ஒரே நேரத்தில் இரண்டு படங்களில் நடிக்கும் அஜித் குமார்! | சமுத்திரகனிக்கு பெரிய மனது: நெகிழ்ந்த பாலா | ராகவா லாரன்ஸின் ‛மாற்றம்' அமைப்பில் இணைந்த எஸ்.ஜே.சூர்யா! | விஜய் - அஜித்தை தொடர்ந்து விஜய் சேதுபதி படங்களும் ரீ ரிலீஸ் ஆகிறது! | பாடல் இல்லாத படத்துக்கு இசையமைக்கும் அனிருத்! | மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! |
பெல்ரத்தின இயக்குனரின் சமுத்திரம் படத்துல பெருமையோடு மகனை அறிமுகப்படுத்தினாரு ஓயாத அலைகள் நாயகன். சமுத்திரம் ரிலீசாகுறதுக்கு முன்பே மூணு படங்கள்ல மகனை புக் பண்ணினாங்க. ஓகே சொன்ன ஓயாத அலைகள் நாயகன், எழுத்துபூர்வமான ஒப்பந்தம் எதையும் போடலையாம். காரணம் படம் ரிலீசான பிறகு எந்த அளவுக்கு படம் ஹிட்டாகுதோ அந்த அளவுக்கு சம்பளத்தை கூட்டி கேக்கலாமுன்னு திட்டம் போட்டிருக்காரு. ஆனா படம் எதிர்பாராம ஃபிளாப் ஆனதுல ஏற்கெனவே வாரிசை நடிக்க கேட்டு வந்த தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும் இப்போ போன்கூட பண்றதில்லயாம். ஓயாத அலைகள் நாயகனே போன் போட்டு பேசினாலும் சரியான ரெஸ்பான்ஸ இல்லையாம். முதன் முதல்ல ஒப்பந்தம் போட வந்த "பயிற்சி யானை" பட டைரக்டர்கூட பின்வாங்கிட்டாராம். அதைத்தான் ஓயாத அலைகள் நாயகனுக்கு தாங்கிக் கொள்ள முடியலையாம். "முதல்லேயே எழுத்து பூர்வமா ஒப்பந்தம் போட்டிருந்தா இப்போ என் மகன் நடிச்சிக்கிட்டிருந்திருப்பான். வழக்கம்போல பேராசைப்பட்டு தப்பா பிளான் போட்டு மகன் வாழ்க்கையிலும் விளையாடிட்டிங்களே" என்று வீட்டு தாய்குலம் தினம் புலம்பித் தீர்க்குறாங்களாம்.