ஜூலை மாதத்தில் வெளியாகும் ராயன் | சிவகார்த்திகேயன் படத்திற்காக 14 ஆண்டுகளுக்கு பிறகு தமிழுக்கு திரும்பும் மலையாள நடிகர் | மும்பையில் தொடங்கிய குபேராவின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பு | அயோத்தி பட இயக்குனரின் அடுத்த பட அப்டேட் | ரத்னம் படத்திற்கு கட்டப்பஞ்சாயத்து : விஷால் வேதனை | நகைகள் மாயமானதாக புகார் : ஞானவேல்ராஜா வீட்டு பணிப்பெண் தற்கொலை முயற்சி | துருவ் விக்ரமிடம் பேச்சுவார்த்தையை தொடங்கிய சுதா | ‛இந்தியன் 2' படத்தின் தாத்தா வராரு என்ற முதல் பாடல் விரைவில் வெளியாகிறது | நடிகர் மன்சூர் அலிகான் காங்கிரஸ் கட்சியில் இணைகிறார் | வடக்கன் பட டீசர் வெளியானது |
பாலிவுட்டின் முன்னணி நடிகர்களில் ஒருவர் அக்ஷய் குமார். ஒரு வருடத்தில் அதிகம் சம்பாதிக்கும் நடிகர், தொடர்ச்சியாக அதிகப் படங்களில் நடிக்கும் நடிகர் எனப் பெயரெடுத்தவர். வித்தியாசமான கதைகளில் நடித்து விமர்சகர்களாலும் பாராட்டப்படுபவர்.
ஆனால், கடந்த இரண்டு வருடங்களுக்கும் மேலாக அவரது படங்கள் பெரிய அளவில் வெற்றிகளைப் பெற்று வசூலைக் குவிக்கவில்லை. “பச்சன் பாண்டே, சாம்ராட் பிரித்விராஜ், ரக்ஷா பந்தன்” என தியேட்டர்களில் வெளியான அவருடைய படங்கள் தோல்வியைத் தழுவின. அந்த வரிசையில் தற்போது 'ராம் சேது' படமும் இடம் பெற்றுள்ளது. ராமர் பாலத்தைப் பற்றிய படமாக உருவாக்கப்பட்ட இந்தப் படம் வட இந்தியாவில் பெரும் வரவேற்பைப் பெறும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், படத்தின் மேக்கிங் மிகச் சுமாராக இருந்ததால் ரசிகர்கள் படத்திற்கு பெரிய அளவில் வரவேற்பு கொடுக்கவில்லை.
தொடர்ந்து நான்காவது தோல்வி என்பது அக்ஷய் குமாரின் சினிமா பயணத்தில் ஒரு முக்கியமான தடைக் கற்கள்தான். இருப்பினும் அவரது கைவசம் நான்கு படங்கள் உள்ளன. அந்தப் படங்களின் மூலம் அவர் மீண்டும் தனது பழைய வெற்றியைப் பெறுவார் என பாலிவுட்டினர் கருதுகிறார்கள்.