ரித்விகா திருமணம் திடீரென தள்ளிவைப்பு | தீபாவளிக்கு பிரதீப் ரங்கநாதனின் 2 படங்கள் போட்டி | இல்லங்களை ஆக்கிரமிக்க போகும் இந்த வார ஓடிடி ரிலீஸ்...! | பேட்ரியாட் படத்திற்கு மம்முட்டி எப்போது டப்பிங் பேசுகிறார் ? ; மோகன்லால் தகவல் | சைபர் கிரைம் நடவடிக்கை : பிரபாஸ் பட தயாரிப்பாளர் எச்சரிக்கை | ஷாருக்கான் மகன் டைரக்ஷனில் சிறப்பு தோற்றத்தில் சல்மான்கான், ரன்வீர் சிங் | 27 வருடங்களுக்குப் பிறகு இணைந்த கூட்டணி ; சம்மர் இன் பெத்லகேம் பார்ட்-2க்காகவா ? | அரசியல் பேசி சினிமா நண்பர்களை இழக்க விரும்பவில்லை : ‛உயிருள்ள வரை உஷா' ரீ-ரிலீஸ் நிகழ்வில் டி ராஜேந்தர் பேட்டி | 'மதராஸி' படத்தை வாங்கிய வேல்ஸ் நிறுவனம் | லவ் இன்சூரன்ஸ் கம்பெனி புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு |
தவமாய் தவமிருந்து, பொக்கிஷம் உள்ளிட்ட படங்களில் நடித்து சேரனின் ஆஸ்தான நாயகியாக அறியப்பட்டவர் நடிகை பத்மபிரியா. ஒரு கட்டத்தில் படிப்பு, திருமணம் என வெளிநாட்டில் செட்டிலான பத்மப்ரியா, கிட்டத்தட்ட ஐந்து வருடத்திற்கு பிறகு மீண்டும் மலையாள திரையுலகில் தெக்கன் தள்ளு கேஸ் என்கிற படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்துள்ளார். பிரித்விராஜ் இயக்கி நடித்த ப்ரோ டாடி படத்திற்கு கதை எழுதிய ஸ்ரீஜித் என்பவர் இந்தப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகியுள்ளார். இந்த படத்தில் பிஜுமேனனுக்கு ஜோடியாக நடித்துள்ளார் பத்மபிரியா. இந்த படத்தில் இன்னொரு கதாநாயகியாக நிமிஷா சஜயன் நடித்துள்ளார்.
இந்த படம் குறித்து பத்மபிரியா கூறும்போது, “இது எண்பதுகளில் ஒரு சிறிய கிராமத்தில் நடைபெறும் கதையாக உருவாகியுள்ளது. பிஜுமேனன் மனைவியாக ருக்மணி என்கிற கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். கிட்டத்தட்ட எண்பதுகளில் வாழ்ந்த என்னுடைய பாட்டியின் குணாதிசயங்களை, அவரது வாழ்க்கையை ஞாபகப்படுத்தும் கதாபாத்திரமாக இது அமைந்துள்ளது. இந்த படத்தில் எனக்கும் பக்கத்து வீட்டு பெண்ணாக நடித்துள்ள நிமிஷா சஜயனுக்குமான நட்பு இதுவரை இந்திய சினிமாவில் நான் பார்த்திராத ஒன்று. ஒருவருக்கொருவர் அதீத அன்பும் கவனமும் எடுத்துக்கொண்டு தங்களது நட்பை வெளிப்படுத்தும் அப்படி ஒரு அழகான ரிலேஷன்ஷிப் இந்த படத்தில் இடம்பெற்றுள்ளது” என்று சிலாகித்து கூறியுள்ளார்.