2026ம் ஆண்டின் முதல் வெற்றி 25வது நாளில்… | வாய்ப்பை வீணாக்கும் 'லவ் இன்சூரன்ஸ் கம்பெனி' | ஓடிடியில் கடுமையாக டிரோல் செய்யப்படும் 'தி ராஜா சாப்' | ஓடிடியில் வெளியாகும் பொங்கல், சங்கராந்தி படங்கள் | சூர்யாவின் 'கருப்பு': விரைவில் ரிலீஸ் தேதி அறிவிப்பு | 'டாக்சிக்' தெலுங்கு வியாபாரம் 120 கோடி உண்மையா? | வாரணாசி வெளிநாட்டு உரிமை தான் ராஜமவுலியின் சம்பளம்? | ஆபாச தாக்குதல் : ஈஷா ரெப்பா போலீஸில் புகார் | மூன்றாம் பாகத்தோடு திரிஷ்யம் முடிவடைகிறது : ஜீத்து ஜோசப் | துரந்தர் 2 படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடித்த விக்கி கவுசல், யாமி கவுதம் |

இளையராஜாவின் இசையில் வெளிவந்த பாடல்கள், அவரைப் பற்றிய ரெபரன்ஸ் ஆகியவை தற்போது வெளியாகும் புதிய படங்களில் இடம் பெற்றால் அந்தப் படங்கள் ரசிகர்களைக் கவர்ந்து வசூலில் சாதனை படைக்கும் என்ற ஒரு சென்டிமென்ட் உருவாகிவிட்டது.
சமீபத்தில் தமிழில் வெளியான அஜித் நடித்த 'குட் பேட் அக்லி' படத்தில் அவரது மூன்று பாடல்களைப் பயன்படுத்தியது சர்ச்சையை ஏற்படுத்தியது. படத்தின் தயாரிப்பாளரோ, இயக்குனரோ, அல்லது படத்தின் நாயகன் அஜித்தோ இளையராஜாவை நேரில் மரியாதை நிமித்தமாக சந்தித்து அவரது பாடல்களைப் பயன்படுத்த அனுமதி கேட்டிருக்க வேண்டும் என்ற கருத்துதான் அதிகம் இருந்தது.
மலையாள சினிமா உலகில் இளையராஜாவை எந்த அளவிற்கு நேசிக்கிறார்கள், மதிக்கிறார்கள் என்பது சமீபத்தில் மோகன்லால் நடித்து வெளிவந்த 'தொடரும்' படத்தைப் பார்த்தவர்களுக்குப் புரிந்திருக்கும். படத்தில் கார் டிரைவரான மோகன்லால் இளையராஜாவின் ரசிகராக நடித்திருப்பார். இளையராஜாவைப் பாராட்டிப் பேசிய வசனமும் படத்தில் இடம் பெற்றது. அவரது பாடல்களை அவரிடம் முறையாக அனுமதி பெற்று பயன்படுத்தி இருக்கிறார்கள். அதற்காக அவரை நேரில் சந்தித்து படத்தின் கதையைப் பற்றிச் சொல்லி அனுமதி வாங்கியிருக்கிறார் தயாரிப்பாளர். 200 கோடிக்கும் அதிகமாக வசூலித்து மலையாள சினிமாவில் பெரும் வசூல் சாதனையைப் படைத்துள்ளது இந்தப் படம்.
கடந்த வருடம் வெளிவந்த 'மஞ்சும்மேல் பாய்ஸ்' படத்திலும் இளையராஜாவின் இசையில் வெளிவந்த 'குணா' படத்தின் 'கண்மணி அன்போடு' பாடல் இடம் பெற்றதுதான் படத்தின் ஹைலைட். அந்தப் படமும் 200 கோடிக்கும் அதிகமாக வசூலித்து சாதனை படைத்தது.
மலையாள சினிமா ரசிகர்கள் மற்ற மொழிக் கலைஞர்கள் அவ்வளவு சீக்கிரத்தில் நேசித்துவிட மாட்டார்கள் என்று சொல்வார்கள். ஆனால், இளையராஜா அதற்கு விதிவிலக்கானவர் என்பது மேலே சொன்ன படங்களின் வரவேற்பும், வசூலும் உணர்த்தும்.




