கவனமாக எழுதப்பட்ட திரைக்கதை : நடிகை வழக்கின் தீர்ப்பு குறித்து பார்வதி கருத்து | தாதா சாஹேப் விருது பெற்ற மோகன்லாலை பேட்ரியாட் படப்பிடிப்பு தளத்தில் கவுரவித்த மம்முட்டி | நடிகர் திலீப் விடுதலை குறித்து மலையாள நடிகர் சங்கம் கருத்து | தி கேர்ள் பிரண்ட் படத்தை கட்டாயம் பாருங்கள் : ஜான்வி கபூர் | சிரஞ்சீவி, நயன்தாராவின் காதல் பாடல் வெளியானது | டிசம்பர் 12ல் ஓடிடிக்கு வரும் காந்தா | தர்மேந்திராவின் 90வது பிறந்தநாள் : ஹேமமாலினி உருக்கம் | பவுன்சர்கள் செயல் : மன்னிப்பு கேட்ட சூரி | 10 வருடங்களுக்குப் பிறகு இரண்டாம் தயாரிப்பு நிறுவனத்தை ஆரம்பித்த சூர்யா குடும்பம் | டிசம்பர் 12ல் 'அகண்டா 2'வை வெளியிட தீவிர முயற்சி |

சென்னையில் புத்தாண்டு நிகழ்ச்சிகளுக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருப்பதால் புத்தாண்டு கொண்டாட்ட விரும்பிகள் புதுச்சேரி நோக்கி படையெடுக்கத் தொடங்கி உள்ளனர். இதை தொடர்ந்து புதுச்சேரியில் பல இடங்களில் தனியார் புத்தாண்டு நிகழ்ச்சிகள் நடக்க இருக்கிறது.
இதன் ஒரு பகுதியாக புதுச்சேரி பழைய துறைமுக வளாகத்தில் நேற்று 3 நாள் இசை நிகழ்ச்சி தொடங்கியது. இந்த நிகழ்ச்சியில் சன்னி லியோன் நடனமாட இருப்பதாக விளம்பரம் செய்யப்பட்டு, அதற்கான டிக்கெட்டுகளும் விற்கப்பட்டு வந்தது.
சன்னி லியோன் நடன நிகழ்ச்சிக்கு புதுச்சேரியில் உள்ள பல அமைப்புகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இந்த அமைப்பினர் நேற்று பழைய துறைமுகச் சாலையில் கூடி கோஷம் எழுப்பியபடி துறைமுக வளாக நுழைவாயிலை முற்றுகையிட்டனர். அப்போது அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த போலீச்சாருடன் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதனிடையே, ஆத்திரமடைந்த போராட்டக்காரர்கள் நிகழ்ச்சிக்காக அங்கு வைக்கப்பட்டிருந்த சன்னி லியோன் பேனரைக் கிழித்தனர். இதனால் அங்கு பரபரப்பான சூழ்நிலை ஏற்பட்டது.