'தலைவன் தலைவி' : 100 கோடி வசூல் என அறிவிப்பு | விஷால் 35வது படப் பெயர் 'மகுடம்' | இந்தியாவில் 400 கோடி வசூல் கடந்த 'சாயரா' | நடிகருக்கு கடிவாளம் போட்ட கேரள மனைவி | நல்ல காதல் கதை தேடும் பிருத்வி | மிக விரைவில் 100 மில்லியனைத் தொட்ட 'மோனிகா' | பிளாஷ்பேக்: மறைந்த எம் ஜி ஆர், மறுபடியும் திரையில் மின்னிய “அவசர போலீஸ் 100” | பிரியதர்ஷன் படப்பிடிப்புக்காக கேரளாவில் முகாமிட்ட அக்ஷய் குமார் - சைப் அலிகான் | முதல் இரண்டு பாகங்களைப் போல திரிஷ்யம்-3 இருக்காது ; ஜீத்து ஜோசப் உறுதி | ஒரு மாதம் முழுவதும் விடியற்காலையில் மணிரத்னத்தை பின்தொடர்ந்தேன் ; நாகார்ஜுனா |
ராதே ஷ்யாம் படத்தை அடுத்து சலார், ஆதி புருஷ் போன்ற படங்களில் நடித்து வருகிறார் பிரபாஸ். மேலும் தன்னுடன் நடிக்கும் நடிகைகளுக்கு சுவையான மதிய உணவுகள் அனுப்பி வைப்பதை அவர் வழக்கமாக வைத்திருக்கிறார். இதை அவருடன் இணைந்து நடித்துள்ள பூஜா ஹெக்டே, ஸ்ருதிஹாசன் போன்ற நடிகைகள் உறுதிப்படுத்தியுள்ளனர்.
இந்தநிலையில் பாலிவுட் நடிகையான கரீனா கபூருக்கு பிரியாணி அனுப்பி வைத்த அவருக்கு மிகப்பெரிய சர்ப்ரைஸ் கொடுத்துள்ளார் பிரபாஸ். அதையடுத்து, பாகுபலி நீங்கள் அனுப்பிய சிறந்த உணவுக்கு நன்றி என்று தெரிவித்துள்ள கரீனா கபூர், பிரபாஸ் அனுப்பிய உணவை படமெடுத்து அதில் நன்றி தெரிவித்துள்ளார். கரீனா கபூரின் கணவரான சைப் அலிகான் தற்போது பிரபாசுடன் இணைந்து ஆதிபுருஷ் படத்தில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.