சமந்தா எத்தனை கார்கள் வைத்துள்ளார் தெரியுமா? | ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! |
திரைப்படத் தயாரிப்பாளரும், சமீபத்தில் நடிகையுடனான திருமண நிச்சயத்தை முறித்துக் கொண்டவருமான மணியான தயாரிப்பாளருக்கும், சமீபத்தில் உலக நாயகனை வைத்து படம் தயாரித்த இயக்குனர், தயாரிப்பாளருக்கும் நேற்று டிவிட்டரில் நடந்த கருத்துப் பரிமாற்றம் டோலிவுட்டில் பரபரப்பாகப் பேசப்படுகிறதுது. இரு தினங்களுக்கு முன் தயாரிப்பாளர், இயக்குனர் தன்னுடைய தயாரிப்பு நிறுவனம் மூலம் அலங்காரப் பொருள் ஒன்றில் பெயர் கொண்ட படம் ஒன்றை வாங்கி வெளியிடுகிறார் என்று அறிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்தே மணியான தயாரிப்பாளர் தன்னுடைய டிவிட்டர் பக்கத்தில் அந்த இயக்குனர், தயாரிப்பாளரைப் பற்றி கிண்டலடித்திருக்கிறார்.
சமீபத்தில் உலக நாயகனை வைத்து எடுத்த படத்தை வெளியிட முடியாமல் ரிலீசுக்கு முந்தைய நாள் பலரிடமும் பைனான்ஸ் கேட்டிருக்கிறார் தயாரிப்பாளர், இயக்குனர். அப்படி பணமே இல்லாத நிலையில் இப்போது புதுப் படம் ஒன்றை வாங்கியிருப்பதுதான் மணியான தயாரிப்பாளரை கிண்டலடிக்க வைத்திருக்கிறதாம். அப்படியென்றால் மணியான தயாரிப்பாளருக்கும், தயாரிப்பாளர், இயக்குனருக்கும் இடையே தொழில் முறையில் ஏதோ ஒன்று நடந்திருக்கிறது என்கிறார்கள்.
மணியான தயாரிப்பாளர் மஞ்சப் பையுடன் வந்த அந்த இயக்குனர் மஞ்சப் பையுடனே திரும்பப் போவார் போலிருக்கிறதே என்பது கிண்டலின் உச்சமாகப் பார்க்கப்படுகிறது. தன் திருமண விவகாரத்தை மீடியாக்கள் அவ்வளவு எழுதியும் கூட அதைப் பற்றி வாயைத் திறக்காதவர் தற்போது இந்த விவகாரத்தில் மட்டும் உடனே வாயைத் திறந்திருப்பது ஏன் ? என்கிறார்கள்.