ரெட்ரோ பட வாய்ப்பு : மனம் திறந்த பூஜா ஹெக்டே | முதன்முறையாக கார்த்தி உடன் நடிக்கும் வடிவேலு | ஹாலிவுட் நடிகைகள் கெட்டப்புக்கு மாறிய சமந்தா | விஜய்யுடன் போட்டி நடனம் ; சாய் பல்லவி விருப்பம் | திரையுலக பயணத்தில் 40 வருடங்களை நிறைவு செய்த நதியா | சல்மானின் ‛சிக்கந்தர்' படத்தில் சத்யராஜ் | எம்புரான் 2வில் பஹத் பாசிலா : யூகத்தை கிளப்பிய புகைப்படம் | மூன்று வருடமாக நான் சிங்கிள் தான் ; ரிலேஷன்ஷிப் குறித்து மனம் திறந்த பார்வதி | விடாமுயற்சி படத்திற்கு ஒரு நாள் மட்டும் சிறப்பு காட்சிக்கு அனுமதி | ''கேரவனில் நடந்த சம்பவம்...'': மனமுடைந்த நிகழ்வை பகிர்ந்த தமன்னா |
கடந்த ஆண்டு முழுவதும் பரபரப்பாக இருந்த நடிகை கங்கனா ரணவத், தமிழில் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடித்தார். மணிகர்னிகாக படத்திற்காக தேசிய விருது பெற்றார். இந்திராகாந்தியின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிப்பதாக அறிவித்தார். காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்களை கடுமையாக விமர்சித்தார். விவசாயிகளை பயங்கரவாதிகள் என்றார். இதனால் பல புகார்கள், விசாரணைகளை சந்தித்தார்.
இந்த ஆண்டு அமைதியாக இருக்க வேண்டும் என்பதற்காக திருப்பதி சென்று சாமி தரிசனம் செய்தார். பின்னர் அங்கிருந்து காளகஸ்தி வந்து சாமி தரிசனம் செய்து கோ பூஜையும் செய்தார். பின்னர் ராகு கேது பூஜை செய்தார். காளகஸ்தி தோஷம் நீக்கம் புண்ணிய ஸ்தலம் என்பதால் இந்த பூஜைகளை செய்தார்.
பின்னர், அவருக்கு வேதசீர்வசனம் வழங்கப்பட்டது. காளகஸ்தி எம்எல்ஏ அவருக்கு நினைவு பரிசு மற்றும் பிரசாதங்களை வழங்கினார். கோவிலுக்கு ஐஎஸ்ஓ சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்ச்சியிலும் அவர் பங்கேற்றார்.