மீசைய முறுக்கு 2ம் பாகம் உருவாகிறதா? | சரிந்த மார்க்கெட்டை காப்பாற்ற அதிரடி முடிவெடுத்த தாரா | உயர பறந்த 'லிட்டில் விங்ஸ்' : சாதனையை பகிரும் இயக்குநர் நவீன் மு | தோழிகளால் நடிகை ஆனேன்: சுபா சுவாரஸ்யம் | பிளாஷ்பேக்: திரைப்படக் கல்லூரி மாணவர்கள் திரையில் ஏற்படுத்திய புரட்சி “ஊமை விழிகள்” | ரிக்ஷாக்காரன், நட்புக்காக, பூஜை - ஞாயிறு திரைப்படங்கள் | நம்ப முடியவில்லை : ‛கீதா கோவிந்தம்' குறித்து ராஷ்மிகா மகிழ்ச்சி பதிவு | 78 கோடியில் சொகுசு பங்களா வாங்கிய தனுஷ் பட நடிகை | அஜித் 64வது படம் எந்த மாதிரி கதை : ஆதிக் ரவிச்சந்திரன் வெளியிட்ட தகவல் | கூலி படத்தில் அமீர்கானை வீணடித்து விட்டார்கள் : ரசிகர்கள் ஆதங்கம் |
கடந்த ஆண்டு முழுவதும் பரபரப்பாக இருந்த நடிகை கங்கனா ரணவத், தமிழில் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடித்தார். மணிகர்னிகாக படத்திற்காக தேசிய விருது பெற்றார். இந்திராகாந்தியின் வாழ்க்கை வரலாற்று படத்தில் நடிப்பதாக அறிவித்தார். காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் தலைவர்களை கடுமையாக விமர்சித்தார். விவசாயிகளை பயங்கரவாதிகள் என்றார். இதனால் பல புகார்கள், விசாரணைகளை சந்தித்தார்.
இந்த ஆண்டு அமைதியாக இருக்க வேண்டும் என்பதற்காக திருப்பதி சென்று சாமி தரிசனம் செய்தார். பின்னர் அங்கிருந்து காளகஸ்தி வந்து சாமி தரிசனம் செய்து கோ பூஜையும் செய்தார். பின்னர் ராகு கேது பூஜை செய்தார். காளகஸ்தி தோஷம் நீக்கம் புண்ணிய ஸ்தலம் என்பதால் இந்த பூஜைகளை செய்தார்.
பின்னர், அவருக்கு வேதசீர்வசனம் வழங்கப்பட்டது. காளகஸ்தி எம்எல்ஏ அவருக்கு நினைவு பரிசு மற்றும் பிரசாதங்களை வழங்கினார். கோவிலுக்கு ஐஎஸ்ஓ சான்றிதழ்கள் வழங்கும் நிகழ்ச்சியிலும் அவர் பங்கேற்றார்.