தனுஷை தொடர்ந்து கார்த்தியை இயக்கும் எச்.வினோத்? | 'புஷ்பா-2' சாதனையை முறியடித்த ரன்வீர் சிங்கின் 'துரந்தர்' | விஜய் அரசியலுக்கு வருவது சமூகத்தின் மீதான அக்கரையை காட்டுகிறது!- சொல்கிறார் கன்னட நடிகர் சுதீப் | ஜனநாயகனை விட பராசக்திக்கு கூடுதல் தியேட்டர்கள் ஒதுக்கப்பட்டுள்ளதா? - திருப்பூர் சுப்பிரமணியம் வெளியிட்ட தகவல் | நீலாம்பரி போல கதாபாத்திரங்கள் கிடைத்தால் நடிப்பேன் ; நமீதா விருப்பம் | நாய்களை விலைக்கு வாங்காதீர்கள்.. தத்தெடுங்கள் ; ஷாலினி பாண்டே கோரிக்கை | படங்களின் லாப நட்ட கணக்கை ஏன் வெளியே சொல்ல வேண்டும் ? நிவின்பாலி கேள்வி | விஜய் இதை பார்த்தால் நிச்சயம் ரசிப்பார் ; மோகன்லால் கொடுத்த கிரீன் சிக்னல் | கர்மா பற்றி எனக்கு பாடம் எடுக்காதீர்கள் ; நடிகர் விநாயகன் காட்டம் | 2025ல் வெளியான நேரடி தமிழ்ப் படங்கள் பட்டியல்... |

இயக்குனர் பிரசாந்த் நீல் இயக்கிய 'கேஜிஎப்' படத்தில் இரண்டு பாகங்கள் மற்றும் 'சலார்' படத்தின் முதல் பாகம் ஆகியவற்றில் ஒளிப்பதிவாளராக பணியாற்றியவர் ரூபன் கவுடா. இந்த படங்களின் வெற்றிக்கு இயக்குனர் பிரசாந்த் நீலுடன் உறுதுணையாக இருந்த இவர், அடுத்ததாக ஜூனியர் என்டிஆரை வைத்து பிரசாந்த் நீல் இயக்கும் படத்திலும் ஒளிப்பதிவாளராக பணியாற்றுகிறார். இந்த நிலையில் புவன் கவுடாவுக்கும் நிகிதா என்பவருக்கும் சமீபத்தில் திருமணம் நடைபெற்றது.
இந்த திருமணத்தில் இயக்குனர் பிரசாந்த் நீல் தனது மனைவி லிகிதாவுடன் கலந்து கொண்டார். ஆச்சரியமாக இந்த திருமண நிகழ்வில் நடிகை ஸ்ரீ லீலாவும் கலந்துகொண்டு தனது உற்சாகத்தை வெளிப்படுத்தியுள்ளார். அது மட்டுமல்ல, திருமணத்தில் எடுக்கப்பட்ட புகைப்படங்களையும் அவர் தனது சோசியல் மீடியாவில் பகிர்ந்து கொண்டுள்ளார்.
ஒளிப்பதிவாளர் புவன் கவுடா தெலுங்கில் சலார் என்கிற ஒரு படத்தில் மட்டுமே பணியாற்றிய நிலையில் அந்தப்படத்திலும் ஸ்ரீ லீலா நடித்திராத நிலையில் அவரது இந்த திருமணத்தில் அவர் கலந்து கொண்டிருப்பதால் பிரசாந்த் நீல் ஜூனியர் என்டிஆர் இணையும் படத்தில் கதாநாயகியாக நடிக்க இருக்கிறாரோ என்கிற யூகமும் தற்போது கிளம்பியுள்ளது. அதேசமயம் இந்த படத்தில் ருக்மணி வசந்த் தான் கதாநாயகியாக நடிக்கிறார் என்பது ஏற்கனவே அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு விட்டது என்பதும் குறிப்பிடத்தக்கது.