ஜி.வி.பிரகாஷின் ‛ஹேப்பி ராஜ்' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்ட துல்கர் சல்மான்! | என்னைப் பற்றி மாதம் ஒரு வதந்தியை பரப்புகிறார்கள்! கோபத்தை வெளிப்படுத்திய மீனாட்சி சவுத்ரி | திருமண கோலத்தில் அம்மாவுடன் எடுத்துக் கொண்ட நெகிழ்ச்சி புகைப்படத்தை வெளியிட்ட சமந்தா! | சூர்யா 47வது படத்தின் பூஜையுடன் அறிவிப்பு! | பிளாஷ்பேக்: இரண்டு முறை திரைப்பட வடிவம் பெற்ற மேடை நாடகம் “குமஸ்தாவின் பெண்” | சூர்யா, கார்த்தி உடன் பணிப்புரிந்தது குறித்து கீர்த்தி ஷெட்டி! | ரீ ரிலீஸ் ஆகும் தனுஷின் ‛தேவதையை கண்டேன்' | ‛அகண்டா 2' படத்திற்காக தியாகம் செய்த பாலகிருஷ்ணா, போயப்பட்டி ஸ்ரீனு! | ‛தூரான்தர்' படத்தின் வசூல் நிலவரம்! | ‛திரிஷ்யம் 3' படத்தின் வியாபாரம் குறித்து புதிய அப்டேட்! |

கடந்த சில நாட்களாக கோலிவுட்டில் இனம் புரியாத அமைதி நிலவுகிறது. சிலரிடம் பயம் கலந்த பேச்சு இருக்கிறது. இன்னும் சிலர் துாக்கம் இல்லாமல் தவிக்கிறார்களாம். காரணம், போதை விவகாரத்தில் நடிகர் ஸ்ரீகாந்த் மாட்டி சிறை சென்றதுதான். அடுத்து அந்த நடிகர் சிக்கப்போகிறார், அந்த நடிகையிடம் விசாரணை நடக்கப்போகிறது, அந்த பார்ட்டிக்கு சென்றவர்களை போலீஸ் கண்காணிக்கிறது என தினமும் செய்திகள் கசிய, அதை படித்துவிட்டு பார்ட்டிக்கு செல்பவர்கள், இரவு பறவைகள் மிரண்டு போய் இருக்கிறார்களாம்.
நாம் அகப்படுவோமோ? நம் பெயர் வெளியே வருமா? நம்மை விசாரணைக்கு அழைப்பார்களா? அப்படியானால் நம் எதிர்காலம் என்று தவிக்கிறார்களாம். ஆனால் இன்னொரு தரப்போ அவ்வளவு துாரம் போகாது. சிலருடன் விசாரணை நின்றுவிடும். அதற்கான வேலைகள் நடந்து கொண்டு இருக்கின்றன என்று ஓரளவு தைரியத்தில் இருக்கிறார்களாம். தமிழ் சினிமாவில் போதை பொருள் பயன்பாடு இருக்கிறது. இந்த சூழ்நிலையிலாவது அதை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லாவிட்டால் இன்டஸ்ரி கெட்டுவிடும் என்பது பலரின் கருத்தாகவும் இருக்கிறது.