ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி | குருநாதருக்கு நன்றி செலுத்தும் மிஷ்கின் | அடுத்த ஆண்டாவது ஒலிக்குமா என் இனிய தமிழ் மக்களே | கூலி படத்துக்கு விமர்சனம் : மவுனம் கலைத்த லோகேஷ் கனகராஜ் | தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் | நாய்களை விலைக்கு வாங்காதீர்கள்.. தத்தெடுங்கள் ; ஷாலினி பாண்டே கோரிக்கை |

மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காலத்தில் பிறப்பிக்கப்பட்ட அவசரநிலை பிரகடனத்தை மையமாக வைத்து ‛எமர்ஜென்சி' என்ற படத்தை இயக்கி, அவரது வேடத்தில் நடித்துள்ளார் கங்கனா. கடந்தாண்டே வெளியாக வேண்டிய படம். ஆனால் சென்சார் உள்ளிட்ட பல தடைகளை கடந்து இப்படம் ஜன., 17ல் வெளியானது. அதேசமயம் பஞ்சாப் மாநிலத்தில் இப்படத்திற்கு எழுந்த எதிர்ப்பால் பல இடங்களில் படம் வெளியாகவில்லை, தடை விதிக்கப்பட்டுள்ளது. சீக்கியர்களை தவறாக சித்தரித்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
பஞ்சாபில் இப்படத்திற்கு தடை விதிக்கப்பட்டது பற்றி கங்கனா வெளியிட்ட பதிவில், ‛‛இது சினிமா கலைஞர்களை துன்புறுத்தும் செயல். எல்லா மதத்தினர் மீதும் எனக்கு மரியாதை உள்ளது. நான் சண்டிகரில் வளர்ந்ததால் சீக்கிய மதத்தை அருகில் இருந்து கவனித்து, பின்பற்றி வந்துள்ளேன். எனது நற்பெயர் மற்றும் எனது படத்தை களங்கப்படுத்த நடக்கும் பொய் பிரச்சாரம்'' என குறிப்பிட்டுள்ளார்.