ஜனநாயகன் குறித்து மகிழ்ச்சியான செய்தி | கலாபவன் மணியின் கனவை நனவாக்கிய மகள் | பேட்ரியாட் படத்தை திரையிடுவதில் கேரள திரையரங்குகள் திடீர் போர்க்கொடி | ஆக்ஷன் மோட் ஆன் : துரந்தர் 2 டிரைலர் வெளியானது | திருமணத்திற்கு ஜோடியாக வந்ததற்கு பதிலடிதான் சங்கீதாவின் புதிய மனு ? | சிரஞ்சீவி, கமல் உள்ளிட்டோருக்கு 2025ன் தெலங்கானா மாநில சினிமா விருதுகள் அறிவிப்பு | 'மேட் இன் கொரியா' இயக்குனர் மனைவியின் கதை : பிரியங்கா மோகன் | இசையில் மட்டும்தான் கவனம்: நடிப்பு தகவலுக்கு முற்றுப்புள்ளி வைத்த சாய் அபயங்கர் | ப்ளடி பாலிட்டிக்ஸ் : கொடி கம்ப அரசியல் | சந்தானம் ஜோடியான கோபிகா ரமேஷ் |

பிக்பாஸ் சீசன் 8 பல்வேறு திருப்பங்களுடன் விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. அண்மையில் வைல்டு கார்டு என்ட்ரியாக பிரபலங்கள் சிலர் உள்ளே நுழைந்துள்ளனர். இந்நிலையில், அண்மையில் நடைபெற்ற பிக்பாஸ் டாஸ்க்கில் போட்டியாளர்கள் தங்கள் வாழ்க்கையில் நடந்த சோமான சம்பவத்தை கூற வேண்டும். அந்த டாஸ்க்கில் பேசிய சத்யா, '5 வயதிலேயே என் அப்பா அம்மா பிரிந்துவிட்டார்கள். பாட்டி வீட்டில் வளர்ந்தேன். பாட்டியால் பார்த்துக் கொள்ள முடியாததால் போர்டிங் ஸ்கூலில் சேர்த்துவிட்டார்கள். அங்கு நான் ஒரு பெண்ணை காதலித்தேன். கல்லூரி செல்லும் வரை எங்கள் காதல் தொடர்ந்தது. ஒரு நாள் என் காதலி என்னிடம் சொல்லிவிட்டு தான் ஒரு இடத்திற்கு சென்றாள். ஆனால், அங்கு சிலர் அவரை பாலியல் வன்புணர்வு செய்து அவளை கொன்று ரயில்வே ட்ராக்கில் தூக்கி போட்டு சென்றுவிட்டார்கள். அதை என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. 5 முறை தற்கொலை முயற்சி செய்தேன். அதன் பின் சினிமா தான் எனக்குள் மாற்றத்தை கொண்டு வந்தது. என் பெற்றோர் காதலி என அனைவருமே என்னை விட்டு சென்றுவிட்டனர். அதன்பின் எனக்கு இன்னொரு காதல் வந்தது. அது தான் என் மனைவி ரம்யா' என உருக்கமாக பேசியிருந்தார். சத்யாவின் இந்த கதையானது சக போட்டியாளர்கள் ரசிகர்கள் என அனைவரையுமே கலங்க செய்துள்ளது.




