பிக்பாஸ் ஜூலிக்கு டும் டும் : நிச்சயதார்த்தம் நடந்தது | பெங்களூருவிலும் மல்டிபிளக்ஸ் தியேட்டர் திறக்கும் மகேஷ் பாபு | படப்பிடிப்பு தொடங்கும் முன் ஓடிய ஹீரோயின் : டக்கென கமிட்டான மெகாலி | படையப்பா ரீ ரிலீஸ் : ரம்யா கிருஷ்ணன் மகிழ்ச்சி | உண்மை கதையில் விக்ரம் பிரபு | மீண்டும் தள்ளிப் போகிறதா லவ் இன்சூரன்ஸ் கம்பெனி? | காட்டேஜ் 'பெட்' சொல்லும் கதை | பெரும் தொகைக்கு விற்கப்பட்ட 'த்ரிஷ்யம் 3' | மதுபாலாவின் ‛சின்ன சின்ன ஆசை' | பிளாஷ்பேக் : இரண்டு காட்சிகளை வாங்கி இரண்டு படங்கள் தயாரித்த ஏவிஎம் |

மாடல் அழகியாக இருந்த அபிராமி வெங்கடாசலம் 2016ல் 'மிஸ்.தமிழ் நாடு' பட்டம் பெற்ற பிறகு கவனிக்கப்பட்டார். சின்னத்திரை தொடர்களில் நடிகையாகவும், தொகுப்பாளராகவும் இருந்தார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற பிறகு மேலும் பிரபலமாகி சினிமாவில் என்ட்ரி கொடுத்தார். நோட்டா, களவு படங்களில் சிறு கேரக்டரில் நடித்த அபிராமி அஜித் நடித்த 'நேர்கொண்ட பார்வை' படத்தில் முக்கிய வேடத்தில் நடித்தார்.
அதன் பிறகு ராக்கெட்டரி, வான் மூன்று படங்களில் நடித்தார். அவர் நடித்து முடித்துள்ள துருவ நட்சத்திரம், நெருஞ்சி உள்ளிட்ட சில படங்கள் வெளிவரவில்லை. புதிய வாய்ப்புகளும் இல்லை. இதனால் மீண்டும் சின்னத்திரைக்கே திரும்பி இருக்கிறார். ஜீ தமிழில் ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் 'நினைத்தேன் வந்தாய்' தொடரின் மூலம் ரீ என்ட்ரியாகி இருக்கிறார். இந்தத் தொடரில் 'சுடர்' கதாபாத்திரத்தில் நடித்துக் கொண்டிருந்த ஜாஸ்மின் ரத் விலக, அவருக்கு பதிலாக அபிராமி நடிக்கிறார்.
இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது : தொலைக்காட்சியில் தொகுப்பாளராகத்தான் எனது கலை பயணத்தை தொடங்கினேன். கொஞ்சம் இடைவெளி விழுந்த மாதிரி இருந்தது. இதனால் இன்னும் சில விஷயங்களை முயற்சி பண்ணி பார்க்கலாம் என்று முடிவு செய்து மீண்டும் சின்னத்திரைக்கு வந்திருக்கிறேன். இந்த தொடரில் வாய்ப்பு கிடைத்தது ஆச்சர்யமானது.
ரீ பிளேஸ் கேரக்டரில் நடிப்பது கொஞ்சம் சவாலானது. மக்கள் ஒரு கேரக்டரில் ஒரு முகத்தை பார்த்து பழகி இருப்பார்கள். அதே கேரக்டரில் இன்னொரு முகத்தை ஏற்றுக் கொள்வதற்கு கொஞ்சம் கால அவகாசம் எடுக்கும். அதற்காக கடுமையாக உழைக்க வேண்டும் என்பதும் எனக்கு தெரியும். இந்தத் தொடரில் நான்கு குழந்தைகளை அக்கறையாக கவனித்துக் கொள்கிற அம்மாவாக நடிக்கிறேன். பெண்கள் எல்லாருக்குள்ளேயும் தாயன்பு இயல்பாகவே இருக்கும். அதனால் நடிப்பதற்கும் எளிதாக இருக்கிறது. என்கிறார்.