'ஜனநாயகன்' படத்தின் புதிய போஸ்டர் வெளியீடு | சத்ய சாய் பாபாவின் மகிமையை சொல்லும் ‛அனந்தா' : நவ., 23ல் வெளியீடு | கிஸ் முதல் நெட்வொர்க் வரை... இந்த வாரா ஓடிடி ரிலீஸ்...! | ''பீரியட் படம் பண்ணுவது தனி அனுபவம்... டைம் மிஷின் மூலம் அந்த காலம் செல்வது மாதிரி'': துல்கர் சல்மான் | ரோஜா 'கம்பேக்': 'லெனின் பாண்டியன்' படத்தில் நடிக்கிறார் | மணிரத்னம் படம் : சிம்புவிற்கு பதில் விஜய் சேதுபதி | ரஜினிகாந்த்தை 'தலைவர்' எனக் குறிப்பிட்ட கமல்ஹாசன் | ஹரிஷ் கல்யாண் அடுத்து நடிக்கும் இரண்டு படங்கள் | நவம்பர் 21ல் திரைக்கு வரும் ‛தீயவர் குலை நடுங்க' | படப்பிடிப்புக்காக ஹனிமூனை மாற்றிய ஹீரோ |

திரையுலகை பொருத்தவரை சத்தமில்லாமல் காதலித்து வந்த ஆதி-நிக்கி கல்ராணி ஜோடி மற்றும் சவுண்டாக காதலித்து வந்த நயன்தாரா-விக்னேஷ் சிவன் ஜோடி ஆகியோர் திருமண பந்தத்திற்குள் நுழைந்து விட்டனர். அடுத்ததாக மிகவும் எதிர்பார்க்கப்படுவது இளம் நடிகர்களான விஜய்தேவரகொண்டா, ராஷ்மிகா ஜோடி பற்றித்தான். இவர்கள் இருவரும் காதலிக்கிறார்கள் என்று பரவலாக பேசப்பட்டாலும் தாங்கள் இருவரும் எப்போதும் நெருக்கமான நண்பர்கள் தான் எனவும் தங்களுக்குள் காதல் இல்லை எனவும் இருவருமே தொடர்ந்து மறுத்து வருகிறார்கள். இந்த நிலையில் விஜய் தேவரகொண்டா திருமணம் பற்றி ஒரு அதிரடி தகவலை வெளிப்படுத்தியுள்ளார் மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகளும் பாலிவுட் நடிகையுமான ஜான்வி கபூர்.
சமீபத்தில் ஒரு ரியாலிட்டி ஷோவில் கலந்து கொண்ட ஜான்வி கபூரிடம், ‛உங்களது சுயம்வரத்தில் கலந்து கொள்ள வேண்டும் என்றால் எந்த நடிகர்கள் கட்டாயம் பங்கேற்க வேண்டும்? மூன்று பேரின் பெயர்களை கூறுங்கள்' என கேட்கப்பட்டது. அதற்கு ரன்பீர் கபூர், ஹிரித்திக் ரோஷன், டைகர் ஷெராப் ஆகியோரின் பெயர்களை குறிப்பிட்டார் ஜான்வி கபூர். ஆனால் திருமணம் ஆனவர்களின் பெயர்களை இதில் கூறக்கூடாது, வேறு யாராவது ஒரு பெயரை சொல்லுங்கள் என்று கூறியதுடன் அந்த தொகுப்பாளரே விஜய்தேவரகொண்டாவின் பெயரையும் எடுத்துக் கொடுத்தார்.
ஆனால் ஜான்வி கபூரோ விஜய்தேவரகொண்டா பிராக்டிக்கலி மேரீட் என்கிற வார்த்தையை பயன்படுத்தி அந்தப் பெயரை மறுத்துள்ளார். ஜான்வி கபூர் பயன்படுத்திய வார்த்தைகள் விஜய் தேவரகொண்டாவுக்கு கிட்டத்தட்ட திருமணமாகிவிட்டது என்று குறிப்பிடுவது போலவும், ராஷ்மிகாவைத்தான் அவர் திருமணம் செய்யப்போகிறார் என்பதை மறைமுகமாக சொல்லும் விதமாகவும் இருக்கிறது. எந்த அடிப்படையில் ஜான்வி கபூர் இப்படி ஒரு விஷயத்தை வெளிப்படையாக பேசி இருக்கிறார் என ரசிகர்கள் ஆராய்ச்சி செய்து வருகின்றனர்.