நேரடியாக ஓடிடியில் வெளியாகும் கீர்த்தி சுரேஷ் படம் | 22 ஆண்டு காத்திருப்பு : விஷ்ணு மஞ்சு நெகிழ்ச்சி | யாருக்கு யார் வில்லன்? மோகன்லால் மோகன்பாபு போட்டாபோட்டி | மருத்துவர்களின் அலட்சியத்தால் செல்லப்பூனை மரணம் ; திலீப் பட இயக்குனர் போலீசில் புகார் | லண்டனில் கங்குலியுடன் சந்திப்பு ; பிரமித்து விலகாத நவ்யா நாயர் | குபேராவை கேரளாவில் வெளியிடும் துல்கர் சல்மான் | 'தொடரும்' படத்தின் கதை என்னுடையது ; வில்லங்க இயக்குனரின் புதிய சர்ச்சை | 'தி ராஜா சாப்' டீசர் : ஹிந்தி, தெலுங்கு பார்வைகளில் போட்டி | மைனா நந்தினியின் 'குட் டே' | உறுப்பினர் அட்டை இல்லாமல் சினிமாவில் நடிக்க முடியாது : விஷால் அறிக்கை |
கொரோனா மீண்டும் வேகமாக பரவி வருவதை தொடர்ந்து பாலிவுட்டில் அது தன் கோர முகத்தை காட்டி வருகிறது. ஏற்கெனவே நடிகர் அர்ஜூன் கபூர் குடும்பத்தை தாக்கிய கொரோனா கடந்த சில நாட்களுக்கு முன்பு நடிகை மிர்னல் தாக்கூரை தாக்கியது. இந்த நிலையில் தற்போது பாலிவுட் நடிகர் ஜான் ஆபிரகாம் மற்றும் அவரது மனைவி பிரியா ருன்சாலுக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து ஜான் ஆபிரகாம் கூறியிருப்பதாவது: 3 நாட்களுக்கு முன் நான் தொடர்பில் இருந்தவருக்கு கொரோனா இருப்பது தெரியவந்தது. இதனால் நானும் எனது மனைவியும் பரிசோதனை செய்து கொண்டோம். இதில் எனக்கும், பிரியாவுக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நாங்கள் வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டோம். முககவசம் அணிந்து, ஆரோக்கியமாக மற்றும் நலமாக நீங்கள் இருக்க வேண்டும். என்று கூறியுள்ளார்.
ஏக்தா கபூர்
இதேபோல பாலிவுட்டின் முன்னணி தயாரிப்பாளர் ஏக்தா கபூருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏராளமான திரைப்படங்கள், நூற்றுக் கணக்கான தொலைக்காட்சி தொடர்கள், வெப் சீரிஸ்களை தயாரித்துள்ளவர் ஏக்தா கபூர்.
இதுகுறித்த அவர் கூறியிருப்பதாவது: எல்லா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்த போதிலும், பரிசோதனையில் கொரேனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதி படுத்தப்பட்டுள்ளது. என்றாலும் நான் நலமாக இருக்கிறேன், என்னைத் தொடர்பு கொண்ட அனைவரும் தங்களைத் தாங்களே பரிசோதிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். என்று கூறியுள்ளார்.