ரிக்ஷாக்காரன், ஆட்டோகிராப், லவ் டுடே - ஞாயிறு திரைப்படங்கள் | 100 நாளுக்கு பின்தான் இனி ஓ.டி.டி.யில் சினிமா; தியேட்டர்கள் அதிபர்கள் சங்கம் அதிரடி | ரேஸில் கார் பழுது : அஜித்தின் பாசிட்டிவ் ரிப்ளே...! | 48 மணிநேரம் தூக்கமில்லை : ஷாலினி பாண்டே | 16 வயதுக்கு கீழ் உள்ளவர்களுக்கு தடை செய்ய வேண்டும் : சோனு சூட் | ஆளுமை உரிமை கேட்டு பவன் கல்யாண் வழக்கு | விவாகரத்து வதந்தி : கடும் கோபத்தை வெளிப்படுத்திய அபிஷேக் பச்சன் | சூர்யாவின் கருப்பு ரிலீஸ் மீண்டும் தள்ளிப் போகிறதா? | ரெட்ட தல படத்தின் டார்க் தீம் பாடல் வெளியானது | சோசியல் மீடியாவில் போட்ட பதிவால் ட்ரோலில் சிக்கிய தமன் |

மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காலத்தில் பிறப்பிக்கப்பட்ட அவசரநிலை பிரகடனத்தை மையமாக வைத்து ‛எமர்ஜென்சி' என்ற படத்தை இயக்கி, அவரது வேடத்தில் நடித்துள்ளார் கங்கனா. கடந்தாண்டே வெளியாக வேண்டிய படம். ஆனால் சென்சார் உள்ளிட்ட பல தடைகளை கடந்து இப்படம் ஜன., 17ல் வெளியானது. அதேசமயம் பஞ்சாப் மாநிலத்தில் இப்படத்திற்கு எழுந்த எதிர்ப்பால் பல இடங்களில் படம் வெளியாகவில்லை, தடை விதிக்கப்பட்டுள்ளது. சீக்கியர்களை தவறாக சித்தரித்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
பஞ்சாபில் இப்படத்திற்கு தடை விதிக்கப்பட்டது பற்றி கங்கனா வெளியிட்ட பதிவில், ‛‛இது சினிமா கலைஞர்களை துன்புறுத்தும் செயல். எல்லா மதத்தினர் மீதும் எனக்கு மரியாதை உள்ளது. நான் சண்டிகரில் வளர்ந்ததால் சீக்கிய மதத்தை அருகில் இருந்து கவனித்து, பின்பற்றி வந்துள்ளேன். எனது நற்பெயர் மற்றும் எனது படத்தை களங்கப்படுத்த நடக்கும் பொய் பிரச்சாரம்'' என குறிப்பிட்டுள்ளார்.