'பள்ளிச்சட்டம்பி' படப்பிடிப்பை நிறைவு செய்த கயாடு லோஹர் | நள்ளிரவு பூஜை நடத்திய பூ நடிகை | துக்கடா வேடங்களை ஒதுக்கும் புயல் காமெடியன் | எண்பதுகளின் கதாநாயகியை நினைவூட்டும் அனுபமா; நடிகை கோமலி பிரசாத் பாராட்டு | 'லோகா 2' மற்றும் 'பிரேமலு 2'வில் நான் இருக்கிறேனா ? மமிதா பைஜூ பதில் | வயலில் நாற்று நட நெல்லை மக்கள் தந்த பயிற்சி: அனுபமா பரமேஸ்வரனின் 'பைசன்' அனுபவம் | உழைக்கும் கரங்கள், எஜமான், கண்ணப்பா - ஞாயிறு திரைப்படங்கள் | பிளாஷ்பேக்: வெள்ளிவிழா ஆண்டின் நிறைவில் விண்வெளி நாயகன் கமல்ஹாசனின் “தெனாலி” | நடிகைகளை இதற்கு மட்டுமே பயன்படுத்துகிறார்கள் : ராதிகா ஆப்தே ஆதங்கம் | சென்சாரில் சிக்கிய பல்டி பட ஹீரோவின் படம் : உயர்நீதிமன்ற நீதிபதிக்காக தனிக்காட்சி திரையீடு |
அமரர் கல்கி எழுதிய வரலாற்று காவியமான பொன்னியின் செல்வன் நாவலை எம்ஜிஆர், கமல் போன்றோர் படமாக்க முயன்றனர். ஆனால் கைகூடவில்லை. இப்போது மணிரத்னம் அதை படமாக எடுத்து முடித்துவிட்டார். பிரம்மாண்ட பட்ஜெட்டில் தயாராகி வரும் இந்த படத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், திரிஷா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். மணிரத்னம் இயக்குவதோடு, லைகா உடன் இணைந்து தயாரிக்கிறார். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.
இரண்டு பாகங்களாக வெளியாகும் இதன் படப்பிடிப்பு முடிந்து மற்ற பணிகள் நடக்கின்றன. ஜனவரி மாதமே முதல் பாகம் வெளியாகும் என அறிவிக்கப்பட்ட நிலையில் கொரோனாவால் பட பணிகள் முடியவில்லை. இதனால் வெளியீடு தள்ளி வைக்கப்பட்டது. இப்போது வருகிற செப்., 30ல் படம் வெளியாகும் என அறிவித்துள்ளனர். அதோடு விக்ரம், ஐஸ்வர்யா ராய், ஜெயம் ரவி, கார்த்தி, திரிஷா ஆகியோரின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட்டுள்ளனர். ஒவ்வொருவரின் லுக்கும் அட்டகாசமாக இருப்பது படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி உள்ளது.