மீண்டும் வருகிறோம்- மங்காத்தா படப்பிடிப்பு புகைப்படங்களை வெளியிட்ட வெங்கட் பிரபு! | ஜனவரி 23ல் ஓடிடியில் வெளியாகும் தனுஷின் தேரே இஸ்க் மெய்ன்! | விஜய் ஆண்டனி, ஜிவி பிரகாஷ்குமார் வரிசையில் கங்கை அமரன், தேவிஸ்ரீ பிரசாத் | 25 ஆண்டுகளுக்கு பின் மறுமணமா : பார்த்திபனின் 'நச்' பதில் | ஜனநாயகன் வழக்கில் தீர்ப்பு ஒத்திவைப்பு; நீதிமன்ற முழு வாதங்கள் இதோ... | மீண்டும் அப்பாவாகிறார் அட்லி | பிளாஷ்பேக் : ஆக்ஷன் ஹீரோவாக நடித்த ரகுவரன் | பிளாஷ்பேக் : ஒரே படத்தில் இரண்டு கதைகள் | ஜப்பானில் 'புஷ்பா 2' படத்திற்கு குறைவான வரவேற்பு | உண்மை சம்பவங்கள் பின்னணியில் 'மை லார்ட்' |

தவமாய் தவமிருந்து, பொக்கிஷம் உள்ளிட்ட படங்களில் நடித்து சேரனின் ஆஸ்தான நாயகியாக அறியப்பட்டவர் நடிகை பத்மபிரியா. ஒரு கட்டத்தில் படிப்பு, திருமணம் என வெளிநாட்டில் செட்டிலான பத்மப்ரியா, கிட்டத்தட்ட ஐந்து வருடத்திற்கு பிறகு மீண்டும் மலையாள திரையுலகில் தெக்கன் தள்ளு கேஸ் என்கிற படத்தின் மூலம் ரீ என்ட்ரி கொடுத்துள்ளார். பிரித்விராஜ் இயக்கி நடித்த ப்ரோ டாடி படத்திற்கு கதை எழுதிய ஸ்ரீஜித் என்பவர் இந்தப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகியுள்ளார். இந்த படத்தில் பிஜுமேனனுக்கு ஜோடியாக நடித்துள்ளார் பத்மபிரியா. இந்த படத்தில் இன்னொரு கதாநாயகியாக நிமிஷா சஜயன் நடித்துள்ளார்.
இந்த படம் குறித்து பத்மபிரியா கூறும்போது, “இது எண்பதுகளில் ஒரு சிறிய கிராமத்தில் நடைபெறும் கதையாக உருவாகியுள்ளது. பிஜுமேனன் மனைவியாக ருக்மணி என்கிற கதாபாத்திரத்தில் நடித்துள்ளேன். கிட்டத்தட்ட எண்பதுகளில் வாழ்ந்த என்னுடைய பாட்டியின் குணாதிசயங்களை, அவரது வாழ்க்கையை ஞாபகப்படுத்தும் கதாபாத்திரமாக இது அமைந்துள்ளது. இந்த படத்தில் எனக்கும் பக்கத்து வீட்டு பெண்ணாக நடித்துள்ள நிமிஷா சஜயனுக்குமான நட்பு இதுவரை இந்திய சினிமாவில் நான் பார்த்திராத ஒன்று. ஒருவருக்கொருவர் அதீத அன்பும் கவனமும் எடுத்துக்கொண்டு தங்களது நட்பை வெளிப்படுத்தும் அப்படி ஒரு அழகான ரிலேஷன்ஷிப் இந்த படத்தில் இடம்பெற்றுள்ளது” என்று சிலாகித்து கூறியுள்ளார்.




