காசியில் தனுஷ்: கங்கைக்கு ஆரத்தி எடுத்து பிரார்த்தனை | ரீரிலீஸ் படத்துக்கு ஆதரவு கொடுக்காத ஹீரோக்கள் | 'நிஞ்சா' பட பூஜையில் நாய்: ஏன் தெரியுமா? | டேனியல் பாலாஜி இறந்தவிட்டார் என நம்ப முடியல: பிபி180 இயக்குனர் வேதனை | கடும் போட்டியை சந்திக்கப் போகும் 'ஜனநாயகன்' | 'ஸ்பைடர்' தோல்வி என் பயணத்தைத் தடுத்தது : ரகுல் ப்ரீத் சிங் | 'கைதி 2' எப்போது ஆரம்பமாகும் ? | நான் நிஜமாகவே அதிர்ஷ்டசாலி : மாளவிகா மோகனன் மகிழ்ச்சி | முதன்முதலில் அதிகமாக ட்ரோல் செய்யப்பட்ட படம் 'அஞ்சான்': இயக்குனர் லிங்குசாமி | கீர்த்தி சுரேஷ் வைத்த அன்பான கோரிக்கையை நிராகரித்த தனுஷ் |

ஜெயம் ரவி நடித்த கோமாளி திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன் அந்த படம் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றாலும் அதற்கடுத்து பிரதீப் ரங்கநாதனின் அடுத்த பட அறிவிப்பு வர தாமதமாகி வந்தது. அதற்கு காரணம் அவரது அடுத்த படத்தில் அவரே கதாநாயகனாக நடிக்கிறார் என்பதால் தான். ஏஜிஎஸ் நிறுவனம் தயாரித்து வரும் இந்த படத்தில் முக்கிய வேடத்தில் சத்யராஜும், ராதிகாவும் இணைந்து நடித்து வருகின்றனர்.
இவர்கள் இருவரும் நீண்ட இடைவெளிக்கு பிறகு இணைந்து நடிக்கும் படம் இது.. தற்போது நடைபெற்று வரும் இந்த படத்தின் படப்பிடிப்பில் இருவரும் கலந்து கொண்ட புகைப்படங்களை தனது சோசியல் மீடியா பக்கத்தில் பகிர்ந்துள்ளார் ராதிகா. மேலும் சத்யராஜுடன் நடிப்பது என்றால் எப்போதுமே ஜாலியான உரையாடலும் சந்தோசமுமாக இருக்கும், புதுவருடத்தை இப்படி துவங்குவதும் ஒருவகையில் நன்றாகத்தான் இருக்கிறது என்று கூறியுள்ளார் ராதிகா.