சீதா மாதாவின் ஆசீர்வாதம் : சாய் பல்லவி மகிழ்ச்சி | பாலிவுட்டில் தென்னிந்திய நடிகர்களுக்கு மரியாதை இல்லையா : பிரியாமணி பதில் | 'பாபநாசம்' படத்தில் என் முதல் சாய்ஸ் ரஜினிதான்: ஜீத்து ஜோசப் பகிர்ந்த சுவாரஸ்ய தகவல் | தனுஷூக்கு ஜோடியாகும் பூஜா ஹெக்டே! | அஜித் பட ஹீரோயின் யார் | சினிமாவில் நடப்பதை மட்டும் பூதக் கண்ணாடி வச்சு பாக்காதீங்க : குஷ்பு காட்டம் | பழனி முருகன் கோவிலில் குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்த விக்னேஷ் சிவன் - நயன்தாரா | அர்ஜுன் தாஸ் குரலைப் பாராட்டிய பவன் கல்யாண் | சுதீப் 47 படத்தை இயக்கப் போகும் 'மேக்ஸ்' இயக்குனர் | புதிய சாதனை படைத்த 'ஹரிஹர வீரமல்லு' டிரைலர் |
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி சூப்பர் ஹிட் அடித்த தொடர்களில் ஒன்று ராஜா ராணி. வெற்றிகரமாக இரண்டு சீசன்களை முடிந்த இந்த தொடரின் முதல் சீசனில் ஆல்யாவும், சஞ்சீவும் நடித்திருந்தனர். தற்போது சஞ்சீவ் - கயல் தொடரிலும், ஆல்யா - இனியா தொடரிலும் நடித்து வருகின்றனர். இந்த இரண்டு தொடர்களும் விரைவில் முடிவுக்கு வரவுள்ளது. இதனையடுத்து ஆல்யாவும், சஞ்சீவ்வும் என்ன செய்யப் போகிறார்கள் என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடத்தில் நிலவி வந்தது. இந்நிலையில் ஆல்யா, சஞ்சீவ் மற்றும் இயக்குநர் பிரவீன் பென்னட் ஆகிய மூவரும் சேர்ந்து எடுத்துக் கொண்ட புகைப்படத்துடன் ராஜா ராணி 3க்கு காத்திருங்கள் அப்டேட் அதிகாரப்பூர்வமாக வெளியாகியுள்ளது. இதனால் ரசிகர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.