ஜெயம் ரவியை வைத்து இரண்டு இரண்டாம் பாக படங்களை இயக்கும் மோகன் ராஜா | படைப்பாளிகளை அவமதிக்கும் செயல் : ஞானவேல் ராஜாவிற்கு பாரதிராஜா கண்டனம் | ஹிந்தி படத்தை இயக்கும் அஜய் ஞானமுத்து | சொந்த வீடு கனவை நனவாக்கிய சரண்யா | கன்னடத்தில் ஹீரோயினாக வரவேற்பு பெற்ற தமிழ் சீரியல் நடிகை | கார்த்தியுடன் நடிக்கும் சீரியல் நடிகை | சந்தீப் ரெட்டி வங்கா இயக்கத்தில் மகேஷ் பாபு? | கங்குவா படத்தில் ராணா? | தெலுங்கைத் தொடர்ந்து தமிழில் ரீ ரிலீஸ் ஆகும் முத்து | மகாநதி தொடரில் என்ட்ரி கொடுக்கும் திவ்யா கணேஷ் |
‛அண்ணாத்த' படத்திற்கு பின் ரஜினி நடிக்கும் 169வது படம் ‛ஜெயிலர்'. ‛பீஸ்ட்' படத்தை இயக்கிய நெல்சன் திலீப் குமார் இயக்குகிறார். அனிருத் இசையமைக்கிறார். ஐஸ்வர்யா ராய், பிரியங்கா மோகன், சிவராஜ் குமார், யோகி பாபு உள்ளிட்டோர் நடிக்க உள்ளனர். ஐதராபாத்தில் படப்பிடிப்பு நடப்பதாக இருந்தது. ஆனால் தற்போது அங்கு சினிமா தொழிலாளர்கள் ஸ்டிரைக் நடப்பதால் படத்தை திட்டமிட்டு முடிக்க முடியுமா என தெரியவில்லை. இதனால் டில்லி உள்ளிட்ட பகுதிகளில் இதன் படப்பிடிப்பை நடத்த எண்ணி உள்ளனர். இதற்கான ஜெயிலர் படக்குழு டில்லியில் முகாமிட்டுள்ளனர். இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் திடீரென டில்லி சென்றுள்ளார். ‛ஜெயிலர்' படம் தொடர்பான பணிகளை ரஜினியே நேரில் சென்று பார்வையிட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.