காந்தாரா சாப்டர்-1 : நேஷனல் கிரஷ் ஆன ருக்மணி வசந்த்! | மீண்டும் ஹிந்தியில் கால் பதிக்கும் ராஷி கண்ணா! | 82 கோடி வசூல் : தெலுங்கு ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த ரிஷப் ஷெட்டி! | பிரதமருடன் நடிகர் ராம் சரண் சந்திப்பு | செருப்பு அணிந்து அபுதாபி மசூதிக்குள் சென்றாரா சோனாக்ஷி சின்ஹா? | 3வது முறையாக ரஜினி- நெல்சன் கூட்டணி இணையப்போகிறது? | மலையாளிகளிடம் அங்கீகாரம் தந்தது 'ராவண பிரபு' படம் தான் ; ரீ ரிலீஸ் குறித்து வசுந்தரா தாஸ் மகிழ்ச்சி | ஒரிஜினலை விட டீப் பேக் வீடியோவுக்கு வியூஸ் அதிகம் ; ஜிமிக்கி கம்மல் நடிகை விரக்தி | பண்ணை வீடு திருட்டு சம்பவம் ; துப்பாக்கி லைசென்ஸுக்கு விண்ணப்பித்த சங்கீதா பிஜ்லானி | சுஹர்ஷ் ராஜ் நடித்த மியூசிக் வீடியோ: அனூப் ஜலோடா, பாடகி மதுஸ்ரீ பாராட்டு |
மிஷ்கின் இயக்கதில் வெளிவந்த பிசாசு படம் நல்ல வரவேற்பை பெற்றது. அவர் தற்போது பிசாசு படத்தின் 2ம் பாகத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தில் ஆண்ட்ரியா தான் நாயகி. நாயகன் என்று யாரும் இல்லை. பூர்ணா முக்கிய கேரக்டரில் நடிக்கிறார். இவர்கள் தவிர விஜய் சேதுபதி கவுரவ தோற்றத்தில் நடிக்கிறார்.
இதுகுறித்து மிஷ்கின் கூறியிருப்பதாவது: பிசாசு படத்தில் பிசாசு தான் முக்கிய கேரக்டர். அதுபோல இந்த படத்திலும் பிசாசு தான் முக்கிய கேரக்டர். அதில் அன்பு, பாசம், கருணை, சின்னதாக ஒரு மெசேஜ் இருப்பது போன்று இதிலும் இருக்கும், மற்றபடி இரண்டு படங்களுக்கும் வேறெந்த தொடர்பு இல்லை. அது வேறு கதை, இது வேறு கதை.
ஆண்ட்ரியாவின் கேரியரில் இது முக்கியமான படமாக இருக்கும். அந்த அளவிற்கு மிகவும் கஷ்டப்பட்டு நடித்திருக்கிறார். நான் அவரை கஷ்டப்படுத்தியிருக்கேன் என்றும் சொல்லலாம். இது பெரியவர்களுக்கான திகில் படம்தான். படம் பயமுறுத்தத்தான் செய்யும். அப்படியான கேட்டகிரியில் உருவாகும் படம்.
படத்தில் நாயகன் இல்லை. பூர்ணாவும், சந்தோஷ் பிரதாப்பும் முக்கியமான கேரக்டரில் நடிக்கிறார். விஜய்சேதுபதி நடிக்கும் கேரக்டர் பற்றி விரிவாக சொல்ல இயலாது. வியக்கத்தக்க ஒரு கேரக்டர் என்று மட்டும் சொல்லாம். 90 சதவிகித படப்பிடிப்புகள் முடிந்து விட்டது. என்றார்.
இந்த படத்தில் விஜய்சேதுபதி விஞ்ஞான முறைப்படி பேய், பிசாசுகளிடம் பேசுகிறவர். பேயோட்டும் நவீன மந்திரவாதி என்ற கேரக்டரில் நடிப்பதாகவும், இதுபோன்ற கேரக்டர்கள் ஹாலிவுட் படங்களில் அதிகம் வந்திருப்பதாகவும் கூறப்படுகிறது.