20 வயது நடிகருடன் காதலா... : கீர்த்தி சுரேஷ் பதில் | 'இந்தியன் 3' படத்திற்காக மீண்டும் படப்பிடிப்பு | அஜித்துடன் மோதும் சிவகார்த்திகேயன்? | 'தி கோட்' - தன் வேலையை ஆரம்பித்த மந்திரவாதி | 25 கோடியுடன் முடிவுக்கு வரும் 'சர்பிரா'!!! | விஷாலுக்கு தயாரிப்பாளர்கள் சங்கம் போட்ட கடிவாளம் | தங்கலான் படத்திற்கு யு/ஏ சான்று | பொறாமைக்கு மருந்தே கிடையாது : இயக்குனர் செல்வராகவன் | ஹீரோ ஆன மகன் விஜய் ஸ்ரீ ஹரி : வனிதா நெகிழ்ச்சி பதிவு | ரீமேக் மாதிரியே இருக்காது : ரசிகரின் கேள்விக்கு ரவி தேஜா பட இயக்குனர் பதில் |
பாலிவுட்டின் வசூல் நாயகனும், சர்ச்சை நாயகனுமான சல்மான் கானுக்கு மும்பை போலீஸ் துப்பாக்கி வைத்துக் கொள்வதற்கான லைசென்ஸ் வழங்கியுள்ளது. 2007ம் ஆண்டு மானைக் கொன்ற வழக்கில் சல்மான் சிக்கியதிலிருந்தே அவருக்கு பிரபல தாதாவான லாரன்ஸ் பிஷ்னாய் கும்பல் மூலம் அச்சுறுத்தல் இருந்து வருகிறது.
கடந்த மே மாதம் பிரபல பஞ்சாய் பாடகரான சித்து மூசேவாலாவை லாரன்ஸ் பிஷ்னாய் கும்பல் சுட்டுக் கொன்றது. அப்போது சல்மான் கானுக்கு அந்தக் கும்பலிடமிருந்து மிரட்டல் கடிதம் வந்தது. அதனடிப்படையில் தனது சொந்த பாதுகாப்பிற்காக துப்பாக்கி வைத்துக் கொள்ள மும்பை போலீஸிடம் லைசென்ஸ் கேட்டு சல்மான் விண்ணப்பித்திருந்தார்.
சல்மானின் கிரிமினல் ரெக்கார்டு, அவரது பின்னணி ஆகியவற்றை விசாரித்து அவருக்கு லைசென்ஸ் வழங்கப்பட்டுள்ளது. சில தினங்களுக்கு முன்பு மும்பை போலீஸ் கமிஷனர் விவேக் பன்சால்கர் உடன் சல்மான் இது குறித்து நேரிலும் பேசியுள்ளார்.
தான் வழக்கமாகப் பயன்படுத்தும் லேண்ட் குரூய்சர் காரையும் துப்பாக்கி தோட்டாக்கள் துளைக்க முடியாத புல்லட் ப்ரூப் காராக சல்மான் மாற்றியுள்ளதாகவும் தெரிகிறது.