போலீஸாக நடிக்கும் கவுதம் ராம் கார்த்திக் | கண்ணப்பா படத்திற்கு அடித்த ஜாக்பாட் | அஜித் படத்தை தயாரிக்கும் அஜித் ரசிகர் | டேட்டிங் ஆப் சிக்கல்களை பேசவரும் 'நீ பாரெவர்' | மலையாள இயக்குனர் மீது பாலியல் புகார்: நடிகை கைது | புராணப்படத்தில் நடிக்கும் சமுத்திரகனி | 'ஹரிஹர வீர மல்லு': அவுரங்கசீப் கேரக்டரை மாற்றிய இயக்குனர் | பிளாஷ்பேக்: 3டி படத்தில் நடிக்க மறுத்த ரஜினிகாந்த் | பிளாஷ்பேக்: பெரும் தோல்வி அடைந்த பிரம்மாண்ட படம் | 'கேம் சேஞ்ஜர்' கமெண்ட்: மன்னிப்பு கேட்ட தயாரிப்பாளர் |
மறைந்த முன்னாள் பிரதமர் இந்திரா காலத்தில் பிறப்பிக்கப்பட்ட அவசரநிலை பிரகடனத்தை மையமாக வைத்து ‛எமர்ஜென்சி' என்ற படத்தை இயக்கி, அவரது வேடத்தில் நடித்துள்ளார் கங்கனா. கடந்தாண்டே வெளியாக வேண்டிய படம். ஆனால் சென்சார் உள்ளிட்ட பல தடைகளை கடந்து இப்படம் ஜன., 17ல் வெளியானது. அதேசமயம் பஞ்சாப் மாநிலத்தில் இப்படத்திற்கு எழுந்த எதிர்ப்பால் பல இடங்களில் படம் வெளியாகவில்லை, தடை விதிக்கப்பட்டுள்ளது. சீக்கியர்களை தவறாக சித்தரித்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
பஞ்சாபில் இப்படத்திற்கு தடை விதிக்கப்பட்டது பற்றி கங்கனா வெளியிட்ட பதிவில், ‛‛இது சினிமா கலைஞர்களை துன்புறுத்தும் செயல். எல்லா மதத்தினர் மீதும் எனக்கு மரியாதை உள்ளது. நான் சண்டிகரில் வளர்ந்ததால் சீக்கிய மதத்தை அருகில் இருந்து கவனித்து, பின்பற்றி வந்துள்ளேன். எனது நற்பெயர் மற்றும் எனது படத்தை களங்கப்படுத்த நடக்கும் பொய் பிரச்சாரம்'' என குறிப்பிட்டுள்ளார்.