விஜயுடன் இணைய தயார்: ‛புலி' பட தயாரிப்பாளர் அறிவிப்பு | உண்மை சம்பவம் பின்னணியில் உருவான ‛ரோஜா மல்லி கனகாம்பரம்' | ‛போலீஸ் ஸ்டேஷன் மெயின் பூத்': ரம்யா கிருஷ்ணனின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது! | ராஷ்மிகாவின் ‛மைசா' படப்பிடிப்பு கேரளா அதிரப்பள்ளி காட்டுப் பகுதியில் தொடங்கியது! | அஜித் 64வது படம் : பிளானை மாற்றிய ஆதிக் ரவிச்சந்திரன்! | தன்னுடைய பெயரில் ரசிகர் நடத்தும் ஹோட்டலுக்கு அனுமதி அளித்த சிரஞ்சீவி | பஸ் விபத்து எதிரொலி ; மீனாட்சி சவுத்ரி போஸ்டர் வெளியீட்டை தள்ளிவைத்த நாக சைதன்யா படக்குழு | சீனியர் நடிகர் மதுவை நேரில் சென்று சந்தித்த மம்முட்டி | காந்தாராவை பணத்திற்காக எடுக்கவில்லை: ரிஷப் ஷெட்டி | 2030லாவது மகாபாரதத்தை ஆரம்பிப்பீர்களா ? ராஜமவுலிக்கு மகேஷ்பாபு கேள்வி |

பாலிவுட் இளம் நடிகர் அர்ஜுன் கபூர், ஜாக்கி பக்னானி ஆகியோர் நடிப்பில் உருவாகி வரும் படம் 'மேரே ஹஸ்பண்ட் கி பீவி'. இந்த படத்தை முடாசர் ஆசிஷ்  என்பவர் இயக்கி வருகிறார். சமீபத்தில் இந்த படத்தில் இடம்பெறும் ஒரு பாடல் காட்சி மும்பையில் உள்ள இம்பீரியல் பேலசில் உள்ள ராயல் பாம்ஸ் என்கிற இடத்தில் படமாக்கப்பட்டது. இந்த பாடல் காட்சிக்காக தற்காலிக அரங்கு ஒன்று நிர்ணயிக்கப்பட்டிருந்தது. விஜய் கங்குலி இந்த பாடலுக்கான நடன காட்சிகளை இயக்கி வந்தார். அப்போது எதிர்பாராத விதமாக திடீரென மேற்கூரையின் ஒரு பகுதி சரிந்து விழுந்ததில் நடனம் ஆடிக்கொண்டிருந்த அர்ஜுன் கபூர், ஜாக்கி பக்னானி மற்றும் சில நடன கலைஞர்கள் மீது விழுந்தது.
பெரிய அளவு ஆபத்து இல்லை என்றாலும் அனைவருக்கும் சிறிய அளவிலான காயங்கள் ஏற்பட்டன. இது குறித்து தொழிலாளர் சம்மேளன தலைவர் கூறும்போது, “அந்த கட்டடம் ரொம்பவே பழமை வாய்ந்த கட்டடம். அது மட்டுமல்ல நடன காட்சிக்காக பயன்படுத்தப்பட்ட ஸ்பீக்கர்களில் அதிக அளவு ஒலி எழுப்பப்பட்டதால் அந்த அதிர்வு தாங்காமல் மேற்கூறையின் ஒரு பகுதி சரிந்து விழுந்து உள்ளது” என்று கூறியுள்ளார். 




