ரீ-ரிலீஸ் படங்களால் யாருக்கு லாபம்? | விஜய் கையில் காயம் : ரசிகர்கள் வருத்தம் | ரச்சிதா பிறந்தநாளில் வெளியான ‛பயர்' முன்னோட்ட வீடியோ | மே 3ல் ரிலீஸாகும் ‛குரங்கு பெடல்' | அஜித்துக்காக உருவாக்கப்பட்ட டைட்டிலில் அருண் விஜய் | பவன் கல்யாண் எத்தனை கார்கள் வைத்திருக்கிறார் தெரியுமா ? | இயக்குனர் சேரனின் மூத்த மகளுக்கு திருமணம் | மே 1ம் தேதி முதல் மாற்றம் : ராகவா லாரன்ஸ் | அருண் விஜய் நடிக்கும் ரெட்ட தல | சல்மான் கானுக்கு ஜோடியாக கியாரா அத்வானி? |
தமிழ்த் திரையுலகத்தில் உள்ள முக்கியமான 24 தொழிலாளர் சங்கங்களை உள்ளடக்கிய பெப்சி அமைப்பினருக்கும், தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கத்திற்கும் இடையே நேற்று புதிய ஊதிய உயர்வு ஒப்பந்தம் அரசு தரப்பினர் முன் கையெழுத்தாகும் என்று பெப்சி தலைவர் ஆர்கே செல்வமணி தரப்பில் சொல்லப்பட்டிருந்தது. ஆனால், நேற்று அந்த புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகவில்லை.
தற்போது பெப்சி தொழிலாளர்களுக்கு அதிகபட்சமாக 40 சதவீதம் வரை ஊதிய உயர்வு வழங்க பேச்சுவார்த்தையில் முடிவு எட்டப்பட்டதாகச் சொன்னார்கள். ஆனால், தயாரிப்பாளர் சங்கத் தரப்பில் சிலரும், பெப்சி அமைப்பில் அங்கம் வகிக்கும் சில சங்கங்களும் இதுகுறித்து தங்களது ஆட்சேபங்களைத் தெரிவித்தார்களாம். அதனால், இறுதி முடிவு எட்டப்படாமல் இழுபறி நிலைமை நீடித்து வருகிறதாம்.
கடந்த சில வருடங்களாகவே ஊதிய உயர்வு ஒப்பந்தம் கையெழுத்தாகாத நிலையில் இந்த புதிய ஒப்பந்தத்தை எதிர்பார்த்து காத்திருந்த பல தொழிலாளர் சங்கத்தினர் ஏமாற்றமடைந்துள்ளனர். கடைசி கட்டப் பேச்சு வார்த்தை தற்போது நடந்து வருகிறதாம். விரைவில் புதிய ஒப்பந்தம் கையெழுத்தாகும் வாய்ப்புள்ளதாக கோலிவுட்டில் தெரிவிக்கிறார்கள்.