ஆக்ஷன் ஹீரோயினாக விரும்பும் அக்ஷரா ரெட்டி | பிளாஷ்பேக்: 400 படங்களில் நடித்த கோவை செந்தில் | 300 கோடி வசூல் சாதனை புரிந்த 'லோகா' | பிளாஷ்பேக்: முதல் நட்சத்திர ஒளிப்பதிவாளர் | நான்கு நாட்களில் 300 கோடி வசூலைக் கடந்த 'காந்தாரா சாப்டர் 1' | ஸ்பெயின் கார் பந்தயத்தில் மூன்றாமிடம்: அஜித் அணிக்கு உதயநிதி பாராட்டு | ‛மா இண்டி பங்காரம்' படப்பிடிப்பு இம்மாதம் துவக்கம்: சமந்தா வெளியிட்ட தகவல் | துணிக்கடை திறப்பு விழாவில் கூட்ட நெரிசலில் சிக்கிக்கொண்ட பிரியங்கா மோகன்! | 5 வருடத்திற்கு பிறகு பாஸ்போர்ட்டை திரும்பப்பெற்ற ரியா சக்கரவர்த்தி | ‛காந்தாரா சாப்டர் 1' வெற்றியை ஜெயசூர்யா வீட்டில் கொண்டாடிய ரிஷப் ஷெட்டி |
கொரோனா மீண்டும் வேகமாக பரவி வருவதை தொடர்ந்து பாலிவுட்டில் அது தன் கோர முகத்தை காட்டி வருகிறது. ஏற்கெனவே நடிகர் அர்ஜூன் கபூர் குடும்பத்தை தாக்கிய கொரோனா கடந்த சில நாட்களுக்கு முன்பு நடிகை மிர்னல் தாக்கூரை தாக்கியது. இந்த நிலையில் தற்போது பாலிவுட் நடிகர் ஜான் ஆபிரகாம் மற்றும் அவரது மனைவி பிரியா ருன்சாலுக்கு நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இது குறித்து ஜான் ஆபிரகாம் கூறியிருப்பதாவது: 3 நாட்களுக்கு முன் நான் தொடர்பில் இருந்தவருக்கு கொரோனா இருப்பது தெரியவந்தது. இதனால் நானும் எனது மனைவியும் பரிசோதனை செய்து கொண்டோம். இதில் எனக்கும், பிரியாவுக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நாங்கள் வீட்டில் தனிமைப்படுத்தி கொண்டோம். முககவசம் அணிந்து, ஆரோக்கியமாக மற்றும் நலமாக நீங்கள் இருக்க வேண்டும். என்று கூறியுள்ளார்.
ஏக்தா கபூர்
இதேபோல பாலிவுட்டின் முன்னணி தயாரிப்பாளர் ஏக்தா கபூருக்கும் கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏராளமான திரைப்படங்கள், நூற்றுக் கணக்கான தொலைக்காட்சி தொடர்கள், வெப் சீரிஸ்களை தயாரித்துள்ளவர் ஏக்தா கபூர்.
இதுகுறித்த அவர் கூறியிருப்பதாவது: எல்லா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுத்த போதிலும், பரிசோதனையில் கொரேனா தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பது உறுதி படுத்தப்பட்டுள்ளது. என்றாலும் நான் நலமாக இருக்கிறேன், என்னைத் தொடர்பு கொண்ட அனைவரும் தங்களைத் தாங்களே பரிசோதிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். என்று கூறியுள்ளார்.