'சக்திமான்' ஆக ரன்வீர் சிங்: பசில் ஜோசப் உறுதி | கோவை தமிழ் பிடிக்கும்: கிர்த்தி ஷெட்டி | அஜித் படத்தை இயக்கும் அளவுக்கு நான் இன்னும் வளரவில்லை! சொல்கிறார் இயக்குனர் ஸ்ரீ கணேஷ் | 'ஜனநாயகன்' கடைசி படமா? இல்லையா? இன்னும் முடிவெடுக்காத விஜய்! | ஜூலை 4ம் தேதி திரைக்கு வரும் சூர்யா சேதுபதியின் 'பீனிக்ஸ் வீழான்' | பிரகாசமான எதிர்காலம்: விஜய் வெளியிட்ட அறிக்கை! | அருண்குமார் இயக்கத்தில் நடிக்க தயாராகும் கமல்ஹாசன்! அன்பறிவ் இயக்கும் படம் தள்ளிப் போகிறது! | போதைப்பொருள் பயன்படுத்தியதாக நடிகர் ஸ்ரீகாந்த் கைது | சரிய வைத்த 'சிக்கந்தர்', காப்பாற்றிய 'குபேரா' | 'கூலி' முதல் சிங்கிள் அப்டேட்… இன்று மாலை 6 மணிக்கு… |
ஜோக்கர், ஆண் தேவதை போன்ற படங்கள் மற்றும் பிக்பாஸ், குக் வித் கோமாளி நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமானவர் நடிகை ரம்யா பாண்டியன். தொடர்ந்து தன்னுடைய சோசியல் மீடியாவில் கிளாமர் வீடியோ, புகைப்படங்களை வெளியிட்டு ரசிகர்களுடன் தொடர்பில் இருந்து வருகிறார். இந்த நிலையில் திருவண்ணாமலை கோயிலுக்கு தான் சென்ற புகைப்படத்தை பதிவிட்டுள்ள ரம்யா பாண்டியன் அதன் பயனாக தனது வாழ்க்கையில் ஏற்பட்ட திருப்பங்களை தெரிவித்திருக்கிறார்.
அந்த பதிவில், திருவண்ணாமலை எப்பொழுதுமே என்னுடைய இதயத்தில் ஒரு தனி இடத்தை பிடித்திருக்கிறது. காரணம் என் வாழ்க்கையை மாற்றிய கோயில் இதுதான். கடந்த ஆண்டு ஏப்ரல் முதல் இந்த ஆண்டு ஏப்ரல் வரை ஒவ்வொரு மாதமும் நான் கிரிவலம் சென்றேன். இந்த கோயில் என்னுடைய ஆன்மிக தொடர்பை குறிக்கும் வகையில் அமைந்திருக்கிறது. நான் சொல்லும் ஒவ்வொரு கோயிலும் தெய்வீக அழைப்பாக உணர்கிறேன். இந்த பயணத்தால் உண்மையிலேயே நான் ஆசீர்வதிக்கப்பட்டவளாக கருதுகிறேன் என்று தெரிவித்துள்ளார் நடிகை ரம்யா பாண்டியன்.