மகாதேவ் சூதாட்ட செயலி வழக்கு: நடிகர் சாஹில் கான் கைது | விஜயகாந்த்க்கு மே 9ல் பத்ம பூஷன் விருது: பிரேமலதா தகவல் | முத்தக்காட்சிகளால் படங்களை இழந்தேன்: மிருணாள் தாக்கூர் | ஹிந்திக்கு செல்லும் தில் ராஜூ! | ரன்வீர் சிங்கை இயக்கும் ஹனுமான் பட இயக்குனர்! | மே 1ம் தேதி ரீ ரிலீஸாகும் தீனா படம்! | கவின், ஆண்ட்ரியா படத்திற்கு இசையமைக்கும் ஜி.வி. பிரகாஷ்! | ஹாலிவுட்டில் ரீ ரிலீசாகிறது 'இன்டர்ஸ்டெல்லர்' | பெண்களை அடிமைப்படுத்தும் 'பரதா': சர்ச்சையுடன் உருவாகும் புதிய படம் | இணையத்தில் கசிந்த 'ராமாயணம்' படப்பிடிப்பு காட்சிகள்: படக்குழு அதிர்ச்சி |
தவமாய் தவமிருந்து படத்தில் சேரனின் ஜோடியாக தமிழில் அறிமுகமானவர் பத்மப்ரியா. அடுத்து சத்தம் போடாதே, மிருகம் உள்ளிட்ட படங்களில் நடித்தவருக்கு தமிழில் பெரிதாக வாய்ப்புகள் வரவில்லை.. அதேசமயம் மலையாள திரையுலகில் பிஸியான நடிகையாக வலம் வந்தார். ஆனால் திருமணம் செய்துகொண்ட பின் வாய்ப்புகள் குறைந்தது. மேலும் மீடூ தொடர்பான விவகாரத்தில் நடிகர் சங்கத்துடன் குறிப்பாக மோகன்லாலுடன் மோதல் போக்கை கடைபிடித்ததால் சுத்தமாக பட வாய்ப்பே இல்லாமல் போனது.
இந்தநிலையில் தான் தமிழில் ரீ என்ட்ரி கொடுக்கும் விதமாக விக்ரமின் கோப்ரா படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து வருகிறார் பத்மப்ரியா.. தற்போது மலையாளத்திலும் பிஜுமேனன் கதாநாயகனாக நடிக்கும் 'ஒரு தெக்கன் தள்ளு கேஸ்' என்கிற படத்தில் கதாநாயகியாக ஒப்பந்தமாகி இருக்கிறார் பத்மப்ரியா. இது எழுத்தாளர் இந்துகொபன் எழுதிய 'அம்மினிப்பிள்ள வெட்டு கேஸ்' என்கிற நாவலை தழுவி உருவாகிறது. தற்போது மோகன்லால் நடிக்கும் ப்ரோ டாடி படத்தின் கதாசிரியரான ஸ்ரீஜித், இந்தப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார்.