கதை நாயகியான தான்யா ரவிச்சந்திரன் | விஜய் தேவரகொண்டாவின் 'குஷி' படப்பிடிப்பு விரைவில் தொடக்கம் | கதையே வாகை சூடும் : 'வீரமே வாகை சூடும்' டிம்பிள் ஹயாதி | இலங்கை மியூசியத்தில் என் படம்: போண்டா மணி நெகிழ்ச்சி | நடிகை துன்புறுத்தல் வழக்கில் மீண்டும் ஜாமினுக்கு விண்ணப்பித்த பல்சர் சுனி | சன்னி லியோன் நிகழ்ச்சி நடைபெற உள்ள இடத்திற்கு அருகே குண்டு வெடித்ததால் பரபரப்பு | 30 குண்டுகள் முழங்க காவல்துறை மரியாதையுடன் வாணி ஜெயராம் உடல் தகனம் | ஏஜென்ட் ரிலீஸ் தேதி அறிவிப்பு ; அகிலுக்கு வாழ்த்து சொன்ன சமந்தா | சர்ச்சையில் சிக்கிய விஜய்யின் 'லியோ' படத்தின் புரோமோ வீடியோ | நடிகர்களை தலைவர் என்று அழைப்பது நெருடலாக உள்ளது - வெற்றிமாறன் கருத்து |
தமிழ் பிக்பாஸ் ஐந்தாவது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்ட நமீதா மாரிமுத்து, திடீரென நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார். இந்நிலையில் சமீபத்தில் வெளியான அவரது வீடியோ சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
பிக்பாஸில் கலந்து கொண்ட நமீதா மாரிமுத்துவின் சோக கதை சக போட்டியாளர்கள் உள்பட ரசிகர்களையும் வருத்தம் கொள்ள செய்தது. அதன் காரணமாக அவருக்கு மக்களின் ஆதரவும் அதிகரித்தது. பிக்பாஸ் வீட்டில் நமீதா முக்கிய போட்டியாளராக இருப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீரென்று நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார். அதற்கு காரணம் அவரது உடல்நிலை சரியில்லாமல் சிகிச்சை எடுத்து வருகிறார் என சொல்லப்பட்டது. மேலும் அவர் மீண்டும் பிக்பாஸ் வீட்டினுள் செல்ல இருப்பதாகவும் கூறப்பட்டது.
இந்நிலையில் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறியுள்ள நமீதா தன்னுடைய முதல் வீடியோவை பதிவேற்றியுள்ளார். அதில் ஏழை குழந்தைகளுக்கு ஆடைகள் வாங்கிக் கொடுத்து நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார். பிக்பாஸ் வீட்டுக்குள் இருக்கும்போதே சமூக நல அக்கறைகள் மற்றும் செயல்பாடுகள் குறித்து பேசிய நமீதா மாரிமுத்து அவற்றை தொடர்ந்து செய்து வருகிறார். இதனை பார்க்கும் ரசிகர்கள் நமீதாவின் இந்த அறப்பணிகளை வாழ்த்தி பதிவிட்டு வருகின்றனர்.