பிளாஷ்பேக் : சினிமா பார்க்கச் சொல்லி உருவான தனிப்பாடல் | 2025ல் காமெடிக்கு பஞ்சம்: தியேட்டரில் சிரிப்பு சத்தம் கேட்கல | அடுத்த படம் குறித்து ஏ.ஆர்.முருகதாஸ் வெளியிட்ட தகவல் | 'டாக்சிக்' படத்தில் கங்காவாக நயன்தாரா! | திரிஷ்யம் முதல் பாகத்தின் பார்முலாவில் உருவாகும் 3ம் பாகம் : ஜீத்து ஜோசப் தகவல் | நடிகர் பிரித்விராஜின் தார்யா ஹிந்தி படப்பிடிப்பு நிறைவு | 'தி பெட்' படம், ஹீரோ ஸ்ரீகாந்த், ஹீரோயின் சிருஷ்டி புறக்கணிப்பு | விவாகரத்துக்கு பிறகும் ஒற்றுமையாக வலம் வரும் பிரியதர்ஷன் லிசி தம்பதி | ரஜினியின் அடுத்த பட இயக்குனர்?: நீடிக்கும் குழப்பம் | ரூ.50 கோடி வசூல் கிளப்பில் இணைந்த சர்வம் மாயா |

தெலுங்கு நடிகரான மகேஷ் பாபு தற்போது ராஜமவுலி இயக்கி வரும் புதிய படத்தில் நடித்து வருகிறார். இந்த நிலையில் வருகிற ஆகஸ்ட் 9ம் தேதி அவர் தனது 50வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். அதனால் மகேஷ்பாபுவின் ரசிகர்கள் அவரது இந்த பிறந்த நாளை பிரமாண்டமாக கொண்டாட தயாராகி வருகிறார்கள்.
இந்நிலையில் அவரது பெங்களூரு ரசிகர்களோ, ஆகஸ்ட் 9ம் தேதி பெங்களூருவில் உள்ள பிருந்தா தியேட்டரில் ஒரு பிரமாண்ட விழாவை நடத்த திட்டமிட்டுள்ளார்கள். இந்த விழாவில் மகேஷ் பாபுவின் மகனான கட்டமனேனி கவுதம் கிருஷ்ணாவின் 35 அடி உயர பிரம்மாண்ட கட்அவுட் வைத்து அவருக்கு ஒரு விழா நடத்துகிறார்களாம். தற்போது மகேஷ் பாபுவின் மகன் அமெரிக்காவில் திரைப்படம் சார்ந்த படிப்பை படித்து வருவதோடு, தான் நடிக்கும் சில வீடியோக்களை அவ்வப்போது சமூக வலைதளங்களில் வெளியிட்டு வருகிறார். இன்னும் சில ஆண்டுகளில் அவர் வெள்ளித்திரையில் அறிமுகம் ஆவார் என்றும் கூறப்படுகிறது.