வேண்டுமென்றே சர்ச்சை... நீக்காவிட்டால் சட்ட நடவடிக்கை: ராஷ்மிகா எச்சரிக்கை | சிம்புவை அணுகிய சூர்யா 47 படக்குழு | பிளாஷ்பேக்: பாடலாசிரியராக, வசனகர்த்தாவாக கலையுலகின் கவனம் ஈர்த்த இயக்குநர் கே எஸ் கோபாலகிருஷ்ணன் | காமெடி கலந்த க்ரைம் த்ரில்லர் படங்கள்: இந்த வார ஓடிடி வரவுகள்...! | மகேஷ் பாபு ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட பவன் கல்யாண் பட இயக்குனர் | தள்ளிப்போகிறதா 'பேட்ரியாட்' ரிலீஸ் ? தேதி குறிப்பிடாமல் வெளியான போஸ்டர் | சாய் பல்லவி நடித்துள்ள ஏக் தின் ஹிந்தி படத்தின் டிரைலர் வெளியானது | மும்பை துப்பாக்கிச்சூடு சம்பவத்தை மையப்படுத்தி உருவாகும் படத்தில் செவிலியராக நடிக்கும் கங்கனா | என் மனைவி ஆர்த்தி இல்லை என்றால் தயாரிப்பாளராகி இருக்க மாட்டேன் : சிவகார்த்திகேயன் | ஸ்வேதா மேனன் மீதான வழக்கை தள்ளுபடி செய்த உயர்நீதிமன்றம் |

மும்பையில் பாலிவுட்டின் பிரபல நடிகர் சைப் அலிகான் வீட்டுக்குள் நள்ளிரவில் நுழைந்த கொள்ளையன் அவரை, ஆறு முறை கத்தியால் குத்தியதில் ரத்த வெள்ளத்தில் சரிந்தார். உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு அறுவை சிகிச்சை செய்யப்பட்டுள்ளது. தற்போது அவர் நலமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக சிசிடி கேமரா அடிப்படையில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் போலீசார் கிடுக்கிப்பிடி விசாரணையை மேற்கொண்டுள்ளனர்.
இந்த சம்பவம் தொடர்பாக சைப் அலிகானின் மனைவியும், நடிகையுமான கரீனா கபூர் வெளியிட்ட பதிவில், ‛‛இந்தநாள் நம்ப முடியாத அளவுக்கு சவாலாக எங்கள் குடும்பத்திற்கு இருந்திருக்கிறது. நடந்த சம்பவத்தை எங்களால் இன்னும் ஜீரணிக்க முடியவில்லை. இந்த கடினமான சூழலில் யூகங்களை தவிர்க்கும்படி பணிவுடன் கேட்டுக் கொள்கிறேன். தொடர்ச்சியாக அதுபோன்ற செய்திகள் வருகின்றன. இந்த விஷயத்தில் கவனம் செலுத்தினால் அது எங்களது பாதுகாப்பிற்காக அச்சுறுத்தலாக அமையும். இதிலிருந்து நாங்கள் வெளியே வர ஒத்துழைப்பு தரும்படி கேட்டுக்கொள்கிறேன். எங்களுக்கு துணையாக இருந்த அனைவருக்கும் நன்றி'' என தெரிவித்துள்ளார்.
தப்பிய கரீனா
இதனிடையே சம்பவம் நடந்த அன்று கரீனா கபூர் வீட்டில் இல்லை என தெரிய வந்துள்ளது. அன்றை தினம் அவரது தனது சகோதரி கரீஷ்மா கபூர், நடிகை சோனம் கபூர் ஆகியோருடன் பார்ட்டியில் இருந்ததாக தெரிகிறது. ஒருவேளை அன்று அவரும் வீட்டில் இருந்திருந்தால் இவரும் அந்த சம்பவத்தில் காயம் அடைந்திருப்பார் என சொல்கிறார்கள்.




