மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! | மே 1ம் தேதி ரீ ரிலீஸாகும் தீனா படம்! | கவின், ஆண்ட்ரியா படத்திற்கு இசையமைக்கும் ஜி.வி. பிரகாஷ்! | ஹாலிவுட்டில் ரீ ரிலீசாகிறது 'இன்டர்ஸ்டெல்லர்' | பெண்களை அடிமைப்படுத்தும் 'பரதா': சர்ச்சையுடன் உருவாகும் புதிய படம் | இணையத்தில் கசிந்த 'ராமாயணம்' படப்பிடிப்பு காட்சிகள்: படக்குழு அதிர்ச்சி |
பல வருடங்களுக்கு முன்பு திரிசக்தி சுந்தர்ராமன் என்ற தயாரிப்பாளர் சரத்குமாரை வைத்து ஒரு படம் தயாரிக்க அவருக்கு 40 லட்சம் ரூபாய் அட்வான்ஸ் கொடுத்தாராம். ஆனால் பல ஆண்டாகியும் படம் எதுவும் தயாரிக்கவில்லை. தயாரிப்பாளர் அட்வான்சை திருப்பிக் கேட்டுக் கொண்டிருந்தார். அவரை அழைத்த சரத்குமார் "பேசிய படி நாம் சேர்ந்து படம் செய்யலாம்" என்று சொன்னார். இயக்குனர் யார் என்று கேட்டார் தயாரிப்பளார் தன் அருகில் இருந்த செல்வராஜ் என்பரை காட்டினார் சரத்குமார். (செல்வராஜ் தயாரிப்பாளர் சங்கத்தில் சரத்குமாருக்கு உதவியாளர் போன்று செயல்படுபவர்) தயாரிப்பாளர் தயங்கினார். அதைப் புரிந்து கொண்ட சரத்குமார் "பயப்படாதீங்க இவர் நல்ல இயக்குனர்தான். படத்துக்கு நான் பொறுப்பு நீங்க ஆரம்பிங்க" என்றார். அதன்படி ஆரம்பிக்கப்பட்டது விடியல் என்ற படம். 1940, 1980, 2012 என மூன்ற காலகட்ட கதையை கொண்ட படம். முதல்கட்ட படப்பிடிப்பு ஒரு மாதம் குற்றாலத்திலும், மதுரை திருமலை நாயக்கர் மகாலிலும் நடந்தது. சரத்குமாரும், சினேகாவும் கலந்து கொண்டு நடித்தார்கள். அடுத்த கட்ட படப்பிடிப்பு 1940ல் நடக்கும் கதைக்கானது. இதில் சரத்குமாருக்கு ஜோடியாகவும், ரவிக்கை இல்லாமலும் நடிக்க ஒரு நடிகையை தேடிக் கொண்டிருக்கிறார்கள். கிடைக்கவில்லை. தற்போது முதல் கட்ட படப்பிடிப்பு முடிந்து 6 மாதத்துக்கு மேலாகியும் 2ம் கட்ட படப்பிடிப்பு தொடங்கவில்லை. இனி இந்தப் படம் உருவாகாது டிராப் ஆகிடும் என்று சொல்கிறார்கள். அதற்கான காரணங்கள் இவை...
1.தயாரிப்பாளர் தற்போது பொருளாதார நெருக்கடியில் இருப்பதால் அவரால் படத்தை தொடர முடியாது.
2.சரத்குமாருன் 1940 எபிசோடில் ரவிக்கை இல்லாமல் நடிக்க நடிகை கிடைக்கவில்லை
3.எடுத்தவரை போட்டுப் பார்த்தில் தயாரிப்பாளருக்கு படம் திருப்பதி தரவில்லை.
இந்த காரணங்களில் எது உண்மை என்று தெரியவில்லை.