பிளாஷ்பேக்: சோகத்தில் வென்ற ரஜினிகாந்தும், தோற்ற விஜயகாந்தும் | பிளாஷ்பேக்: கல்கியின் நிறைவேறாத கனவு | தெலுங்கில் மகேஷ்பாபுவின் உறவினருக்கு ஜோடியாக அறிமுகமாகும் ரவீனா டாண்டன் மகள் | 15 நாட்கள் கிடையாது.. 5 நாட்கள் தான் ; வா வாத்தியார் தயாரிப்பாளர் கெடுபிடி | நான் இப்போ சிங்கிள் : மூன்றாவது கணவரை பிரிந்த பிறகு நடிகை மீரா வாசுதேவன் அறிவிப்பு | கவுரவ ஆஸ்கர் விருது பெற்ற டாம் குரூஸ் | இரண்டு பாகங்களாக உருவாகும் பிரபாஸின் பவுஸி | வாரணாசி பட வில்லன் பிருத்விராஜ் ஹாலிவுட் பட பாதிப்பா? | விஜய்சேதுபதியா... துருவ் விக்ரமா... மணிரத்னம் சாய்ஸ் யார்? | விஷால் இயக்கி நடிக்கும் 'மகுடம்' படப்பிடிப்பு நிறைவு |

தமிழ் சினிமாவின் டாப் நடிகராக இருந்து விரைவில் தனது கடைசி படத்துடன் சினிமாவை விட்டு விலக உள்ள நடிகர் இரு தினங்களுக்கு முன்பு தனது பிறந்தநாளைக் கொண்டாடினார். அவருக்கு வாழ்த்து தெரிவிப்பதற்காக ரசிகர்களும், கட்சித் தொண்டர்களும் சென்னை புறநகர்ப் பகுதியில் உள்ள அவரது வீட்டில் காத்திருந்தனர். ஆனால், நடிகர் யாரையும் வெளியில் வந்து பார்க்கவில்லை. அவர் அன்றைய தினம் அந்த வீட்டிலேயே இல்லை என்று கிசுகிசுக்கப்பட்டது. சென்னையின் முக்கிய பகுதியில் கடற்கரை அருகில் அமைந்துள்ள பிரம்மாண்ட வீட்டில் அன்றைய தினம் இரவு பிறந்தநாள் பார்ட்டியும் கொடுத்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. அவரது நட்பு வட்டாரத்தில் உள்ள முக்கிய நடிகர்கள், நடிகைகள் அதில் கலந்து கொண்டார்களாம். கோலிவுட் வட்டாரங்களில் இந்த 'பார்ட்டி' பற்றிய பேச்சுத்தான் தற்போது பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது.