஸ்வர்யா ரஜினி இயக்கும் ‛டெக்ஸ்லா' : யுவன் இசை | நடிகையுடன் உறவு: விவாகரத்து கேட்டு நடிகர் விஜய் மனைவி சங்கீதா மனு | மோடி, அமித்ஷாவிடம் வாழ்த்து பெற்ற விஜய் தேவரகொண்டா, ராஷ்மிகா | சினிமாவில் அரசியல் பேசுவது தவறில்லை: சிவகார்த்திகேயன் | மலையாள இயக்குனர் டைரக்ஷனில் நடிக்கும் விக்ரம் | தேர்தல் நெருங்கும் வேளையில் முதல்வரை நேர்காணல் செய்த மோகன்லால் | ரசிகர்களை குஷிப்படுத்திய பேட்ரியாட் செகண்ட் லுக் போஸ்டர் | மோகன்லாலின் முதல் படத்தில் இணைந்து நடித்த நடிகர் காலமானார் |

கதைக்காக மட்டுமே ஹீரோக்களை தேடிப்போகும் வெகு சில இயக்குனர்களில் ஜீத்து ஜோசப்பும் ஒருவர். மோகன்லாலை வைத்து தொடர்ந்து வெற்றிப்படங்களை கொடுத்த அவர் மீண்டும் அவரை வைத்து 'நேர்' என்கிற ஹிட் படத்தை கொடுத்தபின் அவர் அடுத்ததாக மலையாள திரையுலகின் இரண்டாம் நிலை நடிகரான ஆசிப் அலியை வைத்து 'கூமன்' என்கிற படத்தை இயக்கினார். அதையடுத்து வளர்ந்து வரும் இயக்குனரும் நடிகருமான பஷில் ஜோசப்பை வைத்து 'நுனக்குழி' என்கிற படத்தை இயக்கினார். மீண்டும் முன்னணி நடிகர்களுடன் கைகோர்ப்பார் என்று பார்த்தால் அடுத்ததாக மீண்டும் ஆசிப் அலியை வைத்து தற்போது மிராஜ் (மிரட்சி) என்கிற படத்தை இயக்கி வந்தார் ஜித்து ஜோசப்.
இந்த படத்தில் கதாநாயகியாக அபர்ணா பாலமுரளி நடித்துள்ளார். சண்டே ஹாலிடே, பி டெக், சமீபத்தில் வெளியான கிஷ்கிந்தா காண்டம் படங்களைத் தொடர்ந்து நான்காவது முறையாக ஆசிப் அலியுடன் ஜோடியாக நடித்திருக்கிறார் அபர்ணா பாலமுரளி. ஜன.,20ம் தேதி படப்பிடிப்பு துவங்கிய நிலையில் தற்போது 48 நாட்களில் இந்த படத்தின் படப்பிடிப்பை நடத்தி முடித்துள்ளார் ஜீத்து ஜோசப். அடுத்ததாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டபடி 'த்ரிஷ்யம்' படத்தில் மூன்றாம் பாகத்தின் வேலைகளை ஜீத்து ஜோசப் துவங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.




