என் கருத்துக்களை திட்டமிட்டே சர்ச்சை ஆக்குகிறார்கள் : ராஷ்மிகா ஆதங்கம் | பிளாஷ்பேக்: சிந்தைக்கும், செவிக்கும் விருந்தளித்த ஸ்ரீதரின் “சிவந்த மண்” | தனுஷை தொடர்ந்து நானியை இயக்கும் சேகர் கம்முலா | கூலி படம் இன்னொரு தளபதி : லோகேஷை கட்டிப்பிடித்து பாராட்டிய ரஜினி | சிவராஜ்குமாரை இயக்கும் தமிழ் இயக்குனர் | சாம் ஆண்டன் இயக்கத்தில் பிரபுதேவா, வடிவேலு | பவித்ராவுக்கு என்னாச்சு?: அவரே வெளியிட்ட விளக்கம் | மீண்டும் இணைந்த பிளாக் பட கூட்டணி! | இளையராஜா பாடலை பயன்படுத்த, வனிதாவுக்கு தடைவிதிக்க கோர்ட் மறுப்பு | விடைபெற்றார் நடிகை சரோஜாதேவி : சொந்த ஊரில் அரசு மரியாதையுடன் உடல் நல்லடக்கம் |
கொடிய வைரசான கொரோனா மீண்டும் திரைப்பட நட்சத்திரங்களை தாக்கி வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு அர்ஜுன் கபூர் குடும்பத்தில் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் பாலிவுட் நடிகை முர்னல் தாகூர் தனக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பதாக அறிவித்திருக்கிறார்.
இது குறித்து அவர் தனது சமூக வலைதளப்பக்கத்தில் கூறியிருப்பதாவது: எனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது வரை லேசான அறிகுறியுடன் தொற்று உறுதியாகியுள்ளது. நான் நலமுடன் உள்ளேன். மேலும், நான் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். டாக்டர்கள் தெரிவித்த அறிவுறுத்தல்களை கடைபிடித்து வருகின்றனர். என்னுடன் தொடர்பில் இருந்த நபர்கள் விரைவில் கொரோனா பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். அனைவரும் கவனமாக இருங்கள். என கூறியுள்ளார்.
முர்னல் தாகூர் மராட்டிய மொழி படங்களில் இருந்து லவ் சோனியா படத்தின் மூலம் பாலிவுட்டுக்கு வந்தவர். அதன் பிறகு சூப்பர் 30, பேட்ல் ஹவுஸ், கோஸ்ட் ஸ்டோரி, டோபோன், டமாக்கா படங்களில் நடித்தார். தற்போது ஜெர்சி, பிப்பா, கும்ரா உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.