விஜய் பாணியை பின்பற்றினால் நல்லது: 'வாரிசு' தயாரிப்பாளர் தில் ராஜூ | விரைவில் 'லக்கி பாஸ்கர் 2': வெங்கி அட்லூரி அப்டேட் | கூலி திரைப்படம் ஐமேக்ஸில் வெளியாவதில் புதிய சிக்கல்? | காமெடி நடிகரின் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு 50 லட்சம் தர பிரபாஸ் வாக்குறுதி | படம் என்ன ஜானர் என்று ரிலீஸுக்கு முன்பே சொல்லிவிடுங்கள் ; சசிகுமார் வேண்டுகோள் | 'தொடரும்' கெட்டப்பில் புரோமோ வீடியோவுடன் பிக்பாஸ் சீசன் 7 அறிவிப்பை வெளியிட்ட மோகன்லால் | இன்ஸ்டாகிராமில் அனைத்து பதிவுகளையும் மொத்தமாக நீக்கிய ரன்வீர் சிங் ; ரசிகர்கள் கவலை | சூர்யா பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் தெலுங்கு 'அயன்' | அசோக் செல்வன் புதிய பட அப்டேட்! | 'பையா' பட தெலுங்கில் ரீ ரிலீஸ் ஆகிறது! |
இந்தியாவில் கொரோனா தாக்கம் கடந்த வருடம் மார்ச் மாதம் வந்த போது உடனடியாக தியேட்டர்கள் மூடப்பட்டன. மார்ச் மாத மத்தியில் மூடப்பட்ட தியேட்டர்கள் அக்டோபர் மாதத்திற்குப் பிறகு படிப்படியாக ஒவ்வொரு மாநிலமாக திறக்கப்பட்டது.
தமிழ்நாட்டில் நவம்பர் 10ம் தேதி தியேட்டர்கள் திறக்கப்பட்டன. 50 சதவீத இருக்கைகளுக்கு மட்டும் தான் அரசு அனுமதி வழங்கியது. அடுத்த சில நாட்களிலேயே தீபாவளியை முன்னிட்டு சில படங்கள் வெளிவந்தன. ஆனால், மக்கள் தியேட்டர்கள் பக்கம் மிக மிகக் குறைந்த அளவிலே வந்தனர். அப்போதும் அதற்கடுத்து இரண்டு மாதங்கள் வரையிலும் சினிமா என்ற ஒரு பொழுதுபோக்கையே மக்கள் மறந்துவிட்டார்களோ என்று யோசிக்க வைத்தது.
விஜய், விஜய்சேதுபதி நடித்த மாஸ்டர் படம் வெளிவந்தால் மக்கள் தியேட்டர்கள் பக்கம் மீண்டும் வருவார்கள் என பலரும் எதிர்பார்த்தார்கள். அவர்கள் எதிர்பார்ப்பும் வீண் போகவில்லை. ஜனவரி 13ம் தேதி வெளியான மாஸ்டர் படம் அரசு அனுமதித்த 50 சதவீத இருக்கைகளிலேயே பல தியேட்டர்கள் ஹவுஸ் புல் காட்சிகளாக நடைபெற்றன. நீண்ட இடைவெளிக்குப் பிறகு மக்கள் தியேட்டர்கள் பக்கம் மீண்டும் படையெடுத்து வந்ததால் தியேட்டர்காரர்கள் மகிழ்ந்தார்கள். ஆனால், அவர்களது மகிழ்ச்சி நிரந்தரமானதாக இல்லை. அதற்குப் பின் வெளிவந்த படங்களுக்கு மக்கள் வரவேயில்லை. சில முன்னணி நடிகர்களின் படங்கள் வந்த போதும் கூட அதை அவர்கள் பெரிதாக எண்ணவில்லை.
மார்ச் மாதத்திற்குப் பிறகு நவம்பர், டிசம்பர் மாதங்களில் சுமார் 37 படங்கள் வெளிவந்தன. அவற்றில் ஒரு படம் கூட வெற்றி பெறவில்லை, வசூலையும் குவிக்கவில்லை. ஜனவரி மாதத்திலாவது அது மாறும் என்று எதிர்பார்த்தார்கள். ஆனால், மாஸ்டர் படம் தவிர மற்ற அனைத்து படங்களுக்கும் நவம்பர், டிசம்பர் மாதத்திய நிலைமைதான் தொடர்ந்தது.
![]() |
ஜனவரி 13ம் தேதியன்று மாஸ்டர் படம் வெளிவந்தது. விஜய், விஜய் சேதுபதி முதல் முறையாக இணைந்து நடித்து வெளிவந்த படம். படத்திற்குக் கொஞ்சம் நெகட்டிவ்வான விமர்சனங்கள் வந்தாலும், அதற்கு முன்பு சுமார் ஒன்பது மாதங்கள் தியேட்டர்கள் பக்கமே போகாமல் இருந்த மக்களுக்கு இந்தப் படத்தை எப்படியும் தியேட்டரில் போய்ப் பார்க்க வேண்டும் என்ற ஆசை வந்தது. அதன் காரணமாகவே படத்திற்கு நல்ல வரவேற்பும், வசூலும் கிடைத்தது. 200 கோடியைக் கடந்து படம் வசூலித்துள்ளதாக கோலிவுட்டில் சொல்கிறார்கள்.
![]() |
பிப்ரவரி 5ம் தேதி “ஆட்கள் தேவை, சிதம்பரம் ரயில்வே கேட், களத்தில் சந்திப்போம், டிரிப்” ஆகிய படங்கள் வெளிவந்தன. இவற்றில் களத்தில் சந்திப்போம் படம் ஓரளவிற்கு ரசிக்கும்படியான படமாக இருந்தது. ஆனால், படத்திற்கு பெரிய அளவில் விளம்பரத்தைக் கொடுக்கவில்லை. அப்படி ஏதாவது செய்திருந்தால் இந்தப் படம் இன்னும் அதிகமான வசூலைக் கொடுத்திருக்கும். அப்படியும் படம் 25 நாட்கள் ஓடியதாக பின்னர் விளம்பரம் கொடுத்தார்கள்.
![]() |
பிப்ரவரி 26ம் தேதி “கால்ஸ், சென்னையில் ஓட ஓட, பாதி உனக்கு பாதி எனக்கு, சங்கத்தலைவன், சரியா தவறா, செந்தா, வேட்டை நாய்” ஆகிய படங்கள் வெளிவந்தன. சங்கத்தலைவன் படத்தை இயக்குனர் வெற்றிமாறன் வெளியிட்டார். படத்திற்கும் ஓரளவிற்கு விமர்சனங்கள் பாசிட்டிவ்வாகவே வந்தன. தனது இயக்கத்தில் வெளிவரும் படத்திற்கு இருக்கும் வரவேற்பு தான் வெளியிடும் படத்திற்கு இருக்க வாய்ப்பில்லை என்பதை வெற்றிமாறனுக்கு இந்தப் படம் உணர்த்தியிருக்கும்.
![]() |