நடிகர் வெண்ணிற ஆடை மூர்த்தி பேரன் மனஸ் மானு சினிமாவுக்கு வருகிறார் | நடிகை ஷில்பா ஷெட்டியின் ரெஸ்டாரன்ட் நாளை மூடப்படுகிறது! | சமந்தா வெளியிட்ட துபாய் பேஷன் ஷோ வீடியோவில் தெரிந்த ஆணின் கை! | வீர தீர சூரன்- 2 படத்திற்கு பிறகு மூன்று படங்களில் கமிட்டான விக்ரம்! | ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்துவது புத்திசாலித்தனம்! இயக்குனர் லோகேஷ் கனகராஜ் | 6 வருடங்களில் 6 படம்: ஷிவாத்மிகாவுக்கு கை கொடுக்குமா 'பாம்' | தமிழ் ஆல்பத்தில் கொரியன் பாடகர் | அடுத்த வாரம் ஓடிடி தளத்தில் வெளியாகும் 'கூலி' | பிளாஷ்பேக்: கே.ஆர்.விஜயாவை அறிமுகப்படுத்தி 100வது, 200வது படத்தையும் இயக்கிய கோபாலகிருஷ்ணன் | பிளாஷ்பேக்: குறைந்த சம்பளத்தில் வில்லனாக நடித்த ஜெமினி கணேஷ் |
பாலிவுட்டின் வசூல் நாயகனும், சர்ச்சை நாயகனுமான சல்மான் கானுக்கு மும்பை போலீஸ் துப்பாக்கி வைத்துக் கொள்வதற்கான லைசென்ஸ் வழங்கியுள்ளது. 2007ம் ஆண்டு மானைக் கொன்ற வழக்கில் சல்மான் சிக்கியதிலிருந்தே அவருக்கு பிரபல தாதாவான லாரன்ஸ் பிஷ்னாய் கும்பல் மூலம் அச்சுறுத்தல் இருந்து வருகிறது.
கடந்த மே மாதம் பிரபல பஞ்சாய் பாடகரான சித்து மூசேவாலாவை லாரன்ஸ் பிஷ்னாய் கும்பல் சுட்டுக் கொன்றது. அப்போது சல்மான் கானுக்கு அந்தக் கும்பலிடமிருந்து மிரட்டல் கடிதம் வந்தது. அதனடிப்படையில் தனது சொந்த பாதுகாப்பிற்காக துப்பாக்கி வைத்துக் கொள்ள மும்பை போலீஸிடம் லைசென்ஸ் கேட்டு சல்மான் விண்ணப்பித்திருந்தார்.
சல்மானின் கிரிமினல் ரெக்கார்டு, அவரது பின்னணி ஆகியவற்றை விசாரித்து அவருக்கு லைசென்ஸ் வழங்கப்பட்டுள்ளது. சில தினங்களுக்கு முன்பு மும்பை போலீஸ் கமிஷனர் விவேக் பன்சால்கர் உடன் சல்மான் இது குறித்து நேரிலும் பேசியுள்ளார்.
தான் வழக்கமாகப் பயன்படுத்தும் லேண்ட் குரூய்சர் காரையும் துப்பாக்கி தோட்டாக்கள் துளைக்க முடியாத புல்லட் ப்ரூப் காராக சல்மான் மாற்றியுள்ளதாகவும் தெரிகிறது.