தக் லைப் டிரைலர் வெளியீடு : நீயா... நானா... என மோதும் கமல், சிம்பு! | தெலுங்கு தயாரிப்பு, இயக்குனர் படத்தில் ரஜினிகாந்த்? | பால்கே பயோபிக் ; ராஜமவுலி குழுவினர் சந்திக்கவேயில்லை - பால்கே பேரன் | குபேரா - தமிழக உரிமை வியாபாரம் எவ்வளவு தெரியுமா ? | இளையராஜா 'ரெபரன்ஸ்' : இரண்டு 200 கோடிகளை அள்ளிய மலையாளப் படங்கள் | குடும்பத்தை பிரித்தேனா... பொய்யான குற்றச்சாட்டு : மகளுடன் சேர்ந்து வாழ ரவி மோகனுக்கு மாமியார் கோரிக்கை | மே 24ல் ஜப்பானில் ரிலீஸ் ஆகும் டூரிஸ்ட் பேமிலி | புதிய படத்தின் ரிலீஸ் தேதியை அறிவித்த தமன்னா! | சிரஞ்சீவியின் 157-வது படத்தில் இணைந்த நயன்தாரா : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | டிடி நெக்ஸ்ட் லெவல், மாமன் படங்களின் முதல் நாள் வசூல் நிலவரம் என்ன? |
கன்னட சின்னத்திரை நடிகையான மதுமிதா தமிழ் சின்னத்திரை ரசிகர்கள் மத்தியிலும் பேவரைட்டான நடிகையாக மாறியுள்ளார். முன்னதாக கன்னடம், தெலுங்கு, தமிழ் ஆகிய மொழிகளில் ஏற்கனவே சீரியல்கள் நடித்திருந்தாலும் மதுமிதாவுக்கு எதிர்நீச்சல் சீரியலின் ஜனனி கதாபாத்திரம் தனியொரு இடத்தை பெற்று தந்துள்ளது. நன்றாக தமிழ் பேச கற்றுக்கொண்டுள்ள மதுமிதா அண்மையில் எதிர்நீச்சல் சீரியலில் நடிப்பது குறித்த தனது அனுபவங்களை பகிர்ந்துள்ளார்.
அதில், 'முன்னதாக நடித்த சீரியல்களில் ஓவர் ஆக்ட் செய்வேன். அது அந்த சீரியல்களுக்கு தேவைப்பட்டது. ஆனால் எதிர்நீச்சல் தொடர் நிஜவாழ்க்கையுடன் கனக்ட் ஆகிறது. மற்ற சீரியல்களை போல் அல்லாமல் எதிர்நீச்சல் தொடரில் அனைத்து கதாபாத்திரங்களுக்கும் முக்கியத்துவம் கிடைக்கிறது. ஈஸ்வரி, நந்தினி கதாபாத்திரங்கள் ஒவ்வொரு வீட்டிலும் இருக்கிறார்கள். குறிப்பாக மாரிமுத்து அனைவர் வீட்டிலும் இருக்கிறார். மாரிமுத்துவை அடிக்க வேண்டும் என என்னிடமே சொல்கிறார்கள். அந்த அளவிற்கு அனைவரிடத்திலும் ரீச்சாகியுள்ளது. இந்த தொடரில் நடிப்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சியை தருகிறது. 10 வருடம் இந்த சீரியல் தொடர்ந்தால் கூட கண்டிப்பாக நடிப்பேன். இங்கேயே செட்டிலாகிவிடுவேன்' என்று கூறியுள்ளார்.