திருமணத்திற்கு பிறகு மும்பையில் குடியேறிய சமந்தா! | 'ஜனநாயகன்' டிக்கெட் முன்பதிவு தொடங்கியது! ஜெர்மனியில் 5.5 லட்சம் வரை வசூல்!! | 'தி கேர்ள்ப்ரெண்ட்' பட முழு ஸ்கிரிப்ட்டையும் ஆன்லைனில் அப்லோடு செய்த இயக்குனர் | சென்சார் கெடுபிடி காட்டிய இளம் நடிகரின் பட ரிலீசுக்கு உயர்நீதிமன்றம் கிரீன் சிக்னல் | மலேசியாவில் அஜித்தை சந்தித்த ஸ்ரீ லீலா | சின்னத்திரை நடிகர் சங்கத்தில் பெண்கள் அணி: சங்க தலைவர் பரத் தகவல் | நான் சொல்வதை அவன் கேட்கமாட்டான்: கூல் சுரேஷ் குறித்து சந்தானம் | தெலுங்கு சினிமாவில் ஒற்றுமை இல்லை! - தமன் ஆதங்கம் | 'மனா சங்கரா வரபிரசாந்த் காரு' படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்த படக்குழு! | பிளாஷ்பேக்: 'நடிப்பிசைப் புலவர்' கே ஆர் ராமசாமியை நாடறியும் நடிகனாக்கிய “பூம்பாவை” |

தமிழ் சினிமாவின் டாப் நடிகராக இருந்து விரைவில் தனது கடைசி படத்துடன் சினிமாவை விட்டு விலக உள்ள நடிகர் இரு தினங்களுக்கு முன்பு தனது பிறந்தநாளைக் கொண்டாடினார். அவருக்கு வாழ்த்து தெரிவிப்பதற்காக ரசிகர்களும், கட்சித் தொண்டர்களும் சென்னை புறநகர்ப் பகுதியில் உள்ள அவரது வீட்டில் காத்திருந்தனர். ஆனால், நடிகர் யாரையும் வெளியில் வந்து பார்க்கவில்லை. அவர் அன்றைய தினம் அந்த வீட்டிலேயே இல்லை என்று கிசுகிசுக்கப்பட்டது. சென்னையின் முக்கிய பகுதியில் கடற்கரை அருகில் அமைந்துள்ள பிரம்மாண்ட வீட்டில் அன்றைய தினம் இரவு பிறந்தநாள் பார்ட்டியும் கொடுத்துள்ளதாகத் தகவல் வெளியாகி உள்ளது. அவரது நட்பு வட்டாரத்தில் உள்ள முக்கிய நடிகர்கள், நடிகைகள் அதில் கலந்து கொண்டார்களாம். கோலிவுட் வட்டாரங்களில் இந்த 'பார்ட்டி' பற்றிய பேச்சுத்தான் தற்போது பரபரப்பாகப் பேசப்பட்டு வருகிறது.




