சூர்யாவின் கங்குவா குறித்து ஜோதிகா வெளியிட்ட தகவல் | மே 10ல் அஜித் இல்லாமல் தொடங்கும் குட் பேட் அக்லி படப்பிடிப்பு | முதலாவது 4ம் பாகத் திரைப்படம் - அசத்துமா அரண்மனை 4? | விரைவில் 'பாகுபலி' அனிமேஷன் சீரிஸ் | 'சங்கமித்ரா' படம் உருவாகும், சுந்தர் சி நம்பிக்கை | நடனத்தை கிண்டலடித்தவர்களுக்கு உருக்கமாக கோரிக்கை வைத்த ஜிமிக்கி கம்மல் நடிகை | பிரபாஸ் படத்திற்காக மகாபலிபுரத்தில் முகாமிட்டுள்ள தமன் | இல்லாத மகளைப் பற்றி மகன் கேட்டால் என்ன சொல்வேன்? - நவ்யா நாயர் கிண்டல் | ரிவால்வர் ரீட்டா படப்பிடிப்பு நிறைவு | பகலறியான்: ஒரே இரவில் நடக்கும் கதை |
இயற்கை விவசாயம், விவசாயிகளின் பிரச்சினை, ஆடு மாடு வளர்ப்பு பற்றிய கதை களத்தை கொண்ட திரைப்படங்கள் அதிக அளவில் வரத் தொடங்கி உள்ளது. அந்த மாதிரியான கதைகளத்தை கொண்ட சின்னத்திரை தொடர்களும் உருவாகிறது.
அந்த வரிசையில் விஜய் தொலைக்காட்சியில் விரைவில் ஒளிபரப்பாக இருக்கும் புதிய தொடர் முத்தழகு. அமீர் இயக்கத்தில் கார்த்தி, பிரியாமணி நடித்த பருத்தி வீரன் படத்தில் பிரியாமணியின் கேரக்டர் பெயர்தான் முத்தழகு. கிராமத்து தெனாவெட்டான பெண். அந்த பெயரையே சீரியலுக்கு டைட்டிலாக வைத்திருக்கிறார்கள்.
முத்தழகு விவசாயத்தையும், கிராமத்து வாழ்க்கையையும் தேர்வு செய்து வாழ்கிறார்கள். அவளது வாழ்க்கையின் ஊடாக விவசாயத்தின் பெருமை, மனிதர்களுக்கும் ஆடு, மாடுகளுக்கும் இருக்கிற பிணைப்பு குறித்து மண்வாசனையுடன் தயாராகி வருகிறது. இதில் நடிக்கும் அனைவரும் புதுமுகங்கள் என்கிறார்கள். படப்பிடிப்பு நடந்து வருகிறது. சீரியல் பற்றிய முதல் கட்ட அறிவிப்பை விஜய் டி.வி வெளியிட்டுள்ளது.