அஜித் பிறந்த நாளில் 'வீரம்' மறு வெளியீடு | உடல்நலக்குறைவு எதனால் ஏற்பட்டது : ஏ.ஆர்.ரஹ்மான் வெளியிட்ட தகவல் | 'மணி ஹெய்ஸ்ட்' பாதிப்பில் உருவானது கேங்கர்ஸ்: சுந்தர்.சி | பிளாஷ்பேக்: 100 படங்களுக்கு மேல் குழந்தை நட்சத்திரமாக நடித்த சுலக்ஷனா | பிளாஷ்பேக்: குருவாயூரப்பனை எழுப்பும் லீலாவின் குரல் | அஜித்திற்கு எப்போதும் நன்றிக்கடன் பட்டுள்ளேன் : ஆதிக் ரவிச்சந்திரன் | வாழ்க்கை அழகானது... வரும் வாய்ப்பை விட்டுவிடாதீர்கள் : ரெட்ரோ பட விழாவில் சூர்யா பேச்சு | குஷ்புவின் எக்ஸ் தளத்தை முடக்கிய ஹேக்கர்கள் | சம்மரில் சூடு பிடிக்கும் தமிழ் சினிமா | மண்டாடி : திறமையான கூட்டணியுடன் களமிறங்கும் சூரி |
'எமர்ஜென்சி' படம் தொடர்பாக பாலிவுட் நடிகையும், பா.ஜ., எம்.பி.யு.மான கங்கனா ரணாவத்துக்கு சண்டிகர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
பாலிவுட் நடிகை கங்கனா ‛எமர்ஜென்சி' என்ற படத்தை இயக்கி, நடித்து, தயாரித்துள்ளார். முன்னாள் பிரதமர் இந்திராவின் வாழ்க்கையை தழுவி, அவரது காலத்தில் கொண்டு வரப்பட்ட அவசரநிலை பிரகடனத்தை மையமாக வைத்து இப்படம் உருவாகி உள்ளது. செப்., 6ல் படம் ரிலீஸ் என அறிவித்திருந்தனர். ஆனால் தணிக்கையில் சிக்கல், சீக்கிய அமைப்புகளின் மிரட்டல் போன்றவற்றால் படத்தின் ரிலீஸ் தள்ளிப்போய் உள்ளது.
இந்நிலையில் நடிகர் சங்கத்தின் முன்னாள் தலைவர் வக்கீல் ரவீந்தர் சிங் பாசி என்பவர் படத்தில் சீக்கியர்களின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்த முயன்றதாக கூறி மனு தாக்கல் செய்தார். 'சீக்கியர் சமூகத்திற்கு எதிரான பல பொய்யான குற்றச்சாட்டுகள் படத்தில் இடம் பெற்றுள்ளன எனக் கூறி கங்கனா மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று கூறினார். இதையடுத்து, கங்கனாவிற்கு சண்டிகர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. வழக்கின் அடுத்தக்கட்ட விசாரணை டிசம்பர் 5ல் மீண்டும் வருகிறது.