இனி உறுப்பினர் அல்லாதவர்கள் நடிப்பது கஷ்டம்: சின்னத்திரை நடிகர் சங்க தலைவர் பரத் | மைக்கை வைத்துவிட்டு வெளியேறட்டுமா? : வார் 2 விழாவில் டென்ஷனான ஜூனியர் என்டிஆர் | தலைமைக்கு போட்டியிடும் பெண் தயாரிப்பாளரின் வேட்பு மனு குறித்து முன்னாள் பார்ட்னர் எதிர் கருத்து | சிறையில் இருக்கும் நடிகை ரன்யா ராவின் வளர்ப்பு தந்தைக்கு மீண்டும் வழங்கப்பட்ட டிஜிபி பதவி | பிளாஷ்பேக்: திரைக்கதை வசனம் எழுதிய ரஜினி; வெள்ளித்திரையில் மின்னத் தவறிய “வள்ளி” | அபினய்-க்கு உதவிய தனுஷ் | இந்தியாவில் முதல் நாளில் வசூலைக் குவித்த படங்கள் | துருவ் விக்ரம் படத்தில் மூன்று கதாநாயகிகள்? | 'தலைவன் தலைவி' வெற்றி, சம்பளத்தை உயர்த்தும் விஜய் சேதுபதி? | ‛பல்டி'யில் கபடி வீரராக களமிறங்கிய சாந்தனு: முன்னோட்ட வீடியோ வெளியீடு |
கடந்த சில நாட்களாக கோலிவுட்டில் இனம் புரியாத அமைதி நிலவுகிறது. சிலரிடம் பயம் கலந்த பேச்சு இருக்கிறது. இன்னும் சிலர் துாக்கம் இல்லாமல் தவிக்கிறார்களாம். காரணம், போதை விவகாரத்தில் நடிகர் ஸ்ரீகாந்த் மாட்டி சிறை சென்றதுதான். அடுத்து அந்த நடிகர் சிக்கப்போகிறார், அந்த நடிகையிடம் விசாரணை நடக்கப்போகிறது, அந்த பார்ட்டிக்கு சென்றவர்களை போலீஸ் கண்காணிக்கிறது என தினமும் செய்திகள் கசிய, அதை படித்துவிட்டு பார்ட்டிக்கு செல்பவர்கள், இரவு பறவைகள் மிரண்டு போய் இருக்கிறார்களாம்.
நாம் அகப்படுவோமோ? நம் பெயர் வெளியே வருமா? நம்மை விசாரணைக்கு அழைப்பார்களா? அப்படியானால் நம் எதிர்காலம் என்று தவிக்கிறார்களாம். ஆனால் இன்னொரு தரப்போ அவ்வளவு துாரம் போகாது. சிலருடன் விசாரணை நின்றுவிடும். அதற்கான வேலைகள் நடந்து கொண்டு இருக்கின்றன என்று ஓரளவு தைரியத்தில் இருக்கிறார்களாம். தமிழ் சினிமாவில் போதை பொருள் பயன்பாடு இருக்கிறது. இந்த சூழ்நிலையிலாவது அதை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் இன்டஸ்ரி கெட்டுவிடும் என்பது பலரின் கருத்தாகவும் இருக்கிறது.