அமெரிக்காவில் ஜாக்கி சானுடன் ஹிருத்திக் ரோஷன் சந்திப்பு | அஜித் 65வது படத்தை இயக்குவது யார்... புதிய தகவல் | பாண்டிராஜ் படத்தில் ஹரிஷ் கல்யாண்.? | மீண்டும் மோகன்லாலை இயக்கும் தருண் மூர்த்தி ; தொடரும் பட வெற்றி விழாவில் அறிவிப்பு | வி.ஜே.சித்துவின் டயங்கரம் படப்பிடிப்பு பூஜையுடன் துவங்கியது | 2025ல் வெளியான படங்களில் 7 மட்டுமே 100 கோடி வசூல் | நானிருக்க, இளையராஜா பாட்டு எதுக்கு: நிவாஸ் கே பிரசன்னா 'ஓபன் டாக்' | பாலிவுட் பிரபலங்களைக் கிண்டலடித்த 'காந்தரா சாப்டர் 1' வில்லன் | தமிழ் சினிமாவிற்கு புதிய வில்லன் | அப்பா கதாபாத்திரங்களையும் அழுத்தமாய் உருவாக்கும் மாரி செல்வராஜ் |

'எமர்ஜென்சி' படம் தொடர்பாக பாலிவுட் நடிகையும், பா.ஜ., எம்.பி.யு.மான கங்கனா ரணாவத்துக்கு சண்டிகர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
பாலிவுட் நடிகை கங்கனா ‛எமர்ஜென்சி' என்ற படத்தை இயக்கி, நடித்து, தயாரித்துள்ளார். முன்னாள் பிரதமர் இந்திராவின் வாழ்க்கையை தழுவி, அவரது காலத்தில் கொண்டு வரப்பட்ட அவசரநிலை பிரகடனத்தை மையமாக வைத்து இப்படம் உருவாகி உள்ளது. செப்., 6ல் படம் ரிலீஸ் என அறிவித்திருந்தனர். ஆனால் தணிக்கையில் சிக்கல், சீக்கிய அமைப்புகளின் மிரட்டல் போன்றவற்றால் படத்தின் ரிலீஸ் தள்ளிப்போய் உள்ளது.
இந்நிலையில் நடிகர் சங்கத்தின் முன்னாள் தலைவர் வக்கீல் ரவீந்தர் சிங் பாசி என்பவர் படத்தில் சீக்கியர்களின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்த முயன்றதாக கூறி மனு தாக்கல் செய்தார். 'சீக்கியர் சமூகத்திற்கு எதிரான பல பொய்யான குற்றச்சாட்டுகள் படத்தில் இடம் பெற்றுள்ளன எனக் கூறி கங்கனா மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று கூறினார். இதையடுத்து, கங்கனாவிற்கு சண்டிகர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. வழக்கின் அடுத்தக்கட்ட விசாரணை டிசம்பர் 5ல் மீண்டும் வருகிறது.