ஸ்பெயின் கார் பந்தயத்தில் மூன்றாமிடம்: அஜித் அணிக்கு உதயநிதி பாராட்டு | ‛மா இண்டி பங்காரம்' படப்பிடிப்பு இம்மாதம் துவக்கம்: சமந்தா வெளியிட்ட தகவல் | துணிக்கடை திறப்பு விழாவில் கூட்ட நெரிசலில் சிக்கிக்கொண்ட பிரியங்கா மோகன்! | 5 வருடத்திற்கு பிறகு பாஸ்போர்ட்டை திரும்பப்பெற்ற ரியா சக்கரவர்த்தி | ‛காந்தாரா சாப்டர் 1' வெற்றியை ஜெயசூர்யா வீட்டில் கொண்டாடிய ரிஷப் ஷெட்டி | 10க்கு 9 எப்பவுமே லேட் தான் ; இண்டிகோ விமான சேவை மீது மாளவிகா மோகனன் அதிருப்தி | பிரம்மாண்ட விழா நடத்தி மோகன்லாலை கவுரவித்த கேரள அரசு | வதந்திகளில் கவனம் செலுத்தவில்லை: காஜல் அகர்வால் | தள்ளி வைக்கப்படுமா 'லவ் இன்ஷுரன்ஸ் கம்பெனி' ? | சூரியின் 'மண்டாடி' படப்பிடிப்பில் விபத்து: கேமரா கடலில் மூழ்கியது |
ஏஆர் முருகதாஸ் இயக்கத்தில், அனிருத் இசையமைப்பில், சிவகார்த்திகேயன், ருக்மணி வசந்த் மற்றும் பலர் நடிக்கும் படம் 'மதராஸி'. இப்படத்தின் தமிழக உரிமையை வேல்ஸ் நிறுவனம் வாங்கியுள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது. சுமார் 40 கோடி கொடுத்து அந்த உரிமையை வாங்கியுள்ளார்கள்.
சிவகார்த்திகேயன் நடித்து கடைசியாக வெளிவந்த 'அமரன்' திரைப்படம் தமிழகத்தில் 100 கோடிக்கும் அதிகமாக வசூலித்தது. அதை மனதில் வைத்து இந்தப் படத்தின் வியாபாரம் நடந்து வருவதாகச் சொல்கிறார்கள். படத்தை வேல்ஸ் நிறுவனம் வாங்கியிருந்தாலும் அவர்கள் கமிஷன் அடிப்படையில் படத்தை ரெட் ஜெயன்ட் நிறுவனத்திடம் கொடுத்துள்ளார்களாம்.
கிடைக்கும் வருவாயில் குறிப்பிட்ட சதவீதம் ரெட் ஜெயன்ட் நிறுவனத்திற்குச் சென்றுவிடும். இப்படித்தான் 'அமரன்' திரைப்படத்தின் வியாபாரமும் நடந்தது. சிவகார்த்திகேயன் நடிக்க உள்ள புதிய படம் ஒன்றை வேல்ஸ் நிறுவனம் தயாரிக்க உள்ளதாம். அதனால்தான், இந்தப் படத்தின் உரிமையை வாங்கியுள்ளதாகச் சொல்கிறார்கள்.