நான் நிஜமாகவே அதிர்ஷ்டசாலி : மாளவிகா மோகனன் மகிழ்ச்சி | முதன்முதலில் அதிகமாக ட்ரோல் செய்யப்பட்ட படம் 'அஞ்சான்': இயக்குனர் லிங்குசாமி | கீர்த்தி சுரேஷ் வைத்த அன்பான கோரிக்கையை நிராகரித்த தனுஷ் | விஜய் ஆண்டனி இசையமைத்து பாடிய பூக்கி படத்தின் முதல் பாடல் வெளியானது! | தனுஷின் தேரே இஷ்க் மெயின் படத்தின் ப்ரீ புக்கிங் எவ்வளவு? | சூர்யா 46வது படம் 2026 கோடை விடுமுறையில் திரைக்கு வருகிறதா? | பிரதீப் ரங்கநாதனை புகழும் கிர்த்தி ஷெட்டி | டிரைலர் உட்பட ஜனநாயகன் படத்தின் அடுத்தடுத்த அப்டேட் | ரவி தேஜா உடன் இணைந்த பிரியா பவானி சங்கர் | 'பிசாசு 2' படத்தில் நிர்வாணக் காட்சியில் நடித்தேனா?: ஆண்ட்ரியா விளக்கம் |

'எமர்ஜென்சி' படம் தொடர்பாக பாலிவுட் நடிகையும், பா.ஜ., எம்.பி.யு.மான கங்கனா ரணாவத்துக்கு சண்டிகர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
பாலிவுட் நடிகை கங்கனா ‛எமர்ஜென்சி' என்ற படத்தை இயக்கி, நடித்து, தயாரித்துள்ளார். முன்னாள் பிரதமர் இந்திராவின் வாழ்க்கையை தழுவி, அவரது காலத்தில் கொண்டு வரப்பட்ட அவசரநிலை பிரகடனத்தை மையமாக வைத்து இப்படம் உருவாகி உள்ளது. செப்., 6ல் படம் ரிலீஸ் என அறிவித்திருந்தனர். ஆனால் தணிக்கையில் சிக்கல், சீக்கிய அமைப்புகளின் மிரட்டல் போன்றவற்றால் படத்தின் ரிலீஸ் தள்ளிப்போய் உள்ளது.
இந்நிலையில் நடிகர் சங்கத்தின் முன்னாள் தலைவர் வக்கீல் ரவீந்தர் சிங் பாசி என்பவர் படத்தில் சீக்கியர்களின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்த முயன்றதாக கூறி மனு தாக்கல் செய்தார். 'சீக்கியர் சமூகத்திற்கு எதிரான பல பொய்யான குற்றச்சாட்டுகள் படத்தில் இடம் பெற்றுள்ளன எனக் கூறி கங்கனா மீது வழக்கு பதிவு செய்ய வேண்டும் என்று கூறினார். இதையடுத்து, கங்கனாவிற்கு சண்டிகர் நீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. வழக்கின் அடுத்தக்கட்ட விசாரணை டிசம்பர் 5ல் மீண்டும் வருகிறது.




