நேரடியாக ஓடிடியில் வெளியாகும் கீர்த்தி சுரேஷ் படம் | 22 ஆண்டு காத்திருப்பு : விஷ்ணு மஞ்சு நெகிழ்ச்சி | யாருக்கு யார் வில்லன்? மோகன்லால் மோகன்பாபு போட்டாபோட்டி | மருத்துவர்களின் அலட்சியத்தால் செல்லப்பூனை மரணம் ; திலீப் பட இயக்குனர் போலீசில் புகார் | லண்டனில் கங்குலியுடன் சந்திப்பு ; பிரமித்து விலகாத நவ்யா நாயர் | குபேராவை கேரளாவில் வெளியிடும் துல்கர் சல்மான் | 'தொடரும்' படத்தின் கதை என்னுடையது ; வில்லங்க இயக்குனரின் புதிய சர்ச்சை | 'தி ராஜா சாப்' டீசர் : ஹிந்தி, தெலுங்கு பார்வைகளில் போட்டி | மைனா நந்தினியின் 'குட் டே' | உறுப்பினர் அட்டை இல்லாமல் சினிமாவில் நடிக்க முடியாது : விஷால் அறிக்கை |
கொடிய வைரசான கொரோனா மீண்டும் திரைப்பட நட்சத்திரங்களை தாக்கி வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்பு அர்ஜுன் கபூர் குடும்பத்தில் 4 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் பாலிவுட் நடிகை முர்னல் தாகூர் தனக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருப்பதாக அறிவித்திருக்கிறார்.
இது குறித்து அவர் தனது சமூக வலைதளப்பக்கத்தில் கூறியிருப்பதாவது: எனக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது வரை லேசான அறிகுறியுடன் தொற்று உறுதியாகியுள்ளது. நான் நலமுடன் உள்ளேன். மேலும், நான் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளேன். டாக்டர்கள் தெரிவித்த அறிவுறுத்தல்களை கடைபிடித்து வருகின்றனர். என்னுடன் தொடர்பில் இருந்த நபர்கள் விரைவில் கொரோனா பரிசோதனை செய்துகொள்ள வேண்டும். அனைவரும் கவனமாக இருங்கள். என கூறியுள்ளார்.
முர்னல் தாகூர் மராட்டிய மொழி படங்களில் இருந்து லவ் சோனியா படத்தின் மூலம் பாலிவுட்டுக்கு வந்தவர். அதன் பிறகு சூப்பர் 30, பேட்ல் ஹவுஸ், கோஸ்ட் ஸ்டோரி, டோபோன், டமாக்கா படங்களில் நடித்தார். தற்போது ஜெர்சி, பிப்பா, கும்ரா உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.