சூர்யா 46 வது படம் குறித்து ஜி.வி.பிரகாஷ் கொடுத்த அப்டேட் | ரசிகர்களின் கோரிக்கையை நிறைவேற்றிய சிம்பு | மண்டாடி படத்தில் படகு ரேஸ் வீரராக நடிக்கும் சூரி | 'திரெளபதி 2' படத்தில் பாடியதற்காக மன்னிப்பு கேட்ட சின்மயி | மஞ்சு வாரியரிடம் கமல் வைத்த கோரிக்கை | நகைச்சுவைக்கு நேரமும் இயல்பான வெளிப்பாடும் அவசியம் : ஷ்ரேயா ஷர்மா | ராம்சரண் படத்தின் சண்டைக் காட்சியை படமாக்கும் பாலிவுட் ஹீரோவின் தந்தை | என் மகனை திரையுலகிலிருந்து ஒதுக்க சதி ; பிரித்விராஜின் தாயார் பகீர் குற்றச்சாட்டு | 500 நடன கலைஞர்களுடன் நடைபெற்று வரும் சிரஞ்சீவி, வெங்கடேஷ் பாடல் படப்பிடிப்பு | பாட்டிலை தலையில் உடைத்து போஸ்டருக்கு ரத்த திலகம் இட்ட மகேஷ்பாபு ரசிகர் |

தமிழ் பிக்பாஸ் ஐந்தாவது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்ட நமீதா மாரிமுத்து, திடீரென நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார். இந்நிலையில் சமீபத்தில் வெளியான அவரது வீடியோ சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.
பிக்பாஸில் கலந்து கொண்ட நமீதா மாரிமுத்துவின் சோக கதை சக போட்டியாளர்கள் உள்பட ரசிகர்களையும் வருத்தம் கொள்ள செய்தது. அதன் காரணமாக அவருக்கு மக்களின் ஆதரவும் அதிகரித்தது. பிக்பாஸ் வீட்டில் நமீதா முக்கிய போட்டியாளராக இருப்பார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் திடீரென்று நிகழ்ச்சியை விட்டு வெளியேறினார். அதற்கு காரணம் அவரது உடல்நிலை சரியில்லாமல் சிகிச்சை எடுத்து வருகிறார் என சொல்லப்பட்டது. மேலும் அவர் மீண்டும் பிக்பாஸ் வீட்டினுள் செல்ல இருப்பதாகவும் கூறப்பட்டது.
இந்நிலையில் பிக்பாஸ் வீட்டிலிருந்து வெளியேறியுள்ள நமீதா தன்னுடைய முதல் வீடியோவை பதிவேற்றியுள்ளார். அதில் ஏழை குழந்தைகளுக்கு ஆடைகள் வாங்கிக் கொடுத்து நலத்திட்ட உதவிகளை செய்து வருகிறார். பிக்பாஸ் வீட்டுக்குள் இருக்கும்போதே சமூக நல அக்கறைகள் மற்றும் செயல்பாடுகள் குறித்து பேசிய நமீதா மாரிமுத்து அவற்றை தொடர்ந்து செய்து வருகிறார். இதனை பார்க்கும் ரசிகர்கள் நமீதாவின் இந்த அறப்பணிகளை வாழ்த்தி பதிவிட்டு வருகின்றனர்.




