அடுத்த சிம்பொனி: இளையராஜா அறிவிப்பு | 'மகுடம்' படத்தின் இயக்குனர் ஆனார் விஷால்; அவரே அதிகாரப்பூர்வமாக அறிவித்தார் | அட்லி - அல்லு அர்ஜூன் படம் ஒரு சினிமா புரட்சி! ரன்வீர் சிங் வெளியிட்ட தகவல் | 2025ல் ராஷ்மிகா மந்தனா நடிப்பில் வெளியாகும் இறுதி படம் 'தி கேர்ள் ப்ரெண்ட்' | துல்கர் சல்மானின் காந்தா நவம்பர் 14ம் தேதி வெளியாகிறது! | நான் விருது வாங்கினாலும் குப்பை தொட்டியில் தான் போடுவேன்! : விஷால் | முதல் முறையாக முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் சம்யுக்தா! | பிளாஷ்பேக்: தெவிட்டாத திரையிசைப் பாடல்கள் தந்த தித்திக்கும் “தீபாவளி” நினைவுகள் | டேட்டிங் ஆப் மூலம் இரண்டாவது திருமணம் செய்த வசந்த பாலன் பட நாயகி | கதாநாயகன் ஆனார் 'சிறகடிக்க ஆசை' மனோஜ்! |
'பாராட்டு'க்கு மற்றொரு வார்த்தை கொண்ட ஓடிடி நிறுவனம் ஒன்று விரைவில் மூடப்பட உள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. தெலுங்குத் திரையுலகத்தின் பெரிய குடும்பத்திற்குச் சொந்தமானது அந்த நிறுவனம். தெலுங்கில் மட்டுமல்லாது தமிழிலும் அவர்களது சேவையை ஓரிரு வருடங்களுக்கு முன்பு ஆரம்பித்தார்கள். சில படங்களை வாங்கி ஓடிடியில் வெளியிட்டார்கள். வெப் தொடர்களையும் தயாரித்தார்கள். ஆனால், உலக அளவில் பிரபலமாக உள்ள ஓடிடி தளங்களுடன் அந்த 'பாராட்டு' ஓடிடி தளத்தால் போட்டி போட முடியவில்லையாம். அதனால், தமிழில் அவர்களது சேவையை நிறுத்திவிடலாம் என்ற முடிவுக்கு வந்துள்ளார்களாம்.
மற்ற பிரபலமான ஓடிடி நிறுவனங்கள் ஒரு குறிப்பிட்ட தொகையை வாங்கினால் அனைத்து மொழி சேவைகளையும் வழங்கி வருகின்றன. ஆனால், அந்த 'பாராட்டு' ஓடிடி தளம் ஒவ்வொரு மொழிக்கும் தனித்தனியாக கட்டணம் வசூலிப்பதே அதன் தோல்விக்குக் காரணம் என ஓடிடி வட்டாரங்களில் தெரிவிக்கிறார்கள். சரியான பணியார்களை வேலைக்கு எடுக்கவில்லை என்றாலும் தோல்வியைத் தழுவ நேரிடும் என்றும் மேலும் சொல்கிறார்கள். குறுகிய காலத்தில் ஒரு ஓடிடி நிறுவனம் ஆரம்பமாகி மூடப்படுவது தமிழ்த் திரையுலகினருக்கு இழப்புதான்.