சூர்யவம்சம் 2ம் பாகம் உருவாகிறது? | தமிழில் அறிமுகமாகும் ராப் பாடகர் வேடன் | உடலை வருத்தும் சிம்பு | தனுஷ் பிறந்தநாளில் புதுப்பொலிவுடன் ரீ-ரிலீஸ் ஆகும் ‛புதுப்பேட்டை' | ஸ்டன்ட் காட்சியில் ஒருவர் உயிரிழப்பு : இயக்குனர் பா.ரஞ்சித் மீது வழக்கு பதிவு | ரஜினி ரசிகர்களுக்கு நேற்று முக்கியமான நாள் : அப்படி என்ன சிறப்பு தெரியுமா? | மகன் மீதான தாக்குதல் : மறைமுகமாக பதிலடி கொடுத்த விஜய்சேதுதி | அடுத்தடுத்து 3 படங்கள்... சம்பளம் 100 கோடி : சிவகார்த்திகேயன் மார்க்கெட் விரிவடைகிறது | ஜுலை 18ல் இத்தனை படங்கள் வெளியீடா….??? | மலேசியாவில் இருந்து சென்னை திரும்பினார் பாரதிராஜா : பாராட்டு விழா எப்போது? |
‛அண்ணாத்த' படத்திற்கு பின் ரஜினி நடிக்கும் 169வது படம் ‛ஜெயிலர்'. ‛பீஸ்ட்' படத்தை இயக்கிய நெல்சன் திலீப் குமார் இயக்குகிறார். அனிருத் இசையமைக்கிறார். ஐஸ்வர்யா ராய், பிரியங்கா மோகன், சிவராஜ் குமார், யோகி பாபு உள்ளிட்டோர் நடிக்க உள்ளனர். ஐதராபாத்தில் படப்பிடிப்பு நடப்பதாக இருந்தது. ஆனால் தற்போது அங்கு சினிமா தொழிலாளர்கள் ஸ்டிரைக் நடப்பதால் படத்தை திட்டமிட்டு முடிக்க முடியுமா என தெரியவில்லை. இதனால் டில்லி உள்ளிட்ட பகுதிகளில் இதன் படப்பிடிப்பை நடத்த எண்ணி உள்ளனர். இதற்கான ஜெயிலர் படக்குழு டில்லியில் முகாமிட்டுள்ளனர். இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் திடீரென டில்லி சென்றுள்ளார். ‛ஜெயிலர்' படம் தொடர்பான பணிகளை ரஜினியே நேரில் சென்று பார்வையிட இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.