இளையராஜா பற்றி இனி பேசினால் நடப்பதே வேறு : வைரமுத்துவை எச்சரித்த கங்கை அமரன் | ஆன்மிகப் பயணத்தால் மாறிய வாழ்க்கை : ரம்யா பாண்டியன் வெளியிட்ட பதிவு | அஜித் படத்தில் இணையும் இளம் நடிகை | மே 17ல் ரிலீஸ் ஆகும் எலெக்சன் படம் | ஆளைக் கொல்லும் நடிப்பு : பஹத் பாசிலுக்கு நயன்தாரா பாராட்டு | துருவா சார்ஜா வீட்டு விழாவில் குடும்பத்துடன் பங்கேற்ற சஞ்சய் தத் | குஷ்புவுக்கு குழந்தை பிறக்காது என சொன்னார்கள் : மனம் திறந்த சுந்தர்.சி | கூலி டீசர் குறித்து விமர்சிக்கவில்லை : வெங்கட் பிரபு விளக்கம் | நடிப்பு குறித்து கிண்டலடித்த ரசிகைக்கு காட்டமாக பதில் அளித்த மாளவிகா மோகனன் | ஸ்ருதிஹாசன் பிரிவை உறுதி செய்த காதலன் |
யாரையும் விடுவதாக இல்லை சண்டக்கோழி நடிகரின் டீம். உச்ச நடிகர்களை சந்தித்ததை அடுத்து, சமீபத்தில் கேப்டனையும் சந்தித்து ஆதரவு கோரினார்கள். அதற்கு அவரோ, நான் அரசியலில் இருக்கிறேன். அதுவும் ஆளுங்கட்சிக்கு எதிரானவனாக இருக்கிறேன் இந்த நேரத்தில், என்னை சந்தித்தால் அவர்கள் அதிருப்தியாகி விடுவார்களே என்றாராம். அதோடு, அவர்களுக்கு ஆதரவானவர்கள் அனைவருமே நாட்டாமை பக்கம் திரும்பி விடவும் வாய்ப்பிருக்கிறது என்றும் அதிலுள்ள அரசியல் சூட்சுமத்தை சொன்னாராம். அதன்பிறகுதான், ஓ இப்படியும் ஒரு அரசியல் இருக்கிறதே என்பது சண்டகோழிக்கு உரைத்ததாம். ஆக, இந்த இடத்தில் வேகம் முக்கியமல்ல விவேகம்தான் முக்கியம். என்பதை உணர்ந்து விட்ட திமிறு நடிகர், இப்போது ஆளுங்கட்சி ஆதரவாளர்கள் தனக்கு எதிராக வாக்களித்து விடுவார்களோ என்று மண்டையை போட்டு குழப்பிக்கொண்டிருக்கிறாராம்.