ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
சாய்மீரா நிறுவனம் தமிழ் சினிமாவை புரட்டிப்போட வந்த கார்பரேட் நிறுவனம். அந்த நிறுவனத்தின் ஆரம்ப கால வளர்ச்சி சினிமாக்காரர்களையே வியக்க வைத்தது. அந்த நிறுவன அதிகாரிகள் ஆளாளுக்கு நாட்டாமை செய்து அந்த நிறுவனத்தையே காலி பண்ணினார்கள். சிலர் நிறுவனம் திவாலாக போகிறது என்பதை அறிந்து பாதியிலேயே தங்கள் பங்கை வாங்கிக் கொண்டு ஓடினார்கள். அந்த நிறுவனம் நல்ல நிலையில் இருந்தபோது நலிந்த தயாரிப்பாளர்களுக்கென பத்து திரைப்படங்களை தயாரிக்க முன்வந்தது. இதற்காக முதல் கட்டமாக பத்து தயாரிப்பாளர்களுக்கு பெரும் தொகையை கொடுத்தது. இதில் வானம் பார்த்த சீமை, ஏன் இப்படி மயக்கினாய் என்ற இரண்டு படங்கள்தான் தயாரிக்கப்பட்டது. அதுவும் வெளிவரவில்லை. மற்ற 8 தயாரிப்பாளர்களும் படத்துக்கு பூஜை கூட போடாமல் கொடுத்த பணத்தை சுவாகா பண்ணிவிட்டார்கள். தற்போது கடும் பண நெருக்கடியில் இருக்கும் அந்த நிறுவனம் கொடுத்த பணத்தில் பாதியையாவது வாங்க முடியுமா? என்று முயற்சி செய்து வருகிறது. இதற்காக பல சினிமா முன்னணியினரைப் பார்த்து சார்பாக சிலர் பேசி வருகிறார்களாம். முதலை வாயிற்குள் சென்றதை திரும்ப பெற முடியுமா என்கிறார்கள், விபரம் தெரிந்தவர்கள்.