இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
ராஜமவுலி இயக்கி உள்ள பாகுபலி , ஆர் ஆர் ஆர், தமிழில் விஜய் நடித்த மெர்சல் மற்றும் தலைவி என பல படங்களுக்கு கதை எழுதியவர் ராஜமவுலியின் தந்தையான விஜயேந்திர பிரசாத். அதோடு ஹிந்தியிலும் சில படங்களுக்கு கதை வசனம் எழுதியிருக்கும் விஜயேந்திர பிரசாத், சல்மான்கான் நடித்த பஜ்ரங்கி பைஜான் என்ற படத்துக்கும் கதை எழுதியிருந்தார். கபீர் கான் இயக்கிய இந்த படம் கமர்சியல் ரீதியாக மிகப்பெரிய வெற்றி பெற்றிருந்தது. இப்படத்தின் இரண்டாம் பாகம் விரைவில் தயாராக உள்ளது. இதற்கும் விஜயேந்திர பிரசாத் கதை எழுதுகிறார்.
இந்நிலையில் இருதினங்களுக்கு முன் தனது 56வது பிறந்தநாளை கொண்டாடிய சல்மான்கான், பஜ்ரங்கி பைஜான் படத்தின் இரண்டாம் பாகம் தயாராக இருப்பதாக அறிவித்திருக்கிறார். அந்த படத்திற்கு பவன் புத்ர பைஜான் என டைட்டில் வைத்திருப்பதாகவும், அதிகாரப்பூர்வ தகவல் வெளியிட்டுள்ளார்.
ஆனால் இந்தப் படத்தையும் பஜ்ரங்கி பைஜான் படத்தை இயக்கிய கபீர்கான் தான் இயக்கப் போகிறாரா இல்லை வேறு இயக்குனர் இருக்கிறார்களா என்பது குறித்த தகவலை சல்மான்கான் வெளியிடவில்லை. என்றாலும் தனது பிறந்தநாளில் புதிய படம் குறித்த அறிவிப்பை அதிகாரபூர்வமாக சல்மான்கான் வெளியிட்டதால் அவரது ரசிகர்கள் அந்தப் படத்தின் டைட்டிலை மிகப்பெரிய அளவில் சோசியல் மீடியாவில் வைரலாக்கி வருகின்றனர்.