கேரளாவை தொடர்ந்து ஹிந்தியிலும் சென்சார் போர்டு சிக்கலில் ஜானகி டைட்டில் | தமிழ் புத்தாண்டு தினத்தில் சூர்யாவுடன் மோதும் விஷால்! | என் படங்களுக்காக ரசிகர்களை எதிர்ப்பார்ப்புடன் காத்திருக்க வைப்பேன்! - விஷ்ணு விஷால் | விளையாட்டால் நிகழும் பிரச்னையே ‛கேம்' : சொல்கிறார் ஷ்ரத்தா ஸ்ரீநாத் | நெல் விவசாயத்தில் இறங்கிய நயன்தாரா பட இயக்குனர் | தெலுங்கில் முதல் முறையாக நுழைந்த அக்ஷய் கன்னா ; சுக்ராச்சாரியார் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் | கன்னட நடிகர் தர்ஷனுக்கு தனிமை சிறை ஏன்? நீதிமன்றத்தில் மனு தாக்கல் | 'திரிஷ்யம் 3' ; ஜீத்து ஜோசப் வெளியிட்ட முதல் புகைப்படம் | ஜீவாவின் 'தலைவர் தம்பி தலைமையில்' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது! | காதலில் கரைபவர் வெகு சிலரே : தனுஷின் ‛தேரே இஷ்க் மே' டீசர் வெளியீடு |
கொரோனா இரண்டாவது அலை காரணமாக பாலிவுட் சினிமாவின் முன்னணி ஹீரோக்களின் படங்களெல்லாம் ஓடிடி தளங்களில் வெளியாகி வந்தன நிலையில், ஹிந்தியில் அக்சய்குமார், கைத்ரினா கைப் நடித்துள்ள சூர்யவன்ஷி என்ற படம்தான் முதன் முதலாக தியேட்டர்களில் கடந்த வெள்ளியன்று வெளியானது.
இந்த படத்தில் அஜய்தேவ்கன், ரன்வீர்சிங் ஆகியோர் கெஸ்ட் ரோலில் நடித்துள்ளனர். ரோஷித் ஷெட்டி இயக்கியுள்ள இந்த படத்தை ரிலையன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. கடந்த வெள்ளிக்கிழமை அன்று வெளியான இப்படம் முதல் நாள் ரூ. 26. 29 கோடியும், அதற்கடுத்த நாள் ரூ.23.85 கோடியும் வசூலித்துள்ளது. இப்படி அக்சய்குமார் படம் இரண்டே நாளில் ரூ. 50 கோடி வசூலித்திருப்பதால் பாலிவுட்டில் ரிலீசுக்கு தயார்நிலையில் இருக்கும் மற்ற படங்களையும் அடுத்தடுத்து வெளியிட தயாராகிவிட்டனர்.