20 வயது நடிகருடன் காதலா... : கீர்த்தி சுரேஷ் பதில் | 'இந்தியன் 3' படத்திற்காக மீண்டும் படப்பிடிப்பு | அஜித்துடன் மோதும் சிவகார்த்திகேயன்? | 'தி கோட்' - தன் வேலையை ஆரம்பித்த மந்திரவாதி | 25 கோடியுடன் முடிவுக்கு வரும் 'சர்பிரா'!!! | விஷாலுக்கு தயாரிப்பாளர்கள் சங்கம் போட்ட கடிவாளம் | தங்கலான் படத்திற்கு யு/ஏ சான்று | பொறாமைக்கு மருந்தே கிடையாது : இயக்குனர் செல்வராகவன் | ஹீரோ ஆன மகன் விஜய் ஸ்ரீ ஹரி : வனிதா நெகிழ்ச்சி பதிவு | ரீமேக் மாதிரியே இருக்காது : ரசிகரின் கேள்விக்கு ரவி தேஜா பட இயக்குனர் பதில் |
கொடிய வைரசான கொரோனா மீண்டும் திரைப்பட நட்சத்திரங்களை தாக்கி வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு அர்ஜுன் கபூர் குடும்பத்தில் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் பாலிவுட் நடிகை முர்னல் தாகூர் தனக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பதாக அறிவித்திருக்கிறார்.
இது குறித்து அவர் தனது சமூக வலைதளப்பக்கத்தில் கூறியிருப்பதாவது: எனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது வரை லேசான அறிகுறியுடன் தொற்று உறுதியாகியுள்ளது. நான் நலமுடன் உள்ளேன். மேலும், நான் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். டாக்டர்கள் தெரிவித்த அறிவுறுத்தல்களை கடைபிடித்து வருகின்றனர். என்னுடன் தொடர்பில் இருந்த நபர்கள் விரைவில் கொரோனா பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். அனைவரும் கவனமாக இருங்கள். என கூறியுள்ளார்.
முர்னல் தாகூர் மராட்டிய மொழி படங்களில் இருந்து லவ் சோனியா படத்தின் மூலம் பாலிவுட்டுக்கு வந்தவர். அதன் பிறகு சூப்பர் 30, பேட்ல் ஹவுஸ், கோஸ்ட் ஸ்டோரி, டோபோன், டமாக்கா படங்களில் நடித்தார். தற்போது ஜெர்சி, பிப்பா, கும்ரா உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.