சர்வதேச இந்திய திரைப்பட அகாடமியில் சிறந்த இயக்குனராக மாதவன் தேர்வு | சீதை வேடத்தில் நடிக்க அசைவம் தவிர்த்தேன்: கீர்த்தி சனோன் | ஓடிடி வருகையை அன்றே அறிந்தவன் நான்: கமல்ஹாசன் பெருமை | பார்லி., புதிய கட்டடம்! வீடியோ வெளியிட்ட ஷாருக்கானுக்கு மோடி கொடுத்த பதில்! | போலி செய்தியை பரப்புபவர்கள் ஒரு நல்ல புகைப்படத்தையாவது பயன்படுத்துங்கள்! இயக்குனர் உதயநிதி | நினைத்தாலே இனிக்கும் சீரியலில் என்ட்ரியாகும் பிக்பாஸ் தாமரை செல்வி! | நான் கொஞ்சம் 'ரக்கட்': பாம்புவுடன் கொஞ்சி விளையாடும் பார்வதி! | என்.டி.ராமா ராவ் நூற்றாண்டு பிறந்தநாள் | நடிகர் கமல்ஹாசனுக்கு ‛வாழ்நாள் சாதனையாளர்' விருது : ஏ.ஆர்.ரஹ்மான் வழங்கினார் | அஞ்சலியின் 50வது படம் 'ஈகை': பர்ஸ்ட் லுக் வெளியீடு |
பாலிவுட் கதாநாயகிகள் ஒரு பக்கம் முன்னணி ஹீரோக்களுடன் டூயட் பாடிக்கொண்டிருக்கும் வேளையில், நடிகை கங்கனா ரனாவத் வரலாற்று கதைகளிலும் வித்தியாசமான சமூக கதைகள் மற்றும் கதாபாத்திரங்களிலும் தொடர்ந்து நடித்து வருகிறார். இன்னும் ஒருபடி மேலே போய் டைரக்ஷனிலும் இறங்கி மணிகர்ணிகா என்கிற படத்தை இயக்கி வெற்றியும் பெற்றார்.
தற்போது மறைந்த பிரதமர் இந்திராவின் வாழ்க்கையை தழுவி எடுக்கப்பட்டு வரும் எமர்ஜென்சி என்கிற படத்தில் இந்திரா வேடத்தில் நடிப்பதுடன் இந்த படத்தையும் அவரே இயக்கி வருகிறார். இதில் அனுபம் கெர், மஹிமா சவுத்ரி, மிலிந்த் சோமன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். கங்கனாவின் தலைவி படத்தை தொடர்ந்து இந்த படத்திற்கும் ஜிவி பிரகாஷ் தான் இசை அமைத்து வருகிறார். இந்தப்படத்தில் தற்போது ஒரு பாடல் காட்சி படமாகி வருகிறது.
இதுகுறித்து தற்போது கங்கனா கூறும்போது, “இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் அருமையான பாடல்களை தந்துள்ளார். இந்த படத்தில் 5 பாடல்கள் இருக்கின்றது. ஆனால் நிறைய பேர் இந்த எமர்ஜென்சி படத்திற்கு பாடல்களே தேவை இல்லை என்று கூறி வருகிறார்கள். அது ஏன் என்றுதான் எனக்கு புரியவில்லை. நான் பாடல்களை ரொம்பவே விரும்புபவள். இன்னும் சொல்லப்போனால் என்னுடைய படத்திற்கு பத்து நிமிட நீளமான பாடலுடன் கூடிய இன்டர்வல் பிளாக் இருந்தால் அதிகம் சந்தோஷப்படுவேன் என்று கூறியுள்ளார் கங்கனா.