ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள துப்பாக்கி படம் தீவிரவாதிகளை மையப்படுத்தி உருவாகியுள்ளது. இதேபோல்தான் கமல் இயக்கியுளள விஸ்வரூபம் படமும் உருவாகியுள்ளதாம். கதையோட்டம் வெவ்வேறு பாதைகள் என்றாலும் சேருமிடமும், கதையில் மையமும் ஒரே மாதிரியான தீர்வைத்தான பிரதிபலிக்கின்றனவாம். அதிலும், துப்பாக்கி படத்தில் 12 ஸ்லீப்பர்செல்களையும், 12 பேர் சென்று சுட்டு வீழ்த்துவது போன்றொரு காட்சியும் கமல் படத்தில் உள்ளதாம். அதனால் துப்பாக்கிப் படத்தைப்பார்த்து அதிர்ச்சியடைந்துள்ளாராம் கமல்.
இதனால் தற்போது மொத்த படத்தையும் முடித்து விட்ட அவர், அடுத்து என்ன செய்வதென்ற ஆலோசனையில் ஈடுபட்டுள்ளார். வேற மாதிரியான காட்சிகளை படமாக்கலாமா? என்று யோசித்துக்கொண்டிருக்கிறார். ஆனால், அவர்கள் 12 பேர் வெவ்வேறு இடங்களில் சென்றுதானே ஸ்லீப்பர்செல்களை சுட்டு வீழ்த்தியிருக்கிறார்கள். ஆனால் விஸ்வரூபத்தில் நாம் ஒரே பஸ்சுக்குள் அத்தனை பேரையும சுட்டு வீழ்த்துவது போன்றுதானே படமாக்கியிருக்கிறோம். அதனால் காட்சியமைப்பு வேறு மாதிரியாகத்தானே இருக்கிறது என்று கமலின் டீமைச்சேர்ந்தவர்கள் கூறி வருகிறார்களாம். அதனால் முதலில் தடுமாறிய கமல், இப்போது எந்தவித மாற்றமும் செய்யவேண்டாம் என்று முடிவு செய்திருக்கிறாராம்.