புஷ்கர் - காயத்ரி அடுத்த படத்தில் சிவகார்த்திகேயன்? | செல்வராகவன் நடிக்கும் புதிய பட அறிவிப்பு! | பைசன் படம் குறித்து இயக்குனர் ராம் வெளியிட்ட தகவல் | ஒர்க் அவுட்டின்போது டிரெண்டிங் பாடலுக்கு நடனமாடிய மிருணாள் தாக்கூர் | ஓடிடியில் வெளியான கமலின் தக் லைப் | சிம்பு படத்தில் சிவராஜ்குமார் இணைகிறாரா? | ஹாரிஸ் ஜெயராஜை கவுரவப்படுத்திய கனடா அரசாங்கம் | அஜித்திடம் ஏமாற்றத்தை வெளிப்படுத்திய விஷ்ணு மஞ்சு | எதிர்பார்ப்பை ஏற்படுத்திய ‛ராமாயணா' : அறிமுக வீடியோ வெளியீடு | மார்கோ 2 நிச்சயம் உருவாகும் : உன்னி முகுந்தன் விலகிய பிறகும் உறுதியாக நிற்கும் தயாரிப்பாளர் |
அமரர் கல்கி எழுதிய வரலாற்று காவியமான பொன்னியின் செல்வன் நாவலை எம்ஜிஆர், கமல் போன்றோர் படமாக்க முயன்றனர். ஆனால் கைகூடவில்லை. இப்போது மணிரத்னம் அதை படமாக எடுத்து முடித்துவிட்டார். பிரம்மாண்ட பட்ஜெட்டில் தயாராகி வரும் இந்த படத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், திரிஷா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மணிரத்னம் இயக்குவதோடு, லைகா உடன் இணைந்து தயாரிக்கிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.
இரண்டு பாகங்களாக வெளியாகும் இதன் படப்பிடிப்பு முடிந்து மற்ற பணிகள் நடக்கின்றன. ஜனவரி மாதமே முதல் பாகம் வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில் கொரோனாவால் பட பணிகள் முடியவில்லை. இதனால் வெளியீடு தள்ளி வைக்கப்பட்டது. இப்போது வருகிற செப்., 30ல் படம் வெளியாகும் என அறிவித்துள்ளனர். அதோடு விக்ரம், ஐஸ்வர்யா ராய், ஜெயம் ரவி, கார்த்தி, திரிஷா ஆகியோரின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளனர். ஒவ்வொருவரின் லுக்கும் அட்டகாசமாக இருப்பது படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி உள்ளது.