ரித்விகா திருமணம் திடீரென தள்ளிவைப்பு | தீபாவளிக்கு பிரதீப் ரங்கநாதனின் 2 படங்கள் போட்டி | இல்லங்களை ஆக்கிரமிக்க போகும் இந்த வார ஓடிடி ரிலீஸ்...! | பேட்ரியாட் படத்திற்கு மம்முட்டி எப்போது டப்பிங் பேசுகிறார் ? ; மோகன்லால் தகவல் | சைபர் கிரைம் நடவடிக்கை : பிரபாஸ் பட தயாரிப்பாளர் எச்சரிக்கை | ஷாருக்கான் மகன் டைரக்ஷனில் சிறப்பு தோற்றத்தில் சல்மான்கான், ரன்வீர் சிங் | 27 வருடங்களுக்குப் பிறகு இணைந்த கூட்டணி ; சம்மர் இன் பெத்லகேம் பார்ட்-2க்காகவா ? | அரசியல் பேசி சினிமா நண்பர்களை இழக்க விரும்பவில்லை : ‛உயிருள்ள வரை உஷா' ரீ-ரிலீஸ் நிகழ்வில் டி ராஜேந்தர் பேட்டி | 'மதராஸி' படத்தை வாங்கிய வேல்ஸ் நிறுவனம் | லவ் இன்சூரன்ஸ் கம்பெனி புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு |
தமிழ்த் திரையுலகத்தில் உள்ள முக்கியமான 24 தொழிலாளர் சங்கங்களை உள்ளடக்கிய பெப்சி அமைப்பினருக்கும், தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்திற்கும் இடையே நேற்று புதிய ஊதிய உயர்வு ஒப்பந்தம் அரசு தரப்பினர் முன் கையெழுத்தாகும் என்று பெப்சி தலைவர் ஆர்கே செல்வமணி தரப்பில் சொல்லப்பட்டிருந்தது. ஆனால், நேற்று அந்த புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகவில்லை.
தற்போது பெப்சி தொழிலாளர்களுக்கு அதிகபட்சமாக 40 சதவீதம் வரை ஊதிய உயர்வு வழங்க பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்பட்டதாகச் சொன்னார்கள். ஆனால், தயாரிப்பாளர் சங்கத் தரப்பில் சிலரும், பெப்சி அமைப்பில் அங்கம் வகிக்கும் சில சங்கங்களும் இதுகுறித்து தங்களது ஆட்சேபங்களைத் தெரிவித்தார்களாம். அதனால், இறுதி முடிவு எட்டப்படாமல் இழுபறி நிலைமை நீடித்து வருகிறதாம்.
கடந்த சில வருடங்களாகவே ஊதிய உயர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகாத நிலையில் இந்த புதிய ஒப்பந்தத்தை எதிர்பார்த்து காத்திருந்த பல தொழிலாளர் சங்கத்தினர் ஏமாற்றமடைந்துள்ளனர். கடைசி கட்டப் பேச்சு வார்த்தை தற்போது நடந்து வருகிறதாம். விரைவில் புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும் வாய்ப்புள்ளதாக கோலிவுட்டில் தெரிவிக்கிறார்கள்.