தமிழ் சினிமாவில் இறங்கு முகமான ஓடிடி வியாபாரம் | ஜீவன் இல்லாத கதாபாத்திரங்களை தவிர்க்கிறேன்: பவ்யா திரிகா | வாட்ஸ்-அப்பில் வந்த லிங்க்கால் ஹேக் ஆன போன் : அபிஷேக் எச்சரிக்கை | கிங் படப்பிடிப்பில் ஷாரூக்கான் காயம் | ஒவ்வொரு தவறும் பாடம் கற்பிக்கிறது : தமன்னாவின் தத்துவப் பதிவு | ஸ்டன்ட் நடிகர் உயிரிழப்பு எதிரொலி : அக்ஷய்குமார் செய்த அருமையான செயல் | ஜூலை 22ல் கூலி படத்தின் மூன்றாவது பாடல் ரிலீஸ் | அடுத்த நல்ல வசூலுக்கு 80 நாட்களாகக் காத்திருக்கும் தமிழ் சினிமா | அடுத்து அஜித் படமா... : ஆதிக்ரவிச்சந்திரன் பதில் | டாப் 10… முதல் இரண்டு இடங்களில் 'குபேரா' |
தமிழ் சினிமாவின் டாப் நடிகராக இருந்து விரைவில் தனது கடைசி படத்துடன் சினிமாவை விட்டு விலக உள்ள நடிகர் இரு தினங்களுக்கு முன்பு தனது பிறந்தநாளைக் கொண்டாடினார். அவருக்கு வாழ்த்து தெரிவிப்பதற்காக ரசிகர்களும், கட்சித் தொண்டர்களும் சென்னை புறநகர்ப் பகுதியில் உள்ள அவரது வீட்டில் காத்திருந்தனர். ஆனால், நடிகர் யாரையும் வெளியில் வந்து பார்க்கவில்லை. அவர் அன்றைய தினம் அந்த வீட்டிலேயே இல்லை என்று கிசுகிசுக்கப்பட்டது. சென்னையின் முக்கிய பகுதியில் கடற்கரை அருகில் அமைந்துள்ள பிரம்மாண்ட வீட்டில் அன்றைய தினம் இரவு பிறந்தநாள் பார்ட்டியும் கொடுத்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. அவரது நட்பு வட்டாரத்தில் உள்ள முக்கிய நடிகர்கள், நடிகைகள் அதில் கலந்து கொண்டார்களாம். கோலிவுட் வட்டாரங்களில் இந்த 'பார்ட்டி' பற்றிய பேச்சுத்தான் தற்போது பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது.