பட்டங்கள் வாழ்க்கைக்கு உதவுவதில்லை : ராஷ்மிகா | ஷங்கர் இயக்கத்தில் துருவ் விக்ரம்? | கேங்கர்ஸ் படத்தில் ஜந்து கெட்டப்பில் வடிவேலு! | பிளாஷ்பேக்: டைட்டில் பிரச்னை காரணமாக சிரஞ்சீவி படத்தில் இருந்து விலகிய ஸ்ரீதேவி | தவறுகள் செய்ய சல்மான் கான் பயப்பட மாட்டார் ; இயக்குனர் சூரஜ் பார்ஜாத்யா ஓபன் டாக் | மோகன்லாலின் எம்புரான் படத்தால் மீண்டும் தள்ளிப்போகிறது வீரதீரசூரன் ரிலீஸ் | லிப்லாக் காட்சியில் நடிக்க பிரதீப் ரங்கநாதனை வலியுறுத்திய இயக்குனர்கள் | காதலர் தினத்தில் காதலரை அறிமுகம் செய்த பிக்பாஸ் ஜாக்குலின் | மோகன்லாலின் ஆஸ்தான தயாரிப்பாளர் போர்க்கொடி ; கீர்த்தி சுரேஷின் தந்தைக்கு வலுக்கும் எதிர்ப்பு | எல்லோருக்குள்ளும் இதயம் முரளி இருக்கிறார்: அதர்வா நெகிழ்ச்சி |
சூர்யா நடிப்பில் வெளியான ஜெய்பீம் படம் வரவேற்பை பெற்றாலும் மிகப்பெரிய சர்ச்சைகளையும் உண்டாக்கியது. தற்போது பாண்டிராஜ் இயக்கத்தில் அவர் நடித்துள்ள எதற்கும் துணிந்தவன் படம் மார்ச் 10ஆம் தேதி திரைக்கு வருகிறது. இந்தப் படத்தில் சூர்யாவுடன், பிரியங்கா மோகன், சத்யராஜ், ராஜ்கிரன், வினைய், சூரி உள்பட பலர் நடிக்கடி, இமான் இசையமைத்துள்ளார்.
இந்தப்படத்தின் பிரஸ்மீட்டில் பேசிய சத்யராஜ், ‛‛ஜெய் பீம் படத்தில் சூர்யா நடித்தது மிகப்பெரிய துணிச்சலான விஷயம். அதனால் அவருக்கு புரட்சி நாயகன் என்ற பட்டத்தை கொடுக்கிறேன். மேலும், சூர்யா தனது படங்களில் பெரியார், அம்பேத்கரின் கருத்துக்களை அதிகமாக வெளிப்படுத்த வேண்டும். அவரது ரசிகர்களும் அதை பின்பற்ற வேண்டும். எம்ஜிஆரைப் போன்று திரையில் மட்டுமின்றி நிஜ வாழ்க்கையிலும் சூர்யா ஒரே மாதிரி இருக்கிறார். அதனால் அவருக்கு புரட்சி நாயகன் என்ற பட்டம் மிகப் பொருத்தமானது என்றார்.