பணத்தை விட கதையே முக்கியம் - ஈஷா ரெப்பா | நானி படத்தை தமிழ், தெலுங்கில் இயக்கும் ஞானவேல் | விஜய் பிறந்தநாளில் 69 வது படத்தின் அறிவிப்பு வெளியாகிறது | ஸ்டார் படத்தில் பத்து பாடல்கள் | வாடிவாசல், புறநானூறு படங்கள் உருவாகுமா? - சூர்யா சொன்ன தகவல் | தமிழுக்கு வரும் ஆதியா பிரசாத் | மீண்டும் இணைந்த 'ஜோ' ஜோடி | காந்தியின் வாழ்க்கை தொடரில் இணைந்த ஹாலிவுட் நடிகர்கள் | கமல் மீது தயாரிப்பாளர் சங்கத்தில் லிங்குசாமி புகார் | ‛கூலி'க்கு இளையராஜா அனுப்பிய நோட்டீஸ் : ரஜினி கருத்து |
சின்னத்திரை பிரபலமான பாலா தனக்கு கிடைக்கும் வருமானத்தில் சமூக அக்கறையுடன் தன்னால் முடிந்த வரை பல உதவிகளை மக்களுக்கு செய்து வருகிறார். அதேபோல தான் நடிகர் லாரன்ஸும் பல ஆண்டுகளாக ஏழை எளிய மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கியுள்ளார்.
இந்நிலையில், பாலாவை நிகழ்ச்சி ஒன்றில் பாராட்டிய லாரன்ஸ், இனி பாலா செய்யும் உதவிகளில் என்னுடைய பங்கும் இருக்கும் என்று கூறியிருந்தார். அதற்கேற்றார் போல் இருவரும் ஒன்றாக சேர்ந்து திருவண்ணாமலை பகுதியை சேர்ந்த ஒரு பள்ளிக்கு கழிப்பறை வசதி செய்து கொடுத்தனர். மேலும், தற்போது கணவரை இழந்து மூன்று மகள்களை காப்பாற்றி வரும் ஒரு பெண்ணுக்கு ஆட்டோ வாங்கி கொடுத்து அவருக்கான வாழ்வாதாரத்தை உருவாக்கி கொடுத்துள்ளனர்.
முதல் சவாரியாக இவர்கள் இருவரும் ஆட்டோவில் அமர, முருகம்மாள் அந்த ஆட்டோவை ஓட்டி செல்கிறார். இது குறித்து வீடியோ ஒன்றை தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார் ராகவா லாரன்ஸ். இந்த வீடியோ வைரலாகி வருவதை அடுத்து அந்த பெண்ணுக்கு உதவி செய்த நடிகர்கள் ராகவா லாரன்ஸ்- பாலா ஆகிய இருவருக்கும் சோசியல் மீடியாவில் பாராட்டுக்கள் குவிந்து வருகிறது.