இலவச மருத்துவமனை கட்டப்போகும் குக் வித் கோமாளி பாலா! | தாய்லாந்தில் பாக்சிங் பயிற்சி பெற்ற மீனாட்சி சவுத்ரி! | நயன்தாராவை பின்னுக்கு தள்ளிய திரிஷா! | மணமகனின் கழுத்தில் தாலி கட்டிய கவுரி கிஷன்! | மீண்டும் ரத்ன குமாருக்கு கிடைத்த வாய்ப்பு! | விஜய் சேதுபதி இயக்குனர் உடன் இணைந்த நயன்தாரா! | ஸ்டார் படத்தின் டப்பிங் பணிகளை முடித்த கவின்! | தனுஷ் படத்திற்கு நான்கு பாடல்களை முடித்த ஜி.வி.பிரகாஷ்! | நடிகர் கிஷன் தாசுக்கு திருமணம்: காதலியை மணக்கிறார் | தெலுங்கில் வெளியாகும் 'மஞ்சும்மேல் பாய்ஸ்' |
சூர்யா நடிப்பில் வெளியான ஜெய்பீம் படம் வரவேற்பை பெற்றாலும் மிகப்பெரிய சர்ச்சைகளையும் உண்டாக்கியது. தற்போது பாண்டிராஜ் இயக்கத்தில் அவர் நடித்துள்ள எதற்கும் துணிந்தவன் படம் மார்ச் 10ஆம் தேதி திரைக்கு வருகிறது. இந்தப் படத்தில் சூர்யாவுடன், பிரியங்கா மோகன், சத்யராஜ், ராஜ்கிரன், வினைய், சூரி உள்பட பலர் நடிக்கடி, இமான் இசையமைத்துள்ளார்.
இந்தப்படத்தின் பிரஸ்மீட்டில் பேசிய சத்யராஜ், ‛‛ஜெய் பீம் படத்தில் சூர்யா நடித்தது மிகப்பெரிய துணிச்சலான விஷயம். அதனால் அவருக்கு புரட்சி நாயகன் என்ற பட்டத்தை கொடுக்கிறேன். மேலும், சூர்யா தனது படங்களில் பெரியார், அம்பேத்கரின் கருத்துக்களை அதிகமாக வெளிப்படுத்த வேண்டும். அவரது ரசிகர்களும் அதை பின்பற்ற வேண்டும். எம்ஜிஆரைப் போன்று திரையில் மட்டுமின்றி நிஜ வாழ்க்கையிலும் சூர்யா ஒரே மாதிரி இருக்கிறார். அதனால் அவருக்கு புரட்சி நாயகன் என்ற பட்டம் மிகப் பொருத்தமானது என்றார்.