அடுத்தடுத்து வசூல் சாதனை படைத்த ஹாலிவுட் படங்கள் | அப்ப, ஜனநாயகன் வரலையா... : ஜூன் 19ல் நுாறு சாமி ரிலீஸ் | இழந்த பெருமை, வசூலை மீண்டும் மீட்பாரா ராம் சரண்? | மும்பை அருகே நிலம் வாங்கிய யஷ் | கில்லர் படப்பிடிப்பு தளத்தில் விபத்து நடந்தது எப்படி | லோகேஷ் கனகராஜ் - அல்லு அர்ஜுன் படம் டிராப் ஆகிறதா? | 'பெத்தி' படத்திற்கு டிக்கெட் உயர்வு ஆணை அளித்தது தெலுங்கானா அரசு | கில்லர் படத்துக்கு தொடரும் தடங்கல்கள் : அப்செட்டில் எஸ்.ஜே.சூர்யா | தமிழகத்தில் ‛கருப்பு' படத்தை பார்த்த ஒரு கோடி பேர் | ஜூன் 15ல் ஓடிடியில் வெளியாகும் ‛கெணத்த காணோம்' |

தவமாய் தவமிருந்து படத்தில் சேரனின் ஜோடியாக தமிழில் அறிமுகமானவர் பத்மப்ரியா. அடுத்து சத்தம் போடாதே, மிருகம் உள்ளிட்ட படங்களில் நடித்தவருக்கு தமிழில் பெரிதாக வாய்ப்புகள் வரவில்லை.. அதேசமயம் மலையாள திரையுலகில் பிஸியான நடிகையாக வலம் வந்தார். ஆனால் திருமணம் செய்துகொண்ட பின் வாய்ப்புகள் குறைந்தது. மேலும் மீடூ தொடர்பான விவகாரத்தில் நடிகர் சங்கத்துடன் குறிப்பாக மோகன்லாலுடன் மோதல் போக்கை கடைபிடித்ததால் சுத்தமாக பட வாய்ப்பே இல்லாமல் போனது.
இந்தநிலையில் தான் தமிழில் ரீ என்ட்ரி கொடுக்கும் விதமாக விக்ரமின் கோப்ரா படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார் பத்மப்ரியா.. தற்போது மலையாளத்திலும் பிஜுமேனன் கதாநாயகனாக நடிக்கும் 'ஒரு தெக்கன் தள்ளு கேஸ்' என்கிற படத்தில் கதாநாயகியாக ஒப்பந்தமாகி இருக்கிறார் பத்மப்ரியா. இது எழுத்தாளர் இந்துகொபன் எழுதிய 'அம்மினிப்பிள்ள வெட்டு கேஸ்' என்கிற நாவலை தழுவி உருவாகிறது. தற்போது மோகன்லால் நடிக்கும் ப்ரோ டாடி படத்தின் கதாசிரியரான ஸ்ரீஜித், இந்தப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார்.




